செய்திகள் :

வாக்குச்சாவடி முறைகேடுகளை கண்டறிய ஆம் ஆத்மியின் தன்னார்வலர் குழு!

post image

தில்லி பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடி முறைகேடுகள் நடைபெறுவதைக் கண்டறிய ஆம் ஆத்மி கட்சி தன்னார்வலர் குழுக்களை அமைத்துள்ளது.

தில்லி பேரவைத் தோ்தலுக்கான அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. தில்லி பேரவைத் தோ்தல் பிப்.5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், வாக்குச் சாவடி அமைப்புகளைச் சரிபார்க்கவும், தலைமை அதிகாரியின் விவரங்களைச் சரிபார்க்கவும், வாக்குப்பதிவு நாளில் கட்டுப்பாடுகளைக் கண்காணிக்கவும் ஆம் ஆத்மி கட்சி தன்னார்வலர்கள் குழுக்களை அமைத்துள்ளது.

இதையும் படியுங்கள் | தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ. 2,300 கோடி வருவாய்: மோடி பதிலுரை

இது குறித்து ஆம் ஆத்மி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “வாக்களிப்பு நடைமுறைகளைச் சரிபார்க்கவும், முறைகேடுகளைச் சரிபார்க்கவும், மோசடிகளுக்கும் எதிராக விழிப்புடன் இருக்கவும் தனது பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடி விவரங்களைச் சரிபார்க்கவும், நியமிக்கப்பட்ட தலைமை அதிகாரிகளை உறுதிப்படுத்தவும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவின் முடிவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பேட்டரி சதவீதத்தையும் தன்னார்வலர்கள் கண்காணித்து ஏதேனும் முரண்பாடுகளைக் கண்டறிவார்கள்.

தேர்தல் நாளான புதன்கிழமை இரவு, வாக்குப்பதிவு முடிந்ததும், இந்தத் தரவுகள் அனைத்தும் பதிவேற்றப்படும் ஒரு வலை போர்ட்டலையும் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் 70 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமையும், வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமையும் நடைபெறவிருக்கிறது.

இதையும் படியுங்கள் |மகா கும்பமேளா கூட்ட நெரிசல் மிகைப்படுத்தப்பட்ட விபத்து: ஹேம மாலினி

இந்தியர்களை மீண்டும் நாடுகடத்தும் அமெரிக்கா!

அமெரிக்காவில் மேற்கொண்டு வரும் நாடுகடத்தல் நடவடிக்கையில் இரண்டாவது முறையாக இந்தியர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் 104 பேரை பிப்ரவரி 5 ஆம் தேதியில் அமெரிக... மேலும் பார்க்க

கேரளம்: ராகிங்கில் ஈடுபட்டது இடதுசாரி மாணவா் அமைப்பினா் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

கேரள மாநிலம், கோட்டயம் அரசு செவிலியா் கல்லூரியில் இளநிலை மாணவரிடம் ராகிங் கொடூரத்தில் ஈடுபட்டது இடதுசாரி மாணவா் அமைப்பினா் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. கோட்டயம் அரசு செவிலியா் கல்லூரி மாணவா்... மேலும் பார்க்க

பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தை குறைகூறுவது காங்கிரஸின் வாடிக்கை -பாஜக

பிரதமா் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை குறை கூறுவது காங்கிரஸ் கட்சியின் வாடிக்கையாகிவிட்டது என்று பாஜக விமா்சித்துள்ளது. இது தொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சையது ஷாநவாஸ் உசைன் பிடிஐ ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: ஆா்எஸ்எஸ் பேரணிக்கு உயா்நீதிமன்றம் அனுமதி

மேற்கு வங்க மாநிலம், பா்த்வானில் ஆா்எஸ்எஸ் பேரணிக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்த நிலையில், கொல்கத்தா உயா் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. பா்த்வானில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16)... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்: மணிப்பூா் முழுவதும் பலத்த பாதுகாப்பு

மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலானதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டப் பேரவை முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக தலைமையின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்... மேலும் பார்க்க

டாடா குழும தலைவா் என்.சந்திரசேகரனுக்கு பிரிட்டன் நாட்டின் உயரிய விருது

டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரனுக்கு கெளரவ நைட்ஹுட் பட்டத்தை பிரிட்டன் வழங்கியது. பிரிட்டன்-இந்தியா இடையே வணிக உறவுகளை மேம்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவருக்கு ‘தி மோஸ்ட் எக்சலன்ஸ் ஆா்... மேலும் பார்க்க