செய்திகள் :

29 தொகுதிகள்; 60 நாள்கள்! - கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் தவெக | கோவை பொதுக்கூட்டம் ஹைலைட்ஸ்

post image

கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். குறிப்பிட்ட நேரத்தை விட மிகவும் தாமதமாகத்தான் பொதுக்கூட்டம் தொடங்கியது.

கோவை தவெக பொதுக்கூட்டம்
கோவை தவெக பொதுக்கூட்டம்

இந்த நிகழ்வுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களில் செங்கோட்டையன் புகைப்படம் இடம்பெறவில்லை. கோபிசெட்டிப்பாளையத்தில் நடந்த மற்றொரு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, செங்கோட்டையன் முதல் ஆளாக பேசி புறப்பட்டார்.

உண்மையான அரசியல் எழுச்சி

செங்கோட்டையன் பேசும்போது, “இந்த கூட்டம் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது. கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கூட்டம் கூட்டும் அரசியலுக்கு மாறாக, ஒரு ரூபாய் செலவில்லாமல் மக்கள் தன்னெழுச்சியாக திரண்டது உண்மையான அரசியல் எழுச்சியைக் காட்டுகிறது.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

கொங்கு மண்டலத்தில்  29 தொகுதிகள் உள்ளன. இந்த 29 தொகுதிகளிலும் வெற்றி கனியை பறித்து தளபதி காலடியில் சமர்ப்பிப்பதுதான் நம் லட்சியம்” என்றார்.

இறுதிகட்டத்தை எட்டிவிட்டோம்

ஆதவ் அர்ஜுனா பேசும்போது, “இறுதிகட்டத்தை எட்டிவிட்டோம். நமக்கும், திமுகவுக்கும் தான் போட்டி. அதிமுக பற்றி கவலைப்பட வேண்டாம். தவெக 27 சதவீத வாக்கு விகிதத்தை கடந்து, தற்போது 30 சதவீத வாக்கு வங்கியில் நிற்கிறது.

தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

2021 தேர்தலிலேயே கொங்கு மக்கள் திமுகவைப்பற்றி புரிந்து வைத்து அவர்களுக்கு ஓட்டு போடவில்லை. கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து வந்து பணியாற்றுவது எல்லாம் எடுபடாது” என்றார்.

புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், “கோவையில் சிறுவாணி தண்ணீருக்கு தனி சுவை இருப்பதைப் போல, இந்த மக்கள் அரசியலையும் தனித்துவமாக அணுகுகிறார்கள். கோவை மண்டலம்  தமிழக அரசியலில் கோட்டையின் சாவி போன்றது.

pussi ananth

அந்தச் சாவியைச் சரியான தலைமையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. கொங்கு மண்டலம் தளபதியின் கோட்டையாக மாறும். நம்  தலைவரை முதல்வராக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார்

Assam: முஸ்லிம் பிரமுகரை முதல்வர் சுட்டுக்கொல்வது போன்ற வீடியோ; கடும் கண்டனத்தால் நீக்கிய பாஜக

அஸ்ஸாம் மாநிலத்திற்கு இந்த ஆண்டு மத்தியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலையொட்டி மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா எதிர்க்கட்சித் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். மாநில காங்கிரஸ்... மேலும் பார்க்க

Narges Mohammadi: அமைதிக்கான நோபல் வென்றவருக்கு 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - காரணம் என்ன?

2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் ஈரானைச் சேர்ந்த நர்கீஸ் முகமதி. 'குற்றம் செய்ய ஒன்று கூடுதல் மற்றும் கூட்டுச் சதி செய்தல்' என்கிற அடிப்படையில், நேற்று ஈரானிய நீதிமன்றம் முகமதிக்கு 6 ஆண்ட... மேலும் பார்க்க

RSS: ``75 வயதைக் கடந்துவிட்டேன்... தலைவர் பதவிக்கு சாதி ஒரு அளவுகோல் அல்ல" - மோகன் பகவத் ஓப்பன் டாக்

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று டெல்லியில் கலந்துரையாடல்... மேலும் பார்க்க

`போடிநாயக்கனூர் ஏன்?’ - அதிமுகவுக்கு புத்துயிர் அளித்த ஜெயலலிதாவின் முதல் வெற்றி! | முதல் களம் 5

(`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகு... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனங்களால் அதிக நஷ்டமடைவதில் தமிழகம் 3-ஆம் இடம்; நிதிக்குழு சொல்லும் காரணம் என்ன?

இந்தியாவிலேயே பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அதிக நஷ்டத்தைச் சந்திக்கும் மூன்றாவது மாநிலம் 'தமிழ்நாடு' - இப்படி 2022-23 நிதியாண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது 16-வது நிதிக்குழு. முதல் இரண்டு மாநிலங்க... மேலும் பார்க்க