செய்திகள் :

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த போராட்டம் - இம்முறை இந்தியா பக்கம் திரும்புவது ஏன்?

post image

2024-ம் ஆண்டு, ஜூலை மாதம் வங்கதேசமே கலவரப்பூமியாக இருந்தது.

இட ஒதுக்கீடு, ஊழல், கொலைகள் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வங்கதேசத்தின் இளைஞர்கள் பட்டாளம் அப்போதைய வங்கதேச அரசை எதிர்த்துப் போராடியது. இந்தப் போராட்டம் அந்த நாடு முழுவதும் பரவியது.

இதனையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவிற்கு ஓடி வந்தார் அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா.

அதன் பின், நிலைமை ஓரளவு சரியாகி, வங்கதேசத்தின் இடைக்கால பிரதமராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றார்.

பின்னர், வங்கதேசம் மெல்ல மெல்ல இயல்பிற்குத் திரும்பத் தொடங்கியது. தற்போது வங்கதேசம் நாடாளுமன்ற தேர்தலைக் கூட சந்திக்க தயாராகி இருந்தது.

வங்கதேச போராட்டம்
வங்கதேச போராட்டம்

ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொலை

இந்த நிலையில், 2024-ம் ஆண்டு நடந்த போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கடந்த 12-ம் தேதி டாக்காவில் சுடப்பட்டார். அவரது நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், சிங்கப்பூர் அழைத்து செல்லப்பட்டார். அங்கே சிகிச்சைக்கு பலனில்லாமல் இறந்துவிட்டார்.

இது தான் தற்போதைய கலவரத்திற்கு காரணம். ஷெரீப் இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை, கொள்களைக் கொண்டவர். இவரைக் கொன்றது இந்தியா தான்... ஷெரீப்பை சுட்டவர் இந்தியாவிற்கு சென்றுவிட்டார் என்று வங்கதேசம் குற்றம் சாட்டுகிறது.

திபு சந்திர தாஸ் எரித்து கொலை

இதற்கு பதிலடி தருவதாக, இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாக வங்கதேசத்தில் வாழும் இந்து மதத்தை சேர்ந்த திபு சந்திர தாஸை எரித்து கொன்றனர் போராட்டக்காரர்கள். இதையடுத்து, இந்தியா, வங்கதேசத்திற்கு இடையே விரிசல்கள் பெரிதாகத் தொடங்கியுள்ளன.

ஏற்கெனவே யூனுஸ் பாகிஸ்தான், சீனா பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்கிறார்... பாகிஸ்தானை ஆதரிக்கிறார் என்கிற அதிருப்தி யூனுஸ் மீது இந்தியாவிற்கு இருக்கிறது. இந்த நிலையில் தான், ஷெரீப் பிரச்னை நடந்தது.

வங்கதேச போராட்டம்
வங்கதேச போராட்டம்

இன்னொரு தலைவர்...

நேற்று, முஹம்மது மொதலேப் சிக்தர் - வங்கதேசத்தை சேர்ந்த இன்னொரு தலைவர் தாக்கப்பட்டுள்ளார். இந்தக் கோபத்தையும் இந்தியா பக்கம் திருப்பி உள்ளது வங்கதேசம்.

இதனால், தற்போது வங்கதேசத்தில் இந்து மதத்தினருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியாவில் டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

விபி-ஜி ராம் ஜி: "உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே பழனிசாமி.!" - ஸ்டாலின்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மத்திய பாஜக அரசு, வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு (விபி -ஜி ராம் ஜி) சட்ட மசோதாவாக மாற்றி நாடாளுமன்றத்தில் த... மேலும் பார்க்க

"எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோஅம்!" - கூட்டணி குறித்து பியூஸ் கோயல்

மத்திய அமைச்சரும், பாஜகவின் தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் இன்று (டிச.23) தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பாக முதற்கட்ட ஆலோசனையை மேற்கொள்ள சென்னை வந்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி... மேலும் பார்க்க

TVK: அமைச்சர் சம்பந்திக்கு வாய்ப்பு? பட்ட அவமானம்தான் காரணமா? - அஜிதாவுக்கு மறுக்கப்படுவது ஏன்?

கட்சி தொடங்கி, இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்கவில்லை. அதற்குள் மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார், பதவி நீக்கம், கட்சி அலுவலகத்தையே முற்றுகையிடும் தொண்டர்கள் என தவெக சம்பவங்கள் தொடர்கதையாகி வருக... மேலும் பார்க்க

தேர்தல் அறிக்கை: `கவர்ச்சிகர திட்டங்கள் இல்லை; முன்னேற்ற திட்டங்களுக்குத்தான் முன்னுரிமை'- கனிமொழி

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வரும் 29-ஆம் தேதி மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டுப் பணிகளை அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளரும், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்ப... மேலும் பார்க்க

இந்தியா, நியூசிலாந்து இடையே முடிவான ஒப்பந்தம்; எந்தெந்த துறைக்கு லாபம்? உள்ள ஒரே ஒரு சிக்கல் என்ன?

'இந்தியா - நியூசிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நேற்று முடிவாகி உள்ளது' - இது தான் இன்று எந்தப் பக்கம் திரும்பினாலும், அதிகம் பேசப்படும் ஒன்று. இந்தியா - நியூசிலாந்து பேச்சுவார்த்தை இந்தியா, ... மேலும் பார்க்க

TVK : 'காரை மறித்த பெண் நிர்வாகி; நிற்காமல் சென்ற விஜய்! - என்ன நடந்தது?

பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய்யின் காரை பெண் நிர்வாகி ஒருவர் மறிக்க, நிற்காமல் விஜய்யின் கார் கடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.Ajithaதவெக சார்பில் ஏற்கெனவே 120 ... மேலும் பார்க்க