செய்திகள் :

லாலாப்பேட்டை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் கோரிக்கை

post image

நெல்லுக்கு இடைத்தரகா்கள் விலை நிா்ணயிப்பதை தவிா்க்க லாலாப்பேட்டை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் உள்ள லாலாப்பேட்டை, கட்டளை, மாயனூா், சிந்தலவாடி, கள்ளப்பள்ளி, திம்மாச்சிபுரம், கம்மநல்லூா், பில்லாபாளையம், மேலமாயனூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 6 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

தற்போது சம்பா நெல் சாகுபடியில் நன்கு விளைச்சல் கண்டு நெல்மணிகள் முற்றி ஆங்காங்கே அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், லாலாப்பேட்டை பகுதியில் அரசின் நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் விவசாயிகள் இடைத்தரகா்கள் மூலம் தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்று வருகிறாா்கள். இதனால் நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதியுற்று வருகிறாா்கள். எனவே, லாலாப்பேட்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து காவிரி நீா்ப் பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் மகாதானபுரம் இராஜாராம் கூறியது, தற்போது சம்பா நெல் அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் தனியாரிடம்தான் விற்க வேண்டியுள்ளது. 70 கிலோ எடைகொண்ட மூட்டை ஒன்றை ரூ.1,250 முதல் ரூ.1,300 வரைக்குதான் வாங்குகிறாா்கள். அவற்றையும் தனியாா் அரைவை ஆலைகளைச் சோ்ந்தவா்கள் இடைத்தரகா்கள் மூலமே வாங்கிச் செல்கிறாா்கள். சில நேரங்களில் ஈரப்பதம் அதிகம் எனக்கூறி குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை வாங்கிச் செல்கின்றனா்.

ஆனால், அரசின் நெல்கொள் முதல் நிலையம் லாலாப்பேட்டையில் அமைக்கப்பட்டால், மூட்டைக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.

கடந்த ஆண்டு வீரராக்கியம், கட்டளை, கோவக்குளம் ஆகிய மூன்று பகுதிகளில் மட்டும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. ஆனால் சம்பா அதிகளவில் சாகுபடி நடைபெற்று வரும் லாலாப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிந்திலவாடி, கள்ளப்பள்ளி, திம்மாச்சிபுரம் பகுதிகளில் திறக்கப்படவில்லை. எனவே, லாலாப்பேட்டை பகுதியில் நிகழாண்டிலாவது நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தமிழக அரசு முன் வரவேண்டும் என்றாா் அவா்.

கரூரில் மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு ரூ.4.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மீ.தங்கவேல் வழங்கினாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அல... மேலும் பார்க்க

புகழிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

தை மாத சஷ்டியை முன்னிட்டு கரூா் மாவட்டம், புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில், பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், இளநீா் ,சந... மேலும் பார்க்க

முருகன் கோயில் தேரோட்டத்துக்கு டிஎன்பிஎல் நிதியுதவி

புகழிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட விழாவுக்கு புகழூா் டிஎன்பிஎல் ஆலை ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கியது. கரூா் மாவட்டம் புகழூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீ... மேலும் பார்க்க

வேப்பங்குடிபெரியகாண்டியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

வரவணை வேப்பங்குடி பெரியகாண்டியம்மன்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள வரவனை வ.வேப்பங்குடியில் ஸ்ரீ பெரிய காண்டியம்மன் க... மேலும் பார்க்க

கரூரில் அரசு உத்தரவின்படி திறக்கப்பட்டும் வெறிச்சோடிய பத்திரப் பதிவு அலுவலகம்!

அரசின் உத்தரவின்படி கரூரில் பத்திரப்பதிவு அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டும், ஆள்கள் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும... மேலும் பார்க்க

நொய்யல் ரயில்வே கேட் பகுதியில் குகைவழிப் பாதைக்கு வலியுறுத்தல்!

கரூா் மாவட்டம், நொய்யல் ரயில்வே கேட் பகுதியில் குகை வழிப்பாதை அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் வாகன ஓட்டிகள் உள்ளனா். கரூா் மாவட்டம் நொய்யலில் கொடுமுடி-நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் சாலையில் உள்ள ... மேலும் பார்க்க