செய்திகள் :

வங்கதேச எல்லையில் தொடரும் ஊடுருவல்; பாம்பு, முதலைகளைப் பயன்படுத்தப்போகும் எல்லைப் பாதுகாப்புப் படை

post image

பங்களாதேஷில் இருந்து அடிக்கடி ஏராளமானோர் இந்தியாவிற்குள் ஊடுருவி வருகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எல்லைப் பாதுகாப்புப் படையினரைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

ஊடுருவல்காரர்கள் பிரச்னை மேற்கு வங்க தேர்தலில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. பங்களாதேஷுடன் இந்தியா 4,096 கிலோ மீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இதில் 175 கிலோமீட்டர் தூரம் ஆற்றங்கரையைக் கொண்டது ஆகும். இவ்வளவு தூரத்திற்கு வேலி அமைப்பது என்பது முடியாத காரியமாக இருக்கிறது. இதனால் பாதுகாப்பு குறைவாக இருக்கும் இடத்தில் ஊடுருவல் அதிக அளவில் நடந்து வருகிறது.

எனவே ஊடுருவலைக் கட்டுப்படுத்த எல்லை பாதுகாப்பு படையினர் மாற்று வழியைத் தேட ஆரம்பித்துள்ளனர். அதிக அளவில் ஆறு மற்றும் அதனையொட்டிய சதுப்பு நிலப்பகுதி வழியாக இது போன்ற ஊடுருவல் நடப்பதால் அப்பகுதியில் பாம்பு மற்றும் முதலைகளை அதிக அளவில் விட்டு இந்த ஊடுருவலைக் கட்டுப்படுத்துவது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் பரிசீலித்து வருகின்றனர்.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்னும் பரிசீலனை மட்டத்தில் இருந்தாலும், எதிர்காலத்தில் இதனை அமல்படுத்தலாம் என்பதில் எல்லை பாதுகாப்புப் படையினர் உறுதியாக இருக்கின்றனர்.

மற்ற பகுதியில் ட்ரோன்கள், சென்சார்கள், கேமராக்கள் மற்றும் பிற நவீன பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டு எல்லைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊடுருவல் மட்டுமல்லாது கடத்தல் சம்பவங்களும் எல்லையில் அதிக அளவில் நடக்கிறது.

இந்த ஆண்டு ஜனவரியில், தெற்கு வங்க எல்லைப் பாதுகாப்புப் படையின் 32வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள், மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் நடத்திய ஒரு அதிரடி நடவடிக்கையில், ஒரு தங்கக் கடத்தல்காரரை இடைமறித்து, சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர்.

கடந்த நவம்பரில் நாடியா மாவட்டத்தில் எல்லை தாண்டிய கடத்தல் முயற்சியைத் தடுக்க எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் முயன்றபோது, ​​ஒரு வங்கதேசக் கடத்தல்காரர் தவறுதலாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். கடத்தல்காரர்கள் உள்ளூர் ஆயுதங்களைக் கொண்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதன் விளைவாகத் தவறுதலாகத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அதில் ஒரு கடத்தல்காரர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

`சாதி, மதமற்றவர்' சான்றிதழ்; நடைமுறை எதார்த்தமும் சட்டச் சிக்கல்களும் - ஓர் ஆழமான அலசல்!

நடிகர் பார்த்திபன் ஹைதராபாத் நிகழ்ச்சியில் தனது சாதி குறித்துப் பேசியது விமர்சனத்திற்குள்ளான நிலையில், தான் ஒரு 'சாதி, மதமற்றவர்' என அறிவிக்கக் கோரி வேளச்சேரி வட்டாட்சியரிடம் மனு அளித்தார். பின்னர் இத... மேலும் பார்க்க

'Full' பாதுகாப்பு: இனி யாரும் ஆன்லைன் மோசடியில் ஏமாறமாட்டார்கள்?' - RBI-ன் புதிய முயற்சி

தொழில்நுட்பம் அப்டேட் ஆக... ஆக, இன்னொரு பக்கம், ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும், வகைகளும் நீண்டுகொண்டே போகின்றன. இந்த மோசடிகளுக்குப் பெரியவர்கள், சிறியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என எந்த வித... மேலும் பார்க்க

திண்டுக்கல்: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாகன பேரணி; மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு | Photo Album

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குகளை உறுதி செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சரவணன் பல்வேறு விதமான விழிப்புணர்வு பிரசாரங்க... மேலும் பார்க்க

20 பேர் பலியான சத்தீஸ்கர் ஆலை விபத்து: வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வால் மீது வழக்குப் பதிவு!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்தி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா மின் நிலையத்தின் கொதிகலனில் (boiler) ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக, வேதாந்தா ரிசோர்சஸ்... மேலும் பார்க்க

VIP பணிகளுக்காக முடக்கப்பட்ட ஆம்புலன்ஸ்?: 'பறிபோன ஊடகவியலாளர் உயிர்' - பகீர் குற்றச்சாட்டு

மத்தியப் பிரதேசத்தில் 'ஸ்வர்ண் மங்கலம்' (Swarn Mangalam) என்ற மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் தீபக் சோனி. இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று ரைசெனில் நடைபெற்ற ஒரு விவசாயக் கண்காட்சியில் கலந்துகொள்... மேலும் பார்க்க

சரிவிலிருந்து இந்திய ரூபாய் மதிப்பு மீண்டது எப்படி? போர் நிறுத்தம் மட்டும் காரணமல்ல

சில மாதங்களாகவே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டு இருந்தது.கடந்த 30-ம் தேதி, இந்திய ரூபாயின் மதிப்பு இன்ட்ரா டேயில் ரூ.95-ஐ கூட தொட்டது. இது வரலாற்றின் புதிய வீழ்ச்சி. இந்த நிலைமையெல்லாம் இப்போது... மேலும் பார்க்க