செய்திகள் :

₹20 லஞ்சம்... 30 ஆண்டுகள் நடந்த வழக்கு! - இறுதி விசாரணையில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

post image

குஜராத்தில் ₹20 லஞ்சம் தொடர்பாக 1996-ல் தொடங்கிய வழக்கு, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரசு அலுவலகத்தின் கிளார்க் (clerk) மற்றும் பியூன் (peon) ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளது.

1996 பிப்ரவரியில், ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பெச்சாரி கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு மாணவர் ஒருவர் சென்றுள்ளார். கல்விச் சலுகைகளைப் பெறுவதற்காக அவருக்கு வருமானச் சான்றிதழ் (Income Certificate) தேவைப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சான்றிதழை வழங்குவதற்காக கிளார்க் ஒருவர் ₹120 லஞ்சம் கேட்டதாகவும், அதில் ₹100 கிளார்க்கிற்கும், ₹20 பியூனுக்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர் Anti-Corruption Bureau (ACB)-யிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து ACB அதிகாரிகள், மாணவரிடம் அடையாளம் காணக்கூடிய வகையில் ₹120 பணம் கொடுத்து, அந்தப் பணத்தை அரசு ஊழியர்களிடம் கொடுக்கச் சொன்னார்கள்.

மாணவர் Income Certificate-ஐப் பெற்றார்.

அதன் பிறகு அவர் ₹20-ஐ Peon-க்கு கொடுத்தார்.

ACB அதிகாரிகள் சோதனை செய்தபோது, அந்த ₹20 பியூனிடமிருந்து மீட்கப்பட்டது.

ஆனால் ₹100 கிளார்க்கிடமிருந்து கிடைக்கவில்லை.

இந்த வழக்கில் கிளார்க், பியூன் ஆகிய இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

இருவரும் மேல் முறையீடு செய்து வழக்கை நடத்தி வந்தனர்.

இறுதியாக உச்ச நீதிமன்றத்தை அடைந்தபோது, வழக்கில் பல முக்கியமான சந்தேகங்கள் இருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மாணவர் அளித்த வாக்குமூலங்களிலும் முரண்பாடுகள் இருந்தன. மேலும், ACB அதிகாரிகள் முழு ₹120-ஐ லஞ்சமாகக் கேட்டால் கொடுக்கும்படி கூறியிருந்த நிலையில், மாணவர் ₹20-ஐ மட்டும் பியூனிடம் கொடுத்திருந்தார்.

கிளார்க் அருகிலேயே இருந்தபோதும் மீதமுள்ள ₹100 ஏன் கொடுக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்தது.

₹20 பணம் Peon-யிடமிருந்து கிடைத்தது மட்டும் போதுமான ஆதாரம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

முதலில், அந்த அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டார்கள் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட வேண்டும்.

உச்சநீதிமன்றம்

அதற்கான ஆதாரம் போதுமானதாக இல்லை என்று நீதிமன்றம் உறுதி செய்தது.

மேலும் விசாரணையின்போது, பியூன் தன்னிடம் நேரடியாக லஞ்சம் கேட்டதாக மாணவர் கூறவில்லை என்பதும் தெரியவந்தது. மாணவர் வருமானச் சான்றிதழைப் பெற்ற பிறகுதான் ₹20 கொடுத்திருந்ததும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது.

பியூன், மறுநாள் ஈத்(Eid) என்பதால் மாணவர் அந்த ₹20-ஐ கொடுத்ததாக விளக்கம் அளித்திருந்தார். இந்த விளக்கம் நம்பத்தகுந்ததாக இருக்கலாம் என்றும் நீதிமன்றம் கருதியது.

இதையடுத்து, பணம் ஒருவரிடம் இருந்து மீட்கப்பட்டது என்பதைக் கொண்டு மட்டும் அது லஞ்சம் என்று நிரூபிக்க முடியாது; லஞ்சம் கேட்கப்பட்டது என்பதும் தெளிவாக நிரூபிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதன் அடிப்படையில், கீழமை நீதிமன்றத் தீர்ப்புகளை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், 30 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் இரு அரசு ஊழியர்களையும் விடுதலை செய்தது.

காவிரி: ``ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகா கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்!" - உச்ச நீதிமன்றம் அதிரடி

காவிரியில் இருந்துதமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விடக் கோரித்தமிழகஅரசு தாக்கல் செய்த மனு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12,000 கனஅடி நீர் திறப்பு உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட... மேலும் பார்க்க

உ.பி முசாபர்நகர் நீதிமன்றம்: `4 மாதத்தில் 22 பேருக்கு தூக்குத் தண்டனை' - நடுங்கும் கைதிகள்

தூக்குத்தண்டனை என்பது மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு நீதிபதி பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனையை வழங்கி வருகிறார். அ... மேலும் பார்க்க

கரூர்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய வழக்கு; நியமன ரத்து உத்தரவுக்கு இடைக்கால தடை

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்குக் கர... மேலும் பார்க்க

'நீட் கலந்தாய்வில் தவறாகத் தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு' - உயர்நீதிமன்றம் உத்தரவு

பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பிரஜித் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன்னிடம் செல்லுபடியாகும் ஓசிஐ (OCI) அட்டை உள்ளது. நீட் யூஜி 2026 தேர்வில் பங்கேற்று தகுதி பெற்றுள்ளேன். ... மேலும் பார்க்க

பழனி நிலமோசடி விவகாரம்: "அன்வர்தீன் மரணத்தை அரசியலாக்க வேண்டாம்"- நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வாதம்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபால், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி பிரதீப் ஆகியோர் மதுரை உயர்நீத... மேலும் பார்க்க

'தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா?' - வேதாந்தா நிறுவனத்தின் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணை

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாகக் கூறி 2018-ம் ஆண்டு ஆலைக்கு எதிராக 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் 100வது நாளான மே... மேலும் பார்க்க