தனியாா் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகள்..! நெகிழ்ந்த சிஎஸ்கே வீரர்!
சிஎஸ்கே வீரர் டெவால்டு ப்ரீவிஸ் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான டெவால்டு ப்ரீவிஸ் மாற்று வீரராக சிஎஸ்கே அணியில் இணைந்தார்.
சிறப்பாக விளையாடி சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் பிரச்னையை தீர்த்துள்ளார்.
ரசிகர்களிடம் மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளார். அவர் களத்துக்கு வரும்போது 125 டெசிபலில் சிஎஸ்கே ரசிகர்கள் சப்தமிட்டார்கள்.
நடப்பு சீசனில் 4 போட்டிகளில் 163.64 ஸ்டிரைக் ரேட்டில் 126 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் இந்தியா-பாகிஸ்தான் போரினால் ஒரு வாரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டு வீரர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள்.
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறியதாவது:
சென்னை அணி, பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், அற்புதமான சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி.
சேப்பாக்கம் திடல் மிகவும் கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது.
இந்தியா முழுவதும் கிடைத்த ஆதரவுக்கு நன்றி. இந்தமுறை இந்தியாவில் நான் இருந்த நேரம் இதயத்துக்கு நெருக்கமானது. சென்னையில் ஏற்பட்ட அனுபவம் காலத்துக்கும் மறக்காது. விரைவில் சந்திப்போம் எனக் கூறியுள்ளார்.