செய்திகள் :

விமர்சித்த அதிமுக கவுன்சிலர்; அடிக்க பாய்ந்த திமுக கவுன்சிலர்கள்! - மாநகராட்சி கூட்டத்தில் கடமுடா!

post image

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தின் போது அதிமுகவின் கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ் திமுகவினரை விமர்சனம் வைக்க, வாக்குவாதம் முற்றி திமுகவினர் சதீஷை அடிக்க பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சதீஶ்
சதீஷ்

நேரமில்லா நேரத்தின் போது அதிமுக கவுன்சிலர் சதீஷ் பேச எழுந்தார். ஆரம்பத்திலேயே 'நான் உங்களை போல கட்சி பற்றியோ அரசியல் பற்றியோ பேசமாட்டேன். மக்கள் பிரச்னைகளை மட்டுமே பேசுவேன்' என திமுக தலைவர் ஸ்டாலினை பற்றி அக்கட்சியின் கவுன்சிலர்கள் புகழ்ந்து பேசியதை விமர்சித்திருந்தார்.

தொடர்ந்து அவரது வார்டு பிரச்னைகளை பற்றி பேசியவர் மீண்டும் 'நான் உங்களை போல கட்சியை பற்றி பேசமாட்டேன்' என்றார். உடனே ஆவேசமான திமுக கவுன்சிலர்கள் கூச்சல் எழுப்பினர். பதிலுக்கு சதீஷூம் கூச்சல் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவையின் இடப்புறம் இருந்து திமுக கவுன்சிலர் ஒருவர் பேப்பர்களை தூக்கி வீச, இன்னொரு திமுக கவுன்சிலர் கவி கணேசன் ஆவேசமாக கத்திக் கொண்டு சதீஷை அடிப்பதை போல இருக்கையை விட்டு எழுந்து ஓடி வந்தார். சதீஷூம் ஆவேசமாக பேச இருவரையும் மற்ற கவுன்சிலர்கள் இழுத்து பிடித்து சமாதானப்படுத்தினர். இந்த சச்சரவால் அவை சில நிமிடங்களுக்கு பரபரப்பாக காணப்பட்டது.

கவி கணேசன்
கவி கணேசன்

தொடர்ந்து பேசிய சதீஷ் சில நிமிடங்களில் உரையை முடித்துவிட்டார். பின்னர் கவி கணேசன் பேசும்போது அரசியல் விஷயங்களை பேச அதற்கு கண்டனம் தெரிவித்துவிட்டு சதீஷ் வெளிநடப்பு செய்தார்.

'விஜய் பிறந்தநாள் விழாவுக்காக 300 பேருந்துகளை காத்திருக்க வைப்பதா?'- அன்புமணி கண்டனம்

"விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்க விழாவுக்காக 300 பேருந்துகளை சென்னைக்கு வரவழைத்து காத்திருக்க வைப்பதா? மனிதவளம், எரிபொருளை வீணடித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை"... மேலும் பார்க்க

பாமக: மனதை மாற்றிய தேர்தல் தோல்வி! - கண்கலங்கிய ராமதாஸின் காலில் விழுந்த அன்புமணி - பின்னணி என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், ராமதாஸ் அணி - அன்புமணி அணி என இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது கட்சி.... மேலும் பார்க்க

திருவானைக்காவல்: `டாஸ்மாக் கடையை மூடக் கூடாது' - போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்; என்ன நடந்தது?

திருச்சி, திருவானைக்காவல் அடுத்த அழகிரிபுரம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பார் வசதியோடு செயல்பட்டு வரும் அந்தக் கடைகளால் அப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், குறி... மேலும் பார்க்க

`தளபதி விஜய்...'- பேசிய காங்கிரஸ் கவுன்சிலர்; கூச்சலிட்டு அவையை முடக்கிய திமுகவினர்! - என்ன நடந்தது?

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டிருந்தது.திமுக -காங். மோதல்அவையில் நேரம... மேலும் பார்க்க

ஈரானுக்கு கிடைக்கும் $12 பில்லியன்: 'உணவுக்கும், மருந்துக்கும் தான்' ட்ரம்ப் தகவல்; ஈரான் மறுப்பு!

போர் நிறுத்தத்தில் ஈரானுக்கு இருக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று - ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது ஆகும். இது ஸ்விட்சர்லாந்தில் நடந்து வரும் ஈரான், அமெரிக்கா பேச்சுவார்த... மேலும் பார்க்க

"காவல்துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால்.!" - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

"காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது" என்று தவெக அரசை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வ... மேலும் பார்க்க