செய்திகள் :

'வயிற்றிலுள்ள குழந்தைக்கு தந்தை யார்?' - தற்கொலைக்கு முன் போபால் பெண்ணுடன் கணவன் வாக்குவாதமா?

post image

போபாலைச் சேர்ந்த த்விஷா சர்மா என்ற பெண் கடந்த 12ம் தேதி தனது கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். புனே முன்னாள் அழகியான த்விஷா ஒரு எம்.பி.ஏ.பட்டதாரி ஆவார். அவர் தனது கணவனுடன் சமூக வலைத்தளம் மூலம் முதலில் அறிமுகமானார்.

அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சர்மாவின் தற்கொலை பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சர்மாவின் கணவர் சமர்த்சிங் ஒரு வாரமாகத் தலைமறைவாக இருந்தார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சர்மா கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டி, உடலை இரண்டாவது முறையாகப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதற்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழு இந்தப் பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் தற்போது கைது செய்யபட்ட சர்மாவின் கணவரிடம் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

கணவருடன் த்விஷா
கணவருடன் த்விஷா

கோர்ட் சர்மாவின் கணவர் சமர்த் சிங்கிடம் 7 நாள்கள் விசாரணை நடத்த அனுமதி கொடுத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், ​​சமர்த் சிங் போலிஸாரிடம், கர்ப்பம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு, த்விஷா சர்மா தனது பெற்றோரின் வீட்டிற்குச் செல்ல விரும்புவதாகவும், இல்லற வாழ்க்கையை வாழ முடியாது என்றும் கூறினார்.

அவர் அன்று மாலை டெல்லிக்கு விமானத்தில் சென்று நொய்டா வீட்டிற்குச் சென்றார். பலமுறை வற்புறுத்தலுக்குப் பிறகு, அவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் ஏப்ரல் 23 அன்று போபாலுக்குத் திரும்பினார் என்று குறிப்பிட்டார்.

மேலும் சமர்த் சிங் ஏற்கனவே ஏப்ரல் 24 ஆம் தேதி பெங்களூருக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்ததாகவும், த்விஷா ஷர்மா ஆரம்பத்தில் அவருடன் வர தயாராக இருப்பதாகவும் கூறினார். பின்னர், த்விஷா சர்மா பெங்களூரு வர மறுத்ததாகவும், அஜ்மீரில் உள்ள தனது சகோதரரிடம் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக விசாரணை அதிகாரிகளிடம் சமர்த் சிங் கூறியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு த்விஷா சர்மா அடிக்கடி தனது தாயாருக்கு மெசேஜ் மூலம் தன்னை வந்து அழைத்து செல்லும்படி தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்த அன்று நடந்தது குறித்து த்விஷாவின் சகோதரர் ஹர்ஷித் சர்மா கூறுகையில், ''அன்று இரவு 10.05 மணிக்கு த்விஷா சர்மா தாயாருக்கு போன் செய்து பேசியுள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென சமர்த் சிங் அறைக்குள் நுழைந்தார்.

உடனே த்விஷா சர்மா போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார். அதன்பிறகு அவரைத் தொடர்பு கொள்ள பல முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. இது தவிர சமர்த் சிங் அல்லது அவரது தாயாரும் போனை எடுத்து பேசவில்லை. பல மணி நேரத்திற்குப் பிறகு சமர்த் சிங் தாயார் கிரிபாலா சிங் போன் மூலம் எங்கள் தாயாரிடம் த்விஷா இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 17 ஆம் தேதி த்விஷா ஷர்மாவின் கர்ப்பம் உறுதிசெய்யப்பட்ட பிறகு, அவரது கணவர் சமர்த் சிங், அவரது வயிற்றில் உள்ள குழந்தையின் தந்தையைப் பற்றி மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பியது த்விஷாவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலை செய்ததாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது சமர்த் சிங் வாக்குமூலத்தில் வேறு மாதிரியாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏழு நாள்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சமர்த் சிங், சுமார் இரண்டு மணி நேரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். முன்னதாக ஜபல்பூரில் சரணடைவதற்காகச் சென்ற அவர், அங்கு சரணடைவதற்கு முன்பே கைது செய்யப்பட்டு போபாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மறுநாளே இந்த விசாரணை நடைபெற்றது. சர்மா உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நாளிலிருந்து சமர்த் சிங் தலைமறைவாக இருந்து வந்தார்.

suicide
suicide

இதற்கிடையில், அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதியான அவரது தாயார் கிரிபாலா சிங் என்பவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்த போதிலும், தனது மருமகளின் மரணம் தொடர்பான விசாரணையில் போலீஸ் அறிவிப்புகளைப் புறக்கணித்ததாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மைசூரு டு கோவை: பூண்டு லோடில் பதுக்கி கொண்டு வரப்பட்ட 440 கிலோ குட்கா மூட்டைகள் - பிடிபட்டது எப்படி?

தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள குட்கா, பான் மசாலா பொருள்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. கர்நாடகாவில் இருந்து கிலோ கணக்கில் குட்கா பொருள்களை பதுக... மேலும் பார்க்க

திருத்தணி: சிறுவன் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு உண்மையைக் கூறிய அம்மா - தம்பதி சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு என்ற இடத்தில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவர் வேலை ச... மேலும் பார்க்க

தந்தையின் வீட்டைக் காலி செய்ய கோர்ட் உத்தரவு; கோபத்தில் 82 வயது தந்தையைக் குத்திக்கொன்ற மகன்

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் வசித்தவர் ஜாபர் பட்டேல்(82). ஒய்வுபெற்ற அரசு ஊழியரான ஜாபர் பட்டேலை அவரது மகன் அப்துல் ரஹ்மான் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி அடித்து உதைத்து திட்... மேலும் பார்க்க

`சல்மான் கானுடன் பழகுபவர்களுக்கு எச்சரிக்கை!' - ஜிம் உரிமையாளரை சுட்டுக்கொன்ற பிஷ்னோய் கேங்க்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பிஷ்னோய் கூட்டத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பைக்கில் மோதிய சரக்கு வாகனம்; தாத்தா, பேரப்பிள்ளைகள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்துள்ள ஓச்சேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 60). இவர், அதே பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்தார். இவரின் பேரப்பிள்ளைகள் அஜய் (9), குணஸ்ரீ... மேலும் பார்க்க

மும்பை: அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண்ணிடம் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சா; விமான நிலையத்தில் கைது

மும்பையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஹன்சா சன்னி. இவர் கடந்த ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் வந்தார். அவர் பாங்காக் சென்றுவிட்டு மும்பைக்குத்... மேலும் பார்க்க