செய்திகள் :

"வெற்றியாளர்களை விட பங்கேற்பாளர்கள் தான் முக்கியம்; நரேஷ் ஐயர் கூட.!"- ஏ.ஆர் ரஹ்மான்

post image

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி சென்னையில் வரும் 14ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த இசைக்கச்சேரியை முன்னிட்டு ஏ.ஆர் ரஹ்மான் சில பேட்டிகளை அளித்து வருகிறார்.

அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தோற்பவர்களுக்கும் வாய்பளிப்பது குறித்து பேசியிருக்கிறார்.

"ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. பாடல் போட்டிகளில் யார் எல்லாம் தோற்று போகிறார்கள் என கவனிப்பேன்.

நரேஷ் ஐயர்
நரேஷ் ஐயர்

சில சமயம் நன்றாக பாடும் நபர்களை கூட வெளியேற்றுவார்கள். எனக்கு வெற்றியாளர்களைவிட, பங்கேற்பாளர்கள் அனைவரையும் பிடிக்கும்.

நரேஷ் ஐயர் கூட அப்படித்தான், 23 வயதில் ஒரு போட்டியில் தோற்றார். ஆனால் அவரின் குரலில் இருந்த தரம் எனக்கு பிடித்திருந்தது.

அவரை அழைத்து 'நீ தோற்றுவிட்டாய், ஆனால் உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்கிறேன். எனக்கு ட்ராக் பாட கிளம்பி சென்னை வா' என்றேன்.

அவருக்கு முதல் பாடலிலேயே (Roobaroo Rang De Basanti) தேசிய விருது கிடைத்தது" என்று பேசியிருக்கிறார்.

Rajini: தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மை; நேரில் அழைத்து தங்கச் சங்கிலி வழங்கி பாராட்டிய ரஜினி!

ரஜினி சமீபத்தில் மதுரையில் 5 ரூபாய்க்கு பரோட்டா கடை நடத்தி வரும் தனது ரசிகரை நேரில் அழைத்துப் பாராட்டியிருந்தார். பாராட்டியதோடு ஒரு தங்கச் சங்கிலியையும் அவருக்கு பரிசாக வழங்கியிருந்தார் ரஜினி.அதைத் தொ... மேலும் பார்க்க

"சினிமா மீதான என் காதல் நீளும்"- சினிமாவில் 25 ஆண்டுகள் நிறைவு செய்த GVM நெகிழ்ச்சி

'மின்னலே', 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'வாரணம் ஆயிரம்', 'விண்ணைத்தாண்டி வருவாயா' போன்ற ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். இயக்க... மேலும் பார்க்க

State Awards: "என்னை எந்த அடிப்படையில் நீங்க புறக்கணிக்கிறீங்க?" - இயக்குநர் கோபி நயினார் பேட்டி

2016 முதல் 2022-ம் ஆண்டு வரைக்குமான தமிழக அரசு மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.விருது பெற்றவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தாலும், பலர் அந்த விருதுகள் நியாயமான முறையில் அறிவிக்கப்பட்டிரு... மேலும் பார்க்க