செய்திகள் :

பொதுத்துறை நிறுவனங்களால் அதிக நஷ்டமடைவதில் தமிழகம் 3-ஆம் இடம்; நிதிக்குழு சொல்லும் காரணம் என்ன?

post image

இந்தியாவிலேயே பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அதிக நஷ்டத்தைச் சந்திக்கும் மூன்றாவது மாநிலம் 'தமிழ்நாடு' - இப்படி 2022-23 நிதியாண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது 16-வது நிதிக்குழு.

முதல் இரண்டு மாநிலங்கள் என்ன?

16-வது நிதிக்குழு அறிக்கையின் தொகுதி 1-ன் படி, 2022-23 நிதியாண்டில்...

உத்தரப்பிரதேசம் ரூ.32,430 கோடி நஷ்டத்தையும்,

ராஜஸ்தான் ரூ.18,814 கோடி நஷ்டத்தையும்,

தமிழ்நாடு ரூ. 16,048 கோடி நஷ்டத்தையும் சந்தித்துள்ளன.

இந்த மூன்று மாநிலங்களும் வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான பகுதி அல்லாத மாநிலங்களில் (Non- NEH States) சேர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

TANGEDCO
TANGEDCO

ஏன் இந்த நஷ்டம்?

பிற Non- NEH மாநிலங்களைப் போலவே, இந்த மாநிலங்களுக்கும் நஷ்டம் ஏற்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது 'மின்சாரத் துறை'.

2022-23 நிதியாண்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் (TANGEDCO) ரூ.9,192 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

ஆனால், அதன் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், TANGEDCO-வின் கீழ் இயங்கும், தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் லிமிடெட் (TNPDCL) 2024-25 நிதியாண்டில் ரூ.2,073 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

RSS: ``75 வயதைக் கடந்துவிட்டேன்... தலைவர் பதவிக்கு சாதி ஒரு அளவுகோல் அல்ல" - மோகன் பகவத் ஓப்பன் டாக்

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று டெல்லியில் கலந்துரையாடல்... மேலும் பார்க்க

`போடிநாயக்கனூர் ஏன்?’ - அதிமுகவுக்கு புத்துயிர் அளித்த ஜெயலலிதாவின் முதல் வெற்றி! | முதல் களம் 5

(`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகு... மேலும் பார்க்க

"மாணிக்கம் தாகூர் தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை" - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம் பேரூராட்சியிலுள்ள அகரம் கிராமத்தில் புதிய நியாய விலைக்கடைக் கட்டடத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, ... மேலும் பார்க்க

"அன்புமணி அதிகாரத்திற்கு வந்தால்தான் தமிழகத்தில் மது, கஞ்சா ஒழியும்" - சொல்கிறார் சௌமியா

பாமக சார்பில் நடத்தும் தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணக் கூட்டம் தருமபுரியில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி பேசினார்.சௌமியா அன்புமணி"2014 மக்கள... மேலும் பார்க்க