செய்திகள் :

`20 முறை முயற்சி செய்தும் வேகவில்லை' - இறைச்சி வேகவில்லை என்று கூறி போலீஸாருக்கு வந்த நூதன புகார்!

post image

போலீஸாருக்கு எத்தனையோ விதமான நூதன புகார்கள் வருவதுண்டு. அதனையும் சமாளித்து தீர்த்து வைப்பதுதான் போலீஸாரின் வேலையாக இருக்கிறது. ஆந்திரா மாநிலத்தில் ஒருவர் கொண்டு வந்த புகாரை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தாடிபத்ரி என்ற இடத்தில் வசிக்கும் சோதலா ஹாஜி என்பவர் ஒரு பாத்திரத்துடன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் பாத்திரத்துடன் வந்தவுடன் என்னவென்று போலீஸார் கேட்டனர். அவர் உடனே தனது பாத்திரத்தை திறந்து உள்ளே இருக்கும் மட்டனை போலீஸாரிடம் காட்டினார்.

அதனை பார்த்ததும் நமக்குத்தான் மட்டன் கொண்டு வந்திருப்பதாக போலீஸார் நினைத்தனர். ஆனால் ஹாஜி அந்த மட்டனை போலீஸாரிடம் கொடுத்து இது வேகவேமாட்டேங்கிறது என்று புகார் கொடுத்தார்.

அவரின் புகாரை பார்த்து என்னடா இது புது பிரச்னையாக இருக்கிறது என்று கூறி அவரின் குறையை போலீஸார் கேட்டனர். ஹாஜி தனது புகாரில், மட்டன் கடையில் தலைக்கறி வாங்கியதாகவும், ஆனால் வீட்டில் அதனை சமைத்தபோது வேகவில்லை என்று தெரிவித்தார். 20 முறை வேகவைத்தும் மட்டன் வேகவில்லை என்று குற்றம் சாட்டினார்.

உடனே போலீஸ் அதிகாரி ஆனந்த் ராவ் அந்த மட்டனை விற்பனை செய்த வியாபாரியை அழைத்துவரும்படி கூறினார். வியாபாரி வந்தபோது அவரிடம் போலீஸார் பிரச்னையை தெரிவித்தனர். உடனே ஹாஜிக்கு கொடுத்த மட்டனுக்கு பதில் புதிய மட்டன் கொடுப்பதாக வியாபாரி தெரிவித்தார். அதன் பிறகுதான் இந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. சில நேரங்களில் வயதான ஆடுகளின் இறைச்சி சரியாக வேகாது. அல்லது வேக அதிக நேரம் பிடிக்கும் என்கிறார்கள்.

ஹிமாச்சல்: 6 மாதங்களுக்கு முதல்வர், எம்.எல்.ஏ, அதிகாரிகள் சம்பளத்தின் ஒருபகுதி நிறுத்திவைப்பு!- ஏன்?

ஹிமாச்சல பிரதேசத்தில் தற்போது கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து நிதிநிலையை சரி செய்ய அரசு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தில் ஒரு பகுதியை 6 மாதத்திற்கு நிறுத்தி வை... மேலும் பார்க்க

தாக்கி வீடியோ எடுத்து மிரட்டல்; தற்கொலை செய்த அதிகாரி: பஞ்சாப் அமைச்சர் லால்ஜித் சிங் ராஜினாமா!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் மாநில அரசு கிடங்கில் மாவட்ட மேலாளராக இருந்த ககன்தீப் சிங் நேற்று முன் தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சமூக வலை... மேலும் பார்க்க

`நீங்கள் வராவிட்டால் விற்று இருப்பார்கள்'- ஐஏஎஸ் அதிகாரி என கூறி திருமணம்செய்து பெண்ணை விற்க முயற்சி

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் தனது மகளுக்கு மணமகன் தேடிக்கொண்டிருந்தார். அவரிடம் எட்டாவா நகரை சேர்ந்த பிரித்தம்குமார் என்பவர் பெண் கேட்டு வந்தார். பிரித்தம்குமார் தன்ன... மேலும் பார்க்க

பேஸ்புக்கில் மனைவி வெளியிட்ட சிமென்ட், டிரம் பதிவு; மனைவியை காதலனுடன் அனுப்பிய கணவன்- உ.பி அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் முஸ்கான் என்ற பெண் கடந்த ஆண்டு தனது கணவனை காதலன் துணையோடு கொலைசெய்து ஊதா கலர் டிரம்மில் போட்டு சிமென்ட்டால் நிரப்பிய சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத... மேலும் பார்க்க

சேற்றுத்தண்ணீரில் மிதந்தபடி ப்ரீ வெடிங் போட்டோஷூட்; `இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்' நெட்டிசன்கள் ட்ரோல்

திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் புகைப்படக் கலைஞரை வரவழைத்து விதவிதமாக புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். இது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு தம்பதி செய்த காரியம் இ... மேலும் பார்க்க