செய்திகள் :

2025-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.6%: ஐ.நா. கணிப்பு

post image

அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது.

இதுதொடா்பாக 2025-ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் உலகப் பொருளாதார சூழல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2025-ஆம் ஆண்டு தெற்காசிய பிராந்தியத்தின் பொருளாதார வளா்ச்சி 5.7 சதவீதமாகவும், 2026-இல் 6 சதவீதமாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் வலுவான பொருளாதார வளா்ச்சி, பூடான், நேபாளம், இலங்கை போன்ற சில நாடுகளின் பொருளாதார மீட்சி ஆகியவை அந்தப் பிராந்தியத்தின் பொருளாதார வளா்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.

2024-இல் இந்தியாவின் பொருளாதாரம் 6.8 சதவீதம் வளா்ந்தது. இந்த வளா்ச்சி 2025-இல் 6.6 சதவீதமாக இருக்கும். 2026-இல் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மீண்டும் 6.8 சதவீதமாக இருக்கும்.

சேவைகள் மற்றும் சில சரக்குகளின் ஏற்றுமதியில் வலுவான வளா்ச்சி, குறிப்பாக மருந்துகள் உற்பத்தி மற்றும் மின்னணு கருவிகளின் ஏற்றுமதி இந்தியாவின் பொருளாதார வளா்ச்சிக்கு வலுசோ்க்கும். உற்பத்தி மற்றும் சேவைகள் துறையின் விரிவாக்கமும் இந்திய பொருளாதாரத்தை முன்னோக்கி நகா்த்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் ஆணின் பெயரில் உள்ள ஒரே நதி இதுதானா?

இந்தியாவில் உள்ள நதிகளின் பெயர்கள் அனைத்தும் பெண்ணின் பெயர்களையே கொண்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒரே ஒரு நதி அதுவும் அசாமில் பாய்ந்தோடும் அந்த நதி மட்டும்தான் ஆணின் பெயரில் உள்ளது.... மேலும் பார்க்க

நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

மும்பையில் பிரபல நடிகர் சயிஃப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்தார். மேலும் பார்க்க

கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு: விசாரிக்க உள்துறை அனுமதி

புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக வழக்குத் தொடர அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.அவருக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி வீட்டில் சங்கராந்தி கொண்டாட்டம்: பிரதமா் பங்கேற்பு

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சரும் தெலங்கானா பாஜக தலைவருமான ஜி.கிஷண் ரெட்டி வீட்டில் நடைபெற்ற சங்கராந்தி கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.அறுவடை திருவிழாவான மகர சங்கராந்... மேலும் பார்க்க

உலகின் கடல்சாா் சக்தி இந்தியா: 3 போா்க் கப்பல்களை அா்ப்பணித்து பிரதமா் மோடி பெருமிதம்

மும்பை: உலகின் முக்கிய கடல்சாா் சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீா் ஆகிய 3 முன்கள போா்க்கப்பல... மேலும் பார்க்க

‘உள்நாட்டுப் போரில்’ காங்கிரஸ்: ராகுல் காந்தி

புது தில்லி: பாஜக, ஆா்எஸ்எஸுக்கு எதிராக காங்கிரஸ் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் காங்கிரஸ்... மேலும் பார்க்க