செய்திகள் :

4 ஆண்டுகளாக தபாலை பதுக்கிய தபால்காரர்; வீட்டில் 6 மூட்டைகளில் சிக்கிய அஞ்சல் - திருப்பூர் அதிர்ச்சி!

post image

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அஞ்சல் துறையின் தபால் சேவைகள் முறையாக கிடைப்பதில்லை என உள்ளூர் மக்கள் தபால் அலுவலகத்தில் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்திருக்கிறார்கள். இது குறித்து விசாரணை மேற்கொண்ட தபால்துறை அதிகாரிகள், அஞ்சல்காரராக பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் முறையாக தபால்களை விநியோகம் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். சந்தேகமடைந்த அஞ்சல்துறை அதிகாரிகள் செந்தில்குமார் வீட்டிற்குச் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்குச் சென்று சேரவேண்டிய தபால்களை விநியோகம் செய்யாமல் மூட்டை மூட்டையாக வீட்டில் குவித்து வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி பல தபால்களை தீயிட்டு கொளுத்தியும் குழிதோண்டி மண்ணிலும் புதைத்திருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

தபால்காரர் செந்தில்குமார்

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து தெரிவித்த அஞ்சல்துறை அதிகாரிகள், "வங்கிகளில் இருந்து வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்ட ஏ.டி.எம் கார்டுகள், ரேஷன் கார்டுகள், ஆதார் கார்டுகள், நீதிமன்ற ஆணைகள், நீட் தேர்வு தொடர்பான தபால்கள் உள்ளிட்ட பல முக்கியமான தபால்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு வினியோகம் செய்யாமல் கடந்த 4 ஆண்டுகளாக இப்படி செய்து வந்திருக்கிறார். 6 மூட்டைகளில் இருந்த தபால்களை அவரிடமிருந்து மீட்டுள்ளோம். செந்தில்குமார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

புதுக்கோட்டை: `வராத குடிநீருக்கு வரி' மல்லிகைப்பூ, அல்வா, காலிக்குடம்... திமுக கவுன்சிலர் போராட்டம்!

புதுக்கோட்டை மாநகராட்சியின் 42-வது வார்டுக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களுக்குக் குடிநீரே வழங்... மேலும் பார்க்க

ஈரோடு: பழைய இரும்பு வியாபாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.8 கோடி பணம் - அதிர்ச்சியில் GST அதிகாரிகள்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான செல்வக்குமார் பெருந்துறை அருகில் உள்ள ஈங்கூர் பகுதியில் பழைய இரும்பு வியாபார கடை நடத்தி வருகிறார். வேறு சில தொழில்களும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந... மேலும் பார்க்க

அமெரிக்காவை உலுக்கிய லேசி பீட்டர்சன் கொலை வழக்கு: தீர்ப்பை கேள்விக்குள்ளாக்கும் புதிய ஆவணப்படம்!

அமெரிக்காவின் நீதித்துறை வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய லேசி பீட்டர்சன் கொலை வழக்கில், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு புதிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. தனது கர்ப்பிணி மனைவியைக் கொன்றதாகக் குற்... மேலும் பார்க்க

`தீர்ப்பு சாதகமா வரணும்' - நீதிபதியின் இருக்கையில்`வெள்ளை கடுகு' தூவி பில்லிசூனியம் வைத்த பெண்

சிவில் வழக்கு ஒன்றில் சாதகமான தீர்ப்பு கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன், கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் மேடை, மேஜை மற்றும் தலைமை அதிகாரி அமரும் நாற்காலிக்கு அருகில் வெள்... மேலும் பார்க்க

'வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி' - ஓய்வூதியத் தொகையை எடுக்க சென்ற 82 வயது முதியவர் அதிர்ச்சி!

வங்கிகளில் சில நேரம் சாப்ட்வேர் பிரச்னை காரணமாக சிலரது வங்கிக்கணக்கில் அதிக பணம் இருப்பதாக கணக்கு காட்டும். இது போன்று பல முறை நடந்திருக்கிறது. பீகாரில் 82 வயது முதியவர் வங்கிக்கணக்கில் ரூ.759 கோடி இர... மேலும் பார்க்க

`மட்டன் போடுவதாக சொல்லிவிட்டு சிக்கன் போட்டுவிட்டார்கள்'- பீகார் திருமணத்தில் வன்முறை; 12 பேர் காயம்

திருமண வீட்டில் சாப்பாடு சரியில்லை என்றால் விருந்தினர்கள் டென்ஷாகிவிடுவது வழக்கம். அவர்களை சமாதானப்படுத்துவது திருமண வீட்டுக்காரர்களுக்கு பெரிய சவாலாக மாறிவிடும். பீகாரில் திருமண வீட்டில் மட்டன்(ஆட்டு... மேலும் பார்க்க