செய்திகள் :

'5 ஆண்டுகள், 65 டன், ரூ.10 கோடி மதிப்பு' - கும்பகோணம் சிற்பக் கூடத்தில் உருவான ஆதிபராசக்தி சிலை!

post image

கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் பகுதியில் தனியார் சிற்பக் கூடம் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் பனமரத்துபட்டி கிராமத்தில் ஆதிபராசக்தி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பஞ்சலோக சிலை வைப்பதற்கு நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதன்படி இந்த பஞ்லோக ஆதிபராசக்தி சிலை தயாரிக்கும் பணியை கொரநாட்டு கருப்பூர் சிற்ப கூடத்திற்கு வழங்கினர். ஸ்தபதி கோபு மற்றும் பணியாளர்கள் சிலையை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டனர். 25 முதல் 50-க்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்கள் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கும்பகோணத்தில் செய்யப்பட்ட ஆதிபராசக்தி சிலை

சிலையின் ஒவ்வொரு பாகங்களும் தனித்தனியாக மெழுகால் வார்த்து அச்சு எடுக்கப்பட்டு, 38 அடி உயர ஆதிபராசக்தி மெழுகு சிலை உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் தங்கம், வெள்ளி, காப்பர், ஈயம், நாகம் ஆகிய 5 உலோகங்களை உருக்கி ஒரே வார்ப்பில் சிலை தயாரிக்கப்பட்டது. அதன்பின்னர் சிற்ப கலைஞர்கள் ஒன்றினைந்து பாலிஷ் செய்து அழகுப்படுத்தி முழு ஆதிபராசக்தி சிலையாக வடிவமைத்தனர். இந்த சிலையை நிறுவுவதற்கு சுமார் 13 அடி உயரத்திற்கு பீடம் தயாா் செய்யப்பட்டது. இந்த சிலை பீடத்துடன் சேர்த்து மொத்தம் 51 அடி உயரமும், 65 டன் எடையும் உள்ளது.

முழு சிலையை உருவாக்குவதற்கு சுமார் 5 ஆண்டுகள் ஆனதாக சிற்ப கூடத்தினர் சொல்கிறார்கள். இதன் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் கும்பகோணத்தில் இருந்து சேலத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதற்காக சேலம் மற்றும் கும்பகோணத்தில் இருந்து ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு இந்த சிலை லாரியில் ஏற்றப்பட்டு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக மேள தாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்தனர்.

சேலம் எடுத்து செல்லப்படும் சிலை

பிரமாண்ட ஆதிபராசக்தி சிலையை பார்த்த அப்பகுதி மக்கள் மெய்சிலிர்த்தனர், மலர்கள் தூவி வணங்கினர். இந்த சிலை ஓரிரு நாட்களில் பனமரத்துபட்டி சென்றடையும் என்கிறார்கள். இது குறித்து சிற்பக்கூடத்தினர் கூறுகையில், "ஐந்து ஆண்டு உழைப்பில் கலை நயத்துடன் இந்த ஆதிபராசக்தி சிலை செய்யப்பட்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாக கருதுகிறோம். இதன் மதிப்பு சுமார் ரூ.10 கோடி இருக்கும்" என்றனர்.

நீலகிரி: பாரம்பரிய முறைப்படி விமர்சையாக நடந்த பொக்காபுர மாரியம்மன் கோயில் திருவிழா!

நீலகிரி மாவட்டம் வனப்பகுதிகளுக்குட்பட்ட மசனக்குடியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பொக்காபுரம் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்திலிருக்கும் பொக்காபுர மாரியம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப... மேலும் பார்க்க

'கருவூர் சித்தரை தரிசிக்க வந்தோம்!' - பக்தி மார்க்கமாக கரூர் வருகைதந்த 50 ஜப்பானியர்கள்

கரூர் மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம். தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற தலங்களில் முதன்மையான திருத்தலம் இது. கருவூர் சித்தர் அவதரித்த ஊர் என்பதால் இங்... மேலும் பார்க்க

`பசில வந்த பிள்ளைக.!' - தாயே வண்டி மலைச்சியா, வண்டிமலையான்... நீங்கதான் துணை' | ஆங்காரிகளின் கதை 5

வண்டிமலையான்ஆங்காரிகளின் கதை 05நாட்டார் தெய்வங்கள் யாவும் புராணங்கதைகள் வழியாக திடீரென உருவாகி வழிபடப்படுபவை அல்ல. சமூக மற்றும் சாதிய அதிகாரங்களுக்கு எதிராக சமரிட்டு பலியான மனிதர்களின் ரெத்த சாட்சியங்... மேலும் பார்க்க

`ஒத்த தங்கைய ஈட்டியால கொல்லுறீங்களே...' ஆணவக்கொலை செய்யப்பட்ட பூச்சியம்மனின் கதை |ஆங்காரிகளின் கதை 4

பூச்சியம்மனின் கதைஆங்காரிகளின் கதை 4“ வலுத்திலுத்தும் தங்கையவள் வர மாட்டேனென்றதினால் கழுத்தறுத்து வெட்டினார்கள் காரிகையை அன்னேரம். வெட்டுப்பட்ட அவள்தலைதான் வேகமாக உருண்டைதையா!…” - பூச்சியம்மன் வில்லுப... மேலும் பார்க்க

கேரளா: 'உலகில் மிக உயரமான கண்ணகி சிலை' - ஆற்றுகால் பகவதி கோயிலில் ரூ.3.5 கோடியில் அமைக்கத் திட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் பெண்களின் காவல் தெய்வம் எனப் போற்றப்படுகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் நடக்கும் பொங்காலை வழிபாட்டி... மேலும் பார்க்க

தைப்பூசம்: 'வேலும் மயிலும் பறபறக்க' - மருதமலை முருகன் திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் | Photo Album

தைப்பூசம் : பழநி முருகனைப் பற்றிய இந்த அபூர்வ தகவல்கள் நீங்கள் அறிந்ததுண்டா? மேலும் பார்க்க