செய்திகள் :

வாலாஜாபேட்டை: தாசில்தார் காருக்கு தீ வைப்பு; நள்ளிரவில் பீதியைக் கிளப்பிய இளைஞன் கைது

post image

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தாசில்தார் அலுவலகத்தின் போர்டிகோ வாயிலில் நிறுத்திவைக்கப்பட்ட தாசில்தார் பயன்படுத்தும் `அரசு வாகனம்’ நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

தீ மளமளவெனப் பரவிய பிறகே, தாசில்தார் அலுவலகத்தின் இரவுநேரக் காவலர் பார்த்திருக்கிறார். தீயை அணைக்க முடியாததால், உடனடியாக ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிர்ச்சிக் காத்திருந்தது.

தாசில்தார் காருக்கு தீ வைத்த இளைஞன்
தாசில்தார் காருக்கு தீ வைத்த இளைஞன்

கார் தானாகத் தீப்பற்றி எரியவில்லை. இளைஞன் ஒருவன் முகத்தை மறைத்தபடி, காரைக் கொளுத்திவிட்டு தப்பி ஓடியிருப்பது தெளிவாகப் பதிவாகியிருந்தது. அந்தக் காட்சிகளைக்கொண்டு, வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

விசாரணையில், காருக்குத் தீ வைத்த இளைஞனை அடையாளம் கண்டு கைது செய்திருக்கின்றனர். அந்த இளைஞன் யார், என்னக் காரணத்துக்காக தாசில்தாரின் காருக்குத் தீ வைத்தான் என போலீஸார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

"கோவை சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை" - ஐ.ஜி ரம்ய பாரதி அதிர்ச்சித் தகவல்

கோவை சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி ரம்ய பாரதி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்ப... மேலும் பார்க்க

கோவை சிறுமி கொலை: சாக்லேட் தந்து சிறுமியை அழைத்து சென்று கொலை; விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்ற நிலையில், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த சிறு... மேலும் பார்க்க

கரூர்: விவசாயி மீது நாட்டு துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு; 'நிலப் பிரச்னையா?' - போலீஸ் விசாரணை

கரூர் அருகே நாட்டு துப்பாக்கியால் விவசாயி சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சேவாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் கருணகிரி (48). விவசாயத் தொழிலாளியான இவர... மேலும் பார்க்க

ஹரியானா: மைனர் பெண்ணுடன் காதல்; பேட்மிண்டன் வீரரைச் சித்ரவதை செய்து கொன்ற பெண்ணின் குடும்பம்?

ஹரியானா மாநிலம் பிவாடி அருகில் உள்ள சைத்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மோனு. பேட்மிண்டன் வீரரான மோனு ஹரியானாவில் மாநில அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பரிசு... மேலும் பார்க்க

கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கு: 2 பேர் கைது; ஒருவருக்கு கை, கால் முறிவு!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, நடப்புக் கல்வியாண்டில் 5ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்ற நிலையில், வெகுநேர... மேலும் பார்க்க

கோவை: காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு – பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? - போலீஸ் விசாரணை!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, நடப்புக் கல்வியாண்டில் 5ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக ... மேலும் பார்க்க