செய்திகள் :

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த போராட்டம் - இம்முறை இந்தியா பக்கம் திரும்புவது ஏன்?

post image

2024-ம் ஆண்டு, ஜூலை மாதம் வங்கதேசமே கலவரப்பூமியாக இருந்தது.

இட ஒதுக்கீடு, ஊழல், கொலைகள் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வங்கதேசத்தின் இளைஞர்கள் பட்டாளம் அப்போதைய வங்கதேச அரசை எதிர்த்துப் போராடியது. இந்தப் போராட்டம் அந்த நாடு முழுவதும் பரவியது.

இதனையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவிற்கு ஓடி வந்தார் அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா.

அதன் பின், நிலைமை ஓரளவு சரியாகி, வங்கதேசத்தின் இடைக்கால பிரதமராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றார்.

பின்னர், வங்கதேசம் மெல்ல மெல்ல இயல்பிற்குத் திரும்பத் தொடங்கியது. தற்போது வங்கதேசம் நாடாளுமன்ற தேர்தலைக் கூட சந்திக்க தயாராகி இருந்தது.

வங்கதேச போராட்டம்
வங்கதேச போராட்டம்

ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொலை

இந்த நிலையில், 2024-ம் ஆண்டு நடந்த போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கடந்த 12-ம் தேதி டாக்காவில் சுடப்பட்டார். அவரது நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், சிங்கப்பூர் அழைத்து செல்லப்பட்டார். அங்கே சிகிச்சைக்கு பலனில்லாமல் இறந்துவிட்டார்.

இது தான் தற்போதைய கலவரத்திற்கு காரணம். ஷெரீப் இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை, கொள்களைக் கொண்டவர். இவரைக் கொன்றது இந்தியா தான்... ஷெரீப்பை சுட்டவர் இந்தியாவிற்கு சென்றுவிட்டார் என்று வங்கதேசம் குற்றம் சாட்டுகிறது.

திபு சந்திர தாஸ் எரித்து கொலை

இதற்கு பதிலடி தருவதாக, இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாக வங்கதேசத்தில் வாழும் இந்து மதத்தை சேர்ந்த திபு சந்திர தாஸை எரித்து கொன்றனர் போராட்டக்காரர்கள். இதையடுத்து, இந்தியா, வங்கதேசத்திற்கு இடையே விரிசல்கள் பெரிதாகத் தொடங்கியுள்ளன.

ஏற்கெனவே யூனுஸ் பாகிஸ்தான், சீனா பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்கிறார்... பாகிஸ்தானை ஆதரிக்கிறார் என்கிற அதிருப்தி யூனுஸ் மீது இந்தியாவிற்கு இருக்கிறது. இந்த நிலையில் தான், ஷெரீப் பிரச்னை நடந்தது.

வங்கதேச போராட்டம்
வங்கதேச போராட்டம்

இன்னொரு தலைவர்...

நேற்று, முஹம்மது மொதலேப் சிக்தர் - வங்கதேசத்தை சேர்ந்த இன்னொரு தலைவர் தாக்கப்பட்டுள்ளார். இந்தக் கோபத்தையும் இந்தியா பக்கம் திருப்பி உள்ளது வங்கதேசம்.

இதனால், தற்போது வங்கதேசத்தில் இந்து மதத்தினருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியாவில் டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராகுல் காந்தி நாளை நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகிறார்.செல்வப்பெருந்தகை பள்ளி விழா ... மேலும் பார்க்க

கோவை டு டெல்லி; குடியரசு தலைவர் தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா!

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சாமுண்டேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருணமாகி 2 மகன்கள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளி ஆவார்.இவர்கள் இருவரும் ... மேலும் பார்க்க

TVK Vijay: 7 மணி நேர விசாரணை: சிபிஐ-யிடம் விஜய் கொடுத்த வாக்குமூலம் என்ன?

செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முன் ஆஜரானார். காலை 10.30 ... மேலும் பார்க்க

`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை "வெனிசுலாவின் தற்காலிக அதிபர்" எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில்... மேலும் பார்க்க

அதிமுக மீதான அதிருப்தி; திமுக கூட்டணியில் ராமதாஸா? - சூரியக் கட்சிக்கு ப்ளஸா... மைனஸ்ஸா?!

தனக்கு முன்பாக மகன் அன்புமணியை அழைத்துக் கூட்டணியை இறுதி செய்ததில் என்.டி.ஏ-வின் மீதும் எடப்பாடியின் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.அதிருப்தியில் ராமதாஸ்பாமக நிறுவனர் ரா... மேலும் பார்க்க

ADMK: ``ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி" - நடிகை கௌதமி ஓப்பன் டாக்!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் ... மேலும் பார்க்க