செய்திகள் :

கடலூர்: காதலிக்க மறுத்த மாணவியைக் கத்தியால் குத்திய கொடூரம்; பயத்தில் இளைஞர் எடுத்த முடிவு

post image

கடலூர் மாவட்டம், சிதம்பரம் சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த இவர், பக்கத்து கிராமத்தில் ஒரு வீட்டுக்கு ஒயரிங் வேலைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அந்த வீட்டில் இருந்த பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் நட்பாகப் பேசி வந்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 26-ம் தேதி அந்த வீட்டுக்குச் சென்ற ஐயப்பன், அங்கு தனியாக இருந்த அந்த மாணவியின் கை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் கிழித்துவிட்டு தப்பிவிட்டார். சிறுமியின் அலறலைக் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் சிறுமி.

ஐயப்பன்
ஐயப்பன்

இதற்கிடையில் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சிதம்பரம் தாலுகா போலீஸார், தலைமறைவாக இருந்த ஐயப்பனைத் தேடி வந்தனர். இந்த நிலையில் சி.முட்லூர் அரசுக் கல்லூரிக்குப் பின்புறம் யாரோ தூக்கில் தொங்குவதாக போலீஸாருக்குத் தகவல் சென்றது.

அதனடிப்படையில் மரத்தில் தொங்கிய அந்தச் சடலத்தை மீட்ட போலீஸார், அதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மரத்தில் சடலமாகத் தொங்கிய நபர், சிறுமியை கத்தியால் கிழித்துவிட்டு தப்பிச் சென்ற ஐயப்பன் என்பது தெரிய வந்தது.

அதன்பிறகு அந்தச் சடலம் உடற்கூராய்வு சோதனைக்காக சிதம்பரம் அண்ணாமலை நகர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய தாலுகா காவல் நிலைய விசாரணை அதிகாரிகள், ``இன்னும் விசாரணை முடியவில்லை. ஐயப்பன் ஒயரிங் வேலைக்காகச் சென்றபோது அந்த வீட்டிலிருந்த சிறுமியிடம் பேசியிருக்கிறான். வீட்டிற்கு வேலை செய்ய வந்தவர் என்ற அடிப்படையில் சிறுமியுடன் ஐயப்பனுடன் எதார்த்தமாகப் பேசியிருக்கிறார்.

அதையடுத்து சிறுமியிடம் அவரைக் காதலிப்பதாகக் கூறிய ஐயப்பன், திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறார். அதில் பயந்து போன அந்தச் சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஆனாலும், ஐயப்பன் சிறுமியை அடிக்கடி சந்தித்து, காதலிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

தூக்கு தண்டனை
தற்கொலை

இந்த நிலையில்தான் சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருப்பதைத் தெரிந்து கொண்டு, அங்கு போயிருக்கிறார் ஐயப்பன். அப்போதும் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சிறுமியிடம் வற்புறுத்தியிருக்கிறார். சிறுமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த ஐயப்பன் கையில் வைத்திருந்த பேனா கத்தியால் சிறுமியின் உடலில் பல இடங்களில் கிழித்துவிட்டு ஓடிவிட்டார்.

போலீஸார் தீவிரமாகத் தேட ஆரம்பித்ததால் பயந்து போன ஐயப்பன், அன்றைய தினமே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். ஆனாலும் உடற்கூராய்வு அறிக்கை வந்தபிறகே இது தற்கொலையா அல்லது கொலையா என்பது உறுதியாகத் தெரியவரும்" என்றனர்.

ஒடிசா டு திருப்பூர்; AC பெட்டியில் வந்த 30 கிலோ கஞ்சா; துப்பாக்கியுடன் 4 பேர் கைதான பின்னணி என்ன?

திருப்பூர் மாவட்டம் சின்னக்கரை சோதனைச்சாவடி பகுதியில் கஞ்சா கடத்திச் செல்வதாக பல்லடம் காவல்நிலைய ஆய்வாளருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் குழுவாகச் சென்ற க... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: விபத்து வழக்கில் காரை விடுவிக்க லஞ்சம்; கையும் களவுமாகப் பிடிபட்ட எஸ்.எஸ்.ஐ கைது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர், கடந்த 19-ம் தேதி தனது காரில் காவலூர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, காவலூர் பகுதியைச் சேர்ந்த லட்... மேலும் பார்க்க

"கணவன் என்னை விவாகரத்தே செய்தாலும் அந்தப் பையன்தான் வேணும்" - மனைவி பிடிவாதம்; கணவன் விபரீத முடிவு

சண்டிகரைச் சேர்ந்த மோனு என்பவர் 8 ஆண்டுகளாக கோமல் என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். எட்டு ஆண்டுக்குப் பிறகு இரு குடும்பத்தின் சம்மதத்தின் பேரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகள் ... மேலும் பார்க்க

Uttar Pradesh: பேண்டில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவன்; அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த ஆசிரியை

உத்தரப்பிரதேச மாநிலம் வாரனாசி அருகில் உள்ள பண்டேபூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் கேசரி குமார் என்பவரின் 5 வயது மகன் படித்து வந்தான். அவன் வகுப்பறையில் இருக்கும்போது சிறுநீர் கழிக்க வாஷ்ரூம் ச... மேலும் பார்க்க

100 கோடி கேட்டு கடத்தல்... ₹44 கோடியில் முடிந்த பேரம்; மாலியில் விடுவிக்கப்பட்ட இந்திய வம்சாவளி

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைர வியாபாரி தீரு ரமாணி, சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது விடுதலைக்காக குடும்பத்தினர் சுமார் 4 ... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய 2 ஆசிரியைகள் - QR Code மூலம் பணம் பெற்ற அதிர்ச்சி பின்னணி!

கேரள மாநிலத்தில் போதைப்பொருட்களை தடுக்கும் நோக்கில் `ஆபரேஷன் தூஃபான்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆபரேஷன் தூஃபான் சோதனையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிஸ்வான் என்பவரை எம்.டி.எம்.ஏ போதைப்பொரு... மேலும் பார்க்க