செய்திகள் :

`விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோமோ?' - மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்!

post image

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தனியார் ஊடகத்தின் கலந்துரையாடலில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

அதற்கு பதிலளித்த அவர், "தவெக உடன் கூட்டணி அமைப்பது குறித்த எந்த முயற்சியும் நாங்கள் எடுக்கவில்லை, அவர் எங்களுடன் வந்தால், அது எங்கள் வாக்குவங்கியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கருதுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து அதிமுகவுடனானக் கூட்டணி குறித்து பேசிய அவர், "அதிமுகவுடனான கூட்டணியே எங்களுக்கு பலம் சேர்க்கிறது. கூட்டணி கட்சிகளுடனான உறவு தமிழகத்தில் அவசியம்.

எனவே பாஜக, அதிமுகவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதோடு மட்டுமின்றி சிறிய பிராந்திய கட்சிகளையும் இணைத்து செயல்பட்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா
எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா

தமிழகத்தில் தற்போது ஆளும் திமுக மீது எதிர்ப்பு அலை வீசுகிறது. இதனை என்னால் பார்க்க முடிகிறது.

இதனால் தமிழகத்தில் வலுவான பெரும்பான்மையுடன் எங்களின் கூட்டணி ஆட்சி அமைக்கும்" என்று அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.

'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் சீனா

அமெரிக்கா - ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது.இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது.ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி,... மேலும் பார்க்க

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க