செய்திகள் :

விவசாயி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள்; 500 வாழைகள் வெட்டிச் சாய்ப்பு; பதற்றத்தால் போலீஸ் குவிப்பு

post image

தூத்துக்குடி மாவட்டம், நவலடியூரைச் சேர்ந்தவர் ஆறுமுகராஜா. விவசாயியான இவருக்கும், அருகிலுள்ள வெள்ளூரைச் சேர்ந்த காசி என்பவருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கருங்குளத்தில் வைத்து தகராறு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 24.04.2013-ம் தேதி ஆறுமுகராஜா தனது தாயார் ருக்மணி வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த காசி மற்றும் அவரின் உறவினர்களான இசக்கிமுத்து, தளவாய், சிவராமலிங்கம், துரைமுத்து உள்ளிட்ட 7 பேர் ஆறுமுகராஜாவைத் தாக்கி அரிவாளால் வெட்ட முயன்றனர்.

தண்டனை விதிக்கப்பட்டவர்கள்
தண்டனை விதிக்கப்பட்டவர்கள்

இதில், ஆறுமுகராஜா அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கினை வாபஸ் பெறக் கோரி, 5 பேர் ஆறுமுகராஜாவைத் தொடர்ந்து மிரட்டி வந்தனராம். ஆனால், ஆறுமுகராஜா வழக்கினை வாபஸ் பெற மறுத்துவிட்டாராம்.

இந்த நிலையில், இசக்கிமுத்து, தளவாய், சிவராமலிங்கம், துரைமுத்து மற்றும் ஒரு இளம் சிறார் ஆகியோர் ஆறுமுகராஜாவைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 02.04.2015 அன்று இரவில், ஆறுமுகராஜா, அவரது நண்பரான குருமூர்த்தி என்பவருடன் சேர்ந்து புதுக்குடியில் உள்ள ஸ்ரீ ரெங்கராஜா பெருமாள் கோயில் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த இசக்கிமுத்து உள்ளிட்ட 6 பேர் ஆறுமுகராஜாவைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி வன்கொடுமைத் தடுப்புப்பிரிவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இளம் சிறார் குறித்த வழக்கு, தனியாகப் பிரிக்கப்பட்டு இளம் சிறார் நீதிக்குழுமத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு, நடந்து வந்த போது துரைமுத்து உயிரிழந்தார். மற்றவர்கள் மீதான விசாரணை நடந்து வந்தது.

வெட்டிச் சாய்க்கப்பட்ட வாழைகள்
வெட்டிச் சாய்க்கப்பட்ட வாழைகள்

இந்நிலையில், இசக்கிமுத்து, தளவாய், சிவராமலிங்கம் ஆகிய 3 பேருக்கும் மூன்று ஆயுள் தண்டனை, தலா ரூ.13,000 அபராதமும், காசி என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.7,000 அபராதமும், கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட கண்ணன் என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி வஷித்குமார் நேற்று (24-ம் தேதி) உத்தரவிட்டார்.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நவ்வலடியூரில் சுமார் 5 ஏக்கரில் கொலை செய்யப்பட்ட ஆறுமுகராஜாவின் குடும்பத்தினர் வாழை விவசாயம் செய்து வருகின்றனர். நேற்று காலையில் ஆறுமுகராஜாவின் தோட்டத்தில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படும் நிலையில் இருந்த வாழைகள் வெட்டிச் சாய்க்கப்பட்டதாக அவரது சகோதரர் இளையராஜாவுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து தோட்டத்திற்குச் சென்று பார்த்தபோது சுமார் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மர்மநபர்கள் வாழைகளை தீ வைத்து கொளுத்துவதற்காக இரண்டு தண்ணீர் பாட்டில்களில் பெட்ரோல் வாங்கி வந்து கொளுத்த முயன்றுள்ளனர். ஆனால், பச்சை வாழைகள் என்பதால் தீப்பிடிக்கவில்லை.

ஆத்திரமடைந்த மர்மநபர்கள் வாழைகளை வெட்டிச் சாய்த்துள்ளது தெரியவந்தது. கொலை சம்பவத்திற்குப் பிறகு ஆறுமுகராஜாவின் குடும்பத்தினர் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். அவ்வப்போது வாழை விவசாயத்தைக் கவனித்து வந்துள்ளனர்.

போலீஸார் பாதுகாப்பு
போலீஸார் பாதுகாப்பு

இந்த நிலையில், நேற்றைய தினம் இந்தத் தீர்ப்பு வந்ததையடுத்து குற்றவாளிகளின் உறவினர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும், தங்களது உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆறுமுகராஜாவின் சகோதரர் இளையராஜா ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வெள்ளூர் மற்றும் நவ்வலடியூர் கிராமங்களில் பதற்றம் நிலவி வருவதால், இருதரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பிற்காகவும் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இரு கிராமங்களுக்குள் வெளியூர்களைச் சேர்ந்த நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளையர்கள்!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திர போஸ் (71). அவரின் செல்போன் எண்ணிற்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ அலுவலகம் என்கிற பெயரில் ஒரு லிங்க் வந்துள்ளது.சைபர் கொள்ளைஅந்த லிங்கை திறந... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கு DNA பரிசோதனை; கனடாவில் இருந்து திரும்பும் இளம்பெண்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ராகுல் மாங்கூட்டத்தில் பாலக்காடு தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னா... மேலும் பார்க்க

சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரௌடி கொலை - அதிகாலையில் வந்த `ஹெல்மெட்' மர்ம நபர்கள் யார்?

சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி என்கிற ஆதிகேசவன் (23). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாள... மேலும் பார்க்க

தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி; தாத்தா,தாய் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு!

திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல் காந்தி, குழந்தைகள் நலக் குழு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போதுதான், 15 வயது சிறுமிக்கு அவரது உறவினர்களே பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந... மேலும் பார்க்க

காதல் கணவனை கைவிட்டுவிட்டு வேறொருவருடன் திருமணம் - பழிவாங்க பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக்கொன்ற காதலன்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி என்ற இடத்தில் அனிதா செளதரி என்ற பெண் கடந்த 4ம் தேதி இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவராக கருதப்பட்ட அனிதா இரவில் ஆட்டோ ஓட்டிச்சென்று கொண்... மேலும் பார்க்க

சென்னை: பிரபல மருத்துவக் கல்லூரியின் பெயரைச் சொல்லி ரூ.11 லட்சம் மோசடி; இன்ஜினீயர் சிக்கியது எப்படி?

சென்னை, பாலவாக்கம், கரீம் நகரைச் சேர்ந்தவர் உமா (50). இவரின் மகள், உயர்கல்வி படிக்க சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் விண்ணப்பித்திருந்தார். அப்போது உமாவுக்குத் தெரிந்த குடும்ப ... மேலும் பார்க்க