செய்திகள் :

விஜய்க்காக அலகு குத்தி, கிரேனில் தொங்கி சாகசம்; தவெக தொண்டர் கைது; இன்ஸ்பெக்டரைக் கண்டித்த டிஐஜி

post image

வேலூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டார். சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக வேலூர் வந்த விஜய்க்கு வழிநெடுக த.வெ.க தொண்டர்களும், ரசிகர்களும் வரவேற்பு கொடுத்தனர்.

வெட்டுவாணம் சந்திப்புப் பகுதியில் த.வெ.க-வினர் திரண்டிருந்தபோது, விஜய்யின் அதிதீவிர தொண்டரான ஏழுமலை என்பவர் முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கி சாகசம் செய்தபடி விஜய்க்கு மாலை அணிவிப்பதற்காக வந்திருந்தார்.

இதற்கு காவல்துறை தரப்பில் இருந்து ஏழுமலை எந்தவித அனுமதியும் பெறவில்லை. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அலகு குத்தி, கிரேனில் தொங்கி சாகசம்
அலகு குத்தி, கிரேனில் தொங்கி சாகசம்

இதையடுத்து, த.வெ.க தொண்டர் ஏழுமலை மற்றும் கிரேன் உரிமையாளர் முனிரத்தினம் ஆகிய இருவர் மீதும் பள்ளிகொண்டா போலீஸார் ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ததோடு கிரேனையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

இந்த நிகழ்வின்போது, அங்கு பணியில் இருந்த பாகாயம் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி அவரை `காத்திருப்போர் பட்டியலில்’ வைக்க வேலூர் சரக டி.ஐ.ஜி தர்மராஜன் உத்தரவிட்டிருக்கிறார்.

இதையடுத்து, டி.ஐ.ஜி முன்பு இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு ஆஜராகி விளக்கமளித்திருக்கிறார். பிறகு பணியில் கவனமாக இருக்க அறிவுறுத்தி கண்டித்த டி.ஐ.ஜி தனது நடவடிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டாராம்.

சென்னை: மின்சார ரயில் சேவை பாதிப்பு; அவதியுறும் பொதுமக்கள்; திமுக எம்.பி-க்கள் கண்டனம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். ஏற்கெனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்ப... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி நிறுவனம்... பாஜக-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்த அல்லானா !

இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் மாட்டிறைச்சித் தொழிலுக்கு எதிராக சில இந்துத்துவா குழுக்கள் தொடர் போராட்டங்களையும், அதைக் காரணமாக வைத்து சிறுபான்மையினர் மீது தாக்குதல்களையும் நடத்தி வருவதாக குற்றச... மேலும் பார்க்க

எச்சரித்த எ.வ.வேலு; தட்டிக்கொடுத்த விஜய் - வேலூர் TVK வேட்பாளர் ரேஸில் முந்தும் வினோத் கண்ணன்!

வேலூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், வினோத் கண்ணன் என்பவர் விஜய்யின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாகவும் மாறியிருக்கிறார். விஜய் பேசி முடித்தப் பிறகு அவருக்கு ... மேலும் பார்க்க

`அதிதீவிர சிகிச்சையில் நல்லகண்ணு' - ராஜீவ் காந்தி மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்தார். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட அவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவ்வப்போத... மேலும் பார்க்க

'விஜய்க்கு உடம்பு சரியில்லன்னா கூட கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குதான் போவாரு' - கனவை பகிரும் ஆதவ் அர்ஜூனா

தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நிர்வாகிகள் மத்தியி... மேலும் பார்க்க

மதுரை: `தலைவர்கள் வரும்போது கட்சித் துண்டுகளை சுழற்ற வேண்டும்!'- அதிமுக கண்டிஷன்; தவெகவின் தாக்கமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் நடத்திய மாநாட்டில் ரேம்ப் வாக்கில் நடந்து செல்லும்போது, அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் கட்சித் துண்டுகளை அவருக்குக் கொடுத்து அதை அணிந்து கொண்டு... மேலும் பார்க்க