செய்திகள் :

லால்குடியில் நழுவிய வெற்றி; அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு வாரியத் தலைவர் பதவி!

post image

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக லால்குடி தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனால், அதிமுக வேட்பாளர் லீமா ரோஸிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இதனையடுத்து சீனியர் அரசியல் தலைவரான கு.ப.கிருஷ்ணனுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் பதவியை வழங்கியுள்ளார் தவெக தலைவர் விஜய்.

திருச்சி லால்குடியைச் சேர்ந்தவர் கு.ப.கிருஷ்ணன். 1991-1996 காலக்கட்டத்தில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் விவசாயத் துறை அமைச்சராக இருந்தார்.

2011-2016-ல் ஆலங்குடி எம்.எல்.ஏவாக இருந்தவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அமமுக-வை டிக் செய்தார்.

வாரியத் தலைவர் நியமன அறிக்கை
வாரியத் தலைவர் நியமன அறிக்கை

அங்கே, அவருக்கு நினைத்த வளர்ச்சி கிடைக்காததால், கடந்த ஜனவரி மாதம், தவெக-வில் இணைந்தார்.

சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட முதலில் அவருக்கு கொடுக்கப்பட்ட தொகுதி, முசிறி. ஆனால், அவர் விரும்பித் தேர்ந்தெடுத்த தொகுதி, லால்குடி.

ஆனால், லால்குடியில் இவர் வெற்றி பெற முடியவில்லை. முசிறியில் போட்டியிட்ட விக்னேஷ் வெற்றி பெற்றுவிட்டார்.

இந்த நிலையில், கிருஷ்ணனுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

'ரூ.20 லட்சம் வருமானம்; பெற்றோர் ஐஏஎஸ்... பிள்ளைகளுக்கு ஏன் இட ஒதுக்கீடு?' - உச்ச நீதிமன்றம் கேள்வி!

இந்தியாவின் இட ஒதுக்கீடுக் கொள்கையில் 'கிரீமிலேயர்' வரம்பை நிர்ணயிப்பது தொடர்பான மிக முக்கிய வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.கர்நாடக மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட சமூகமான... மேலும் பார்க்க

'அதிகாரமின்றி நிதானம் இழக்கும் திமுக!' - ஓர் அலசல்!

தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் முழுமையாக முடிந்திருக்கிறது. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்கு பிறகு ஒரு கூட்டணி அமைச்சரவை அமைந்திருக்கிறது. காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள்... மேலும் பார்க்க

பக்ரீத்: 'நோ' பசு, கன்றுக்குட்டி, ஒட்டகம் வெட்டுதல் - டெல்லி அரசு ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

வருகிற 28-ம் தேதி, பக்ரீத் பண்டிகை வர உள்ளது. இதை முன்னிட்டு, டெல்லியில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி வளர்ச்சி அமைச்சர் கபில் மிஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். "பக்ரீத் ப... மேலும் பார்க்க

தென்காசி: கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர்? - மனமுடைந்து விஷமருந்திய விவசாயி; உறவினர்கள் குற்றச்சாட்டு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தளவாய் புறம் வேதக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். விவசாயியான இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்துள்ளது. இது தொடர்பா... மேலும் பார்க்க

கடலூர்: ரியல் எஸ்டேட் பிசினஸ் `டு’ அமைச்சர்; வீட்டுவசதித் துறையை வசப்படுத்திய தவெக ராஜ்குமார் யார்?

தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறி மாறி வெற்றி பெற்ற தொகுதிகளில் ஒன்று கடலூர். இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் ராஜேந்திரனும், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் எம்... மேலும் பார்க்க