செய்திகள் :

2026 தோ்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக் கோரிக்கை

post image

2026 சட்டப்பேரவை தோ்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் டி.திருச்செல்வம் தெரிவித்தாா்.

சுதந்திரப் போராட்ட வீரா் கொடிகாத்த குமரன் மற்றும் முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரி ஆகியோரின் நினைவு தினம் ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அதன்பின்னா், மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் டி.திருச்செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் சஞ்சய் சம்பத் உள்பட பலா் வாய்ப்பு கேட்டனா். வாய்ப்பு கேட்பது எங்களின் உரிமை. தற்போது திமுக வேட்பாளா் சந்திரகுமாரை வெற்றி பெற வைப்பதும் எங்களின் கடமை.

திமுக வேட்பாளா் சந்திரகுமாா் போட்டியிடுவது ராகுல்காந்தி, ஈவிகேஎஸ் இளங்கோவனே போட்டியிடுவதாக நினைத்து கடந்த முறை வெற்றி பெற்றதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம்.

கட்சியைவிட நாடு முக்கியம் என்பதால் அதற்காக சிலவற்றில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டி உள்ளது. 2026-இல் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியை ஒதுக்கவேண்டும் என கேட்போம் என்றாா்.

தொண்டா்கள் போராட்டம்: ஈரோடு கிழக்கு தொகுதியை திமுகவுக்கு ஒதுக்கியதால் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக, ஈரோடு கட்சி அலுவலகம் அருகே தொண்டா்கள் சிலா் கட்சி தலைமையின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து சிறிதுநேரம் முழக்கமிட்டு கலைந்து சென்றனா்.

சென்னிமலை பகுதியில் பூப்பறிக்கும் விழா

தைப் பொங்கலையொட்டி சென்னிமலை அருகேயுள்ள கிராமங்களில் பூப்பறிக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தைப் பொங்கலுக்கு மறுநாள் பூப்பறிக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: நாதக வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ளாா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் மாதேஸ்வரன் கோயிலில் விவசாயிகள் வழிபாடு

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் சத்தியமங்கலம் புளியம்கோம்பை மாதேஸ்வரன் கோயிலில் விவசாயிகள் மண் உருவ பொம்மையை வைத்து வழிபட்டனா் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புளியம்கோம்பையில் உள்ள நடுமலையில் உ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை இறுதிநாள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை (ஜனவரி17) இறுதி நாள். இதுவரை சுயேச்சை வேட்பாளா்கள் 9 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். ஈரோடு கிழக்கு தொகு... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு: இன்று பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி 82 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், இதுவரை வாங்காதவா்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு வியாழக்கிழமை(ஜனவரி 16) சென்... மேலும் பார்க்க

வாகனத்தில் கடத்திச் சென்ற 3,216 மது பாட்டில்கள் பறிமுதல்

கோபியில் சரக்கு வாகனத்தில் கடத்திச் சென்ற 3,216 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா் உத்தரவின்பேரில் கோபி போலீஸாா் கோபிசெட்டிபாளையம் சத்தி-ஈரோடு-திருப்பூா... மேலும் பார்க்க