செய்திகள் :

வேலூர்: காவல் நிலையம் முன்பு பெண் எஸ்.ஐ மீது தாக்குதல்; குடிபோதையில் அத்துமீறிய தந்தை - மகன் கைது!

post image

வேலூர் தெற்கு காவல் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாகவந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோ ஓட்டுநர் மதுபோதையில் இருந்தார்.

போலீஸாரின் விசாரணையில், அவர் வேலூர் சூரியகுளத்தைச் சேர்ந்த விஜயன் (43) எனத் தெரியவந்தது. அவர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி, மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து, அபராதத் தொகையை வேலூர் நீதிமன்றத்தில் செலுத்தும்படியும் தெரிவித்தாராம்.

அதை ஏற்காத விஜயன் தன் மீது `வழக்கு பதிவு செய்யக் கூடாது’ என்று சப்-இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் செய்தாராம். இதுபற்றி, செல்போனில் தனது குடும்பத்தினரிடமும் தெரிவித்தாராம் விஜயன்.

கைது செய்யப்பட்ட தந்தை - மகன்

உடனடியாக அவரின் மனைவி, 2 மகன்களும் அங்கு வந்திருக்கின்றனர். விஜயன் உட்பட 4 பேரும் சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணியை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அப்போது, விஜயனும், அவரின் மூத்த மகன் யுவராஜ் (21) என்பவரும் சேர்ந்து கொண்டு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கீழே தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதை கவனித்த மற்ற போலீஸார் விரைந்து வந்து 4 பேரையும் மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து, தாக்குலுக்கு ஆளான சப்-இன்ஸ்பெக்டரை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, வேலூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து, விஜயன் மற்றும் அவரின் மகன் யுவராஜ் ஆகியோரைக் கைது செய்தனர்.

`பேராசை கொண்டவர்களை பிராங்க் செய்தேன்'- சேலத்தில் பெண்களை மொட்டையடிக்க வைத்த நபர் `கூல்' வாக்குமூலம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள புது கொத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள் என்ற பெண்மணியிடம், தாசில்தார் என செல்போனில் தொடர்புகொண்ட நபர் ஒருவர், ``கொரோனா போன்ற புதுவித நோய் பரவலில் இருந்து... மேலும் பார்க்க

"உங்க மகள் சாவதைப் பாருங்க" - மனைவியைத் தூக்கில் தொங்கவிட்டு மாமனாருக்கு வீடியோ காலில் காட்டிய கணவன்

கர்நாடகா மாநிலம் பாகல்கோட் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பிலாகி என்ற இடத்தைச் சேர்ந்தவர் பாக்யஸ்ரீ(23). இவரது கணவர் பிரவீன். டிரைவராக வேலை செய்து வருகிறார். இதனால் அடிக்கடி வெளியூர்களுக்கு பயணம் செய்வா... மேலும் பார்க்க

சென்னை: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அநாகரிகம்; போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை!

சென்னை வேளச்சேரி ஒரண்டியம்மன் கோயில் தெருவில் கணவருடன் இளம்பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த ஒருவர், இளம்பெண்ணுக்கு சொல்ல முடியாத அளவுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்துவிட்டு தப்பிச் செ... மேலும் பார்க்க

மொட்டை அடித்தால் ரூ.15,000; நூதனமாக ஏமாற்றிய கும்பல்; நம்பி தலைமுடியை இழந்த பெண்கள் - விநோத சம்பவம்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள புதுகொத்தாம்பாடியைச் சேர்ந்த பெண்கள் சிலருக்கு நேற்று முன்தினம் இரவு புது எண்களில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. தாசில்தார் அலுவலகத்தில் இருந்து அழைப்பதாகவும், வ... மேலும் பார்க்க

ஒடிசா டு திருப்பூர்; AC பெட்டியில் வந்த 30 கிலோ கஞ்சா; துப்பாக்கியுடன் 4 பேர் கைதான பின்னணி என்ன?

திருப்பூர் மாவட்டம் சின்னக்கரை சோதனைச்சாவடி பகுதியில் கஞ்சா கடத்திச் செல்வதாக பல்லடம் காவல்நிலைய ஆய்வாளருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் குழுவாகச் சென்ற க... மேலும் பார்க்க

கடலூர்: காதலிக்க மறுத்த மாணவியைக் கத்தியால் குத்திய கொடூரம்; பயத்தில் இளைஞர் எடுத்த முடிவு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த இவர், பக்கத்து கிராமத்தில் ஒரு வீட்டுக்கு ஒயரிங் வேலைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அந்த வீட்டில் ... மேலும் பார்க்க