செய்திகள் :

ஹரியானா: "5,21,619 போலி வாக்காளர்கள்; ஒரு நபர் 100 வாக்கு செலுத்தியிருக்கிறார்" - ராகுல் காந்தி

post image

நாளை (நவம்பர் 6) பீகாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா மாநிலத்தில் வாக்கு திருட்டு நடப்பதாகக் குற்றஞ்சாட்டி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிவருகிறார்.

ஹரியானாவில் 5,21,619 போலி வாக்காளர்கள் இருப்பதாகவும், ஒரு தொகுதியில் ஒரே நபரின் புகைப்படம் 100 வாக்காளர்களின் பெயர்களில் இருப்பதாகவும், 8-ல் ஒரு வாக்கு போலியானது என்றும் பரபரப்பான குற்றச்சாட்டை ராகுல் காந்தி முன்வைத்திருக்கிறார்.

மேலும், வாக்குத் திருட்டு என்பதைத் தாண்டி ஹரியானாவில் ஆட்சியே திருட்டுதான் என்றும் வாக்குத் திருட்டு தொடர்பாக தான் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு 100% தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் உறுதியாகக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் ராகுல் காந்தி, "ஹரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாலேயே காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை. ஹரியானா தேர்தலில் 5,21,619 போலி வாக்காளர்கள் இருப்பது உறுதியாகியிருக்கிறது. ஒரே நபரின் புகைப்படம் 100 வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கிறது.

இந்திய வாக்காளர் அடையாள அட்டைகளில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல்களின் புகைப்படங்கள்கூட இருக்கின்றன. ஹரியானா தேர்தலில் 8-ல் ஒரு வாக்கு போலியானது. வாக்குத் திருட்டு என்பதைத் தாண்டி ஹரியானாவில் ஆட்சி திருட்டே நடந்துள்ளது" என்று பேசியிருக்கிறார் ராகுல் காந்தி

அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பா.ஜ.க தான் என்னை அழைத்தது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``எ... மேலும் பார்க்க

ரூ.1800 கோடி அரசு நிலம் அஜித் பவார் மகனுக்கு ரூ.300 கோடிக்குதானா? - விசாரணைக்கு உத்தரவிட்ட பட்னாவிஸ்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருக்கும் முந்த்வா என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். இந்த நிலம் சமீபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் மகன... மேலும் பார்க்க

`எனக்கும் மன வருத்தம் உண்டென ஓர் உதாரணத்துக்குச் சொன்னேன்'- செல்லூர் ராஜூ

‘கட்சியில் எனக்கும் மன வருத்தம் உண்டு’ என்கிற பொருள்பட, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது!எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன்அ.தி.மு.க முன்னாள் அமை... மேலும் பார்க்க

US: இனி பாஸ்போட்ர்டில் இரண்டு பாலினம் மட்டுமே - ட்ரம்ப்பின் கட்டுப்பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி!

அமெரிக்க பாஸ்போர்ட்களில் குறிப்பிடப்படும் பயணியின் பாலினம் அவர்களது பிறப்பு பாலினத்துடன் (அதாவது ஆண் அல்லது பெண்) ஒத்துப்போக வேண்டும் என்ற ட்ரம்ப் அரசின் நிபந்தனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது அமெரிக்க உச... மேலும் பார்க்க