செய்திகள் :

'2026-ல் பணக்காரர் ஆகும் ரூட் இதுதான்!' - ஏஐ யுகத்தில் செல்வத்தைப் பெருக்குவது எப்படி?

post image

ஒரு காலத்தில் நிலம் வைத்திருப்பவர்தான் ஊரிலேயே பெரிய பணக்காரர். அப்புறம் கடை/ஃபேக்டரி வச்சிருக்கறவங்க கைக்கு அதிகாரம் மாறுச்சு. நம்ம அப்பா காலத்தில் 'நல்லா படி, அரசு வேலைக்குப் போ... வாழ்க்கை செட்டில் ஆயிடும்'னு சொன்னாங்க. அது அந்தக் காலத்துக்கு கரெக்ட்.

ஆனா, 2026-ல் பணக்காரர் ஆக புதிய விதி என்ன தெரியுமா?

அது 'ஏஐ' (AI) இல்லைங்க... 'ஓனர்ஷிப்' (Ownership) அல்லது 'உரிமை'

இன்னைக்கு எங்க பார்த்தாலும் ஏஐ பற்றிய பேச்சுதான். கட்டுரைகள் எழுதுது, கோடிங் போடுது, டாக்டர்களுக்குக் கூட ஹெல்ப் பண்ணுது. சுருக்கமா சொன்னா, கம்பெனிகள் ஏஐ பயன்படுத்தி கம்மியான ஆட்களை வச்சு அதிக வேலையைச் செய்யப் பழகிட்டாங்க.

சரி, இதனால யாருக்கு லாபம்?

கஸ்டமர்களுக்கு புது ஆப்ஷன் கிடைக்கலாம்; ஊழியர்கள் சீக்கிரம் வேலை முடிக்கலாம். ஆனா, நீண்ட காலத்துல அத்தனை லாபத்தையும் அள்ளப்போவது அந்த பிசினஸின் ஓனர்கள் தான்

ஒரு விவசாயி நிலத்துக்கு ஓனர். ஒரு கடைக்காரர் கடைக்கு ஓனர். ஆனா நாம?

படி -> வேலைக்குப் போ -> கஷ்டப்பட்டு உழை -> சம்பாதி...

இப்படித்தான் நாம் வளர்க்கப்பட்டோம். ஆனா இதில் ஒரு பெரிய ஆபத்து இருக்கு. நாளைக்கே உங்க சம்பளம் நின்னு போனா, எத்தனை நாளைக்கு உங்களால குடும்பத்தை ஓட்ட முடியும்? ஒரு மாசமா? ஆறு மாசமா?

பதில் யோசிக்கவே பயமா இருக்கா? ஏன்னா, நாம வருமானத்தை உயர்த்தின அளவுக்கு, சொத்துக்களின் உரிமையை (Assets) உயர்த்தல!

ரெண்டு நண்பர்களை யோசிச்சுப் பாருங்க. ரெண்டு பேருக்கும் மாசம் 1 லட்சம் சம்பளம். ஒருத்தர் சம்பளம் கூடும்போதெல்லாம் பெரிய கார், புது ஐபோன்-னு செலவு பண்றார். இன்னொருத்தரோ, லைஃபையும் என்ஜாய் பண்ணிக்கிட்டு, சம்பளத்துல ஒரு பகுதியை மியூச்சுவல் ஃபண்ட் மூலம் இந்தியாவின் பெரிய கம்பெனிகளின் பங்குகளில் முதலீடு பண்றார்.

20 வருஷம் கழிச்சு, முதல் ஆள்கிட்ட செலவழிச்ச நினைவுகள் மட்டும்தான் இருக்கும். ரெண்டாவது ஆள், பெரிய கம்பெனிகளின் பார்ட்-ஓனரா மாஸா உட்கார்ந்திருப்பார்!

Ownership

வருமானம் இன்றைக்கு சோறு போடும். ஓனர்ஷிப் நாளைய வாழ்க்கையை வாழ வைக்கும்.

கையில் கோடிகளே தேவையில்லை; மாசம் ஒரு சின்ன தொகையை மியூச்சுவல் ஃபண்டில் SIP முறையில் முதலீடு செய்தாலே, நீங்களும் நாட்டின் மிகப்பெரிய பிசினஸ்களின் 'பார்ட்-ஓனர்' ஆகலாம். கம்பெனி வளர வளர உங்க பணமும் வளரும்!

நிதி சுதந்திரம்னா 40 வயசுல ரிட்டையர் ஆவதோ, வெளிநாட்டுக்கு டூர் போவதோ இல்லை. "நாம் தூங்கும்போதும் நமக்காக நம் பணம் உழைக்கிறது" என்ற பயமில்லாத நிம்மதிதான்!

2026-ல் ஏஐ உலகத்தை மாத்தலாம். ஆனா கேள்வி ஒன்றுதான்: நீங்க வருமானத்தை மட்டும் நம்பியிருக்கீங்களா... அல்லது சொத்துக்களுக்கு ஓனர் ஆகப் போறீங்களா?

2026-ல் நிதி சுதந்திரம் – ஏஐ யுகத்தில் செல்வத்தைப் பெருக்குவது எப்படி? - சிறப்பு ஒர்க் ஷாப்

மாறிவரும் பொருளாதாரத்தில் சாதாரண முதலீட்டாளர்களும் எப்படி நீண்டகால செல்வத்தை உருவாக்கலாம்? அறிந்துகொள்ள, ஆகஸ்ட் 05, புதன் மாலை 7 மணிக்கு நடைபெறும் வெபினாரில் இன்றே இணையுங்கள்!

இப்போதே முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-aug05-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_aug05_2026

குறைந்தது வெளிநாட்டு முதலீடு வெளியேற்றம் - இந்தியப் பங்குச் சந்தை இறக்கம் இனி குறைந்து ஏற்றம் வருமா?

இந்தியப் பங்குச் சந்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்ற, இறக்கமாகவே இருந்து வருகிறது. இந்தியப் பங்குச் சந்தையின் முக்கியமான குறியீடான நிஃப்டி 26500 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமானது. ஆனால், பிற்பாடு அமெரிக்க... மேலும் பார்க்க

கிரெடிட் கார்டு, LPG, ITR, தட்கல் - ஆகஸ்ட் மாதத்தில் மாறும் முக்கிய நிதி விதிகள்!

நாளை புதிய மாதம் தொடங்குகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30-க்குள் நடக்க உள்ள நீங்கள் என்னென்ன நிதி நடப்புகள், நிதி மாற்றங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைப் பார்க்கலாம். வருமான வரிக் கணக்குத் ... மேலும் பார்க்க

ITR Filing நாளை கடைசித் தேதி; 'இந்த' தவறுகளை கண்டிப்பாக Avoid பண்ணிடுங்க; இல்லை, ரீஃபண்டில் சிக்கல்!

வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்கு நாளையே (ஜூலை 31) கடைசி தேதி. ஒருவேளை நாளைக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லையென்றால், தாமதக் கட்டணமாக ரூ.5,000 வசூலிக்கப்படும். தாமதமாக வருமான வரிக் கணக்... மேலும் பார்க்க

NRI-களே உஷார்! இந்தியாவில் நிம்மதியா ரிட்டயர் ஆக 'இந்த 10' விதிகள் தெரியுமா?

வெளிநாட்டில் சம்பாதிக்கும் வரை கொண்டாட்டம். ஆனால், ரிட்டயர்மென்ட்டுக்கு அப்புறம்? நீங்க நிம்மதியான ஓய்வுக்காலத்தை அனுபவிக்க இந்த 10 'கோல்டன் ஃபார்முலா'க்களை ஃபாலோ பண்ணாலே போதும்.ரூபாயின் மதிப்பை கணக்க... மேலும் பார்க்க

50 லட்சம் இருந்தா, மாசம் 25,000 ரூபாய் வருமானம் சாத்தியமா?!

நம்ம ஆளுங்களுக்குக் கையில் ஒரு 50 லட்சம் கிடைச்சா உடனே ஓடிப்போய் பேங்க்ல 'பிக்ஸட் டெபாசிட்' (FD) போடுறதுதான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்."அப்பாடா, மாசம் மாசம் வட்டி வரும், ஜாலியா வாழலாம்"னு நினைப்போம். 10 வருஷத்த... மேலும் பார்க்க

பங்குச் சந்தை முதலீட்டை நம் மக்கள் தவிர்க்கக் காரணம், பயமா... சரியாகப் புரிந்து கொள்ளாததா?

நான் சமீபத்தில் ஒரு வீடியோவைப் பார்த்தேன். ''பங்குச் சந்தையில் குறிப்பிட்ட சில துறைகள் மிகப் பெரிய அளவில் லாபத்தை அள்ளித் தந்துள்ளன. இந்த உண்மையை உங்களிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள்'' என்று சொல்லி,... மேலும் பார்க்க