செய்திகள் :

"70 ஆண்டுகளில் ஒரு முறை கூட வைகை அணை தூர்வாரப்படவில்லை; 2 மாதங்களில் நடக்கும்" - நிர்மல் குமார்

post image

மதுரையில் இன்று வைகை நதியை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் நிர்மல் குமார்.

ஆய்விற்குப் பிறகு, நிர்மல் குமார் பேசியதாவது...

"வைகை அணை கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அணை கட்டப்பட்டதிலிருந்து இதுவரை ஒருமுறை கூட தூர்வாரப்படவில்லை. இதனால் அணையின் பல இடங்களில் மணல் குவியல்களும் படிவுகளும் அதிகமாகக் காணப்படுகின்றன.

கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், இதுவரை அவை நிறைவேற்றப்படவில்லை.

கடந்த ஒரு வாரமாக இது குறித்த பல ஆய்வுக் கூட்டங்களை நாங்கள் நடத்தியுள்ளோம்.

வைகை அணை
வைகை அணை

அந்த ஆய்வுகளின்படி, அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சுமார் 18 முதல் 20 சதவீதம் வரை படிவுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையைச் சரிசெய்து தூர்வாரும் பணிகளைத் தொடங்குவதற்கான ஆய்வுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

அனுமதிகள் மற்றும் அரசாணைகள்:

தூர்வாரும் பணிகளுக்காக ஒன்றிய அரசின் ஒப்புதலைக் கோரியும், சுற்றுச்சூழல் அனுமதி கோரியும் இரண்டு நாட்களுக்கு முன்பே தமிழக அரசு சார்பில் அனைத்துக் கடிதங்களும் அனுப்பப்பட்டுவிட்டன.

ஏற்கனவே எட்டு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஓர் அரசாணை நிலுவையில் உள்ளது.

தற்போது புதிய அரசாணை வெளியிடுவதற்கான வேலைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

திட்டமிடல் மற்றும் காலக்கெடு:

ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால், இந்தப் பணிகளை முழுமையாக முடிக்க ஒன்பது ஆண்டுகள் ஆகும் என்றும், அதனை மூன்று கட்டங்களாக செயல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருப்பினும், இந்தப் பணிகளை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்தவுடன், சுற்றுச்சூழல் அனுமதியை ஒரு மாதத்திற்குள் பெற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து அனுமதிகளும் கிடைத்த பிறகு, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தூர்வாரும் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வைகை அணை
வைகை அணை

மழைக்காலங்களில் கிராமங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மணலை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்தும் முறையான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான சலுகைகள் மற்றும் கண்காணிப்பு:

பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வண்டல் மண்ணை எப்போதும் போல இலவசமாக எடுத்துக்கொள்ள முழு அனுமதி உண்டு.

ஆனால், இதனை மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். விவசாயிகளுக்குச் சேர வேண்டிய மண்ணை யாராவது வணிக நோக்கத்திற்காக சட்டவிரோதமாகப் பயன்படுத்தினால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலத்தடி நீர் மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பு:

சின்னமனூர் போன்ற பகுதிகளில் வணிக நோக்கத்திற்காகச் சட்டவிரோதமாக அதிக எண்ணிக்கையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களையும் காடுகளையும் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. எனவே, எந்தவித விதிமீறல்களும் இல்லாத பட்சத்தில் மட்டுமே பட்டாக்கள் வழங்கப்படும்.

வைகை அணை
வைகை அணை

பல நூற்றாண்டுகளாக அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. ஆனால் புதிதாகக் காடுகளை ஆக்கிரமித்து ரிசார்ட் கட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புறவழிச்சாலைத் திட்டங்கள்:

ஆண்டிப்பட்டி மற்றும் உசிலம்பட்டி பகுதிகளில் கடந்த 20-25 ஆண்டுகளாக மக்கள் புறவழிச்சாலை கோரி வருகின்றனர்.

இந்தப் பகுதிகளில் மலைகள் குறுக்கிடுவதால் குடியிருப்புகளை அப்புறப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.

எனவே, மக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் மாற்றுப்பாதை அமைப்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன". என்றார் விரிவாக.

`தொடர்ந்து வட மாநில இளைஞர்கள் கைதுசெய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது!' - அண்ணாமலை

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து தொடர்ந்து சட்ட ஒழுங்கு சிக்கல்கள் நீடிப்பதாக எதிர்க்கட்சிகளும், சமூக ஆரவலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். முதல்வர் விஜய் தலைமையின் கீழ் இயங்கும் காவல்துறை அ... மேலும் பார்க்க

'ட்ரம்பின் ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது' - ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் முரண்படும் இஸ்ரேல்

வருகிற 19-ம் தேதி ஈரான் அமைதி ஒப்பந்தம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில் ஈரான் போரின் முக்கிய தரப்புகளில் ஒன்றான இஸ்ரேல் தனது கர... மேலும் பார்க்க

குழந்தை பாலியல் வன்கொடுமை: 'இந்தச் சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருக்கிறார்' காவல்துறை விளக்கம்

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு உயிரிழந்த கொடூரச் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நேற்று (ஜூன்.14) மாலை 3 வயது குழந்... மேலும் பார்க்க

‘’உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாக பார்க்கும் தலைமை” - எடப்பாடியை விமர்சித்த சி.விஜயபாஸ்கர்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.தவெக ஆட்சிக்கான நம்பிக்கை தீர்மானத்தில் ஆத... மேலும் பார்க்க

`இன்னுயிரையும் பொருட்படுத்தாத அர்ப்பணிப்பு'- கீர்த்தி சக்ரா தேனி ராணுவ வீரரை கௌரவித்த முதல்வர் விஜய்

கீர்த்தி சக்ரா (Kirthi Chakra) என்பது இந்தியாவில் அமைதிக்காலத்தில் வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய ராணுவ விருது ஆகும். போர்க்களத்தில் அல்லாமல், மற்ற இடங்களில் நிகழும் அசாதாரண வீர தீரச் செயல்களுக்காகவ... மேலும் பார்க்க

`கூகுளின் ரத்தக்கறை.!' - சுந்தர் பிச்சையை புறக்கணித்த ஸ்டான்ஃபோர்டு மாணவர்கள் - காரணம் தெரியுமா?

கலிஃபோர்னியாவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா. உலகமே உற்றுநோக்கும் அந்த மேடையில் சிறப்பு விருந்தினராகப் பேச வருகிறார் கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி ... மேலும் பார்க்க