செய்திகள் :

Aamir Khan: "நான் விவாகரத்து செய்ததற்கு அதுவும் ஒரு காரணம்" - ஆமீர் கான் ஓப்பன் டாக்

post image

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இரண்டு முறை விவாகரத்து ஆனவர். தற்போது நேர்காணல் ஒன்றில் தனது வெற்றி தோல்விகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

சமீபத்தில் பத்திரிகை ஆசிரியர் ராஜ் ஷாமானியுடனான உரையாடலில் தனது மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். ஏன் விவாகரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.

அவர் தனது உரையாடலில், "எனது குணம் என்னவென்றால், நான் என் படங்களில் மூழ்கிப்போனேன். நான் என் வேலைகளுக்கு அடிமையாகிப்போனேன். நான் விவாகரத்து செய்ததற்கு அதுவும் ஒரு காரணமாகும். எப்போதெல்லாம் நான் அதிருப்தி அல்லது மன வருத்தத்திற்கு உள்ளாகிறேனோ அப்போதெல்லாம் 3-4 நாட்களுக்கு நான் யாரிடமும் பேச மாட்டேன்.

அமீர் கான் - Aamir Khan
அமீர் கான் - Aamir Khan

அந்த நேரத்தில் என்னை யாராலும் தொடர்பு கொள்ள முடியாது. நான் முழு அமைதியாகிவிடுவேன்'' என்று தெரிவித்தார்.

ஆமீர் கான் சமீபத்தில் தனது லைப் பார்ட்னர் கெளரியைத் திருமணம் செய்யும் திட்டம் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் அமீர் கானின் பேச்சு பேசுபொருளானது.

இது குறித்து பெங்களூரு வாசவி மருத்துவமனையின் மனநல ஆய்வாளர் சுபாஷ் ஹெச்ஜே கூறுகையில், ''உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது, துணைவியாரின் தேவைகளுக்கு இடமளிக்காமல் இருந்தது, மோதல்களின்போது திடீரென விலகிக்கொள்வது போன்றவை மோசமான செயல்கள்.

அவை கடந்த கால தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து வந்திருக்கலாம். இந்தப் பிரச்னை வெறுப்பால் உண்டாவதில்லை. ஆனால் அறியாமை, புறக்கணிப்பு மற்றும் மோசமான முன்னுரிமை காரணமாக உருவாகலாம்.

மோதல்கள் காதலுக்கு முடிவல்ல. உங்களது பார்ட்னரைப் புறக்கணிப்பது உங்கள் உறவைச் சரிசெய்ய உதவாது. இது ஒரு ஆரோக்கியமற்ற சுய-பாதுகாப்பு உத்தி. உங்கள் துணைக்கு நேரம் ஒதுக்குங்கள், உங்களைத் தயார்படுத்தி, அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுங்கள்.

'தவிர்த்தல் முறையில்' இருந்து 'பிரச்னைக்குத் தீர்வு முறை'க்கு மாறுங்கள். ஒருவர் தனது தவறை ஒத்துக்கொள்வது பிரச்னைக்குத் தீர்வு காண முதல் படிக்கட்டாக இருக்கும்" என்று சுபாஷ் கூறினார்.

"ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள், மார்க்கெட்டிங்" - பாலிவுட் சினிமா குறித்து பிரகாஷ் ராஜ் காட்டம்

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ம் தேதி தொடங்கிய கேரள இலக்கியத் திருவிழா நேற்று (ஜன.27) முடிவடைந்தது.இதில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் பாலிவுட் சினிமாவை விமர்சித்துப் பேசியிருக்கி... மேலும் பார்க்க

Mouni Roy: "'சார் உங்களின் கையை எடுங்கள்' எனச் சொன்னதால் ஆபாச வார்த்தையில் திட்டினர்!" - மெளனி ராய்

பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்த மௌனி ராய், தமிழ் மக்களுக்கு 'நாகினி' தொடர் மூலம் பெரியளவில் பரிச்சயமானார். சமீபத்தில் அவர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில், அவருக்கு ஏற்பட்ட மோசமான சம்பவத்தை அவருடைய இன்ஸ்டா... மேலும் பார்க்க

Sikandar: "முதலில் கதை சுவாரஸ்யமானதாக இருந்தது; ஆனால், பிறகு நடந்தவை.!" - ராஷ்மிகா மந்தனா

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்தாண்டு 'மதராஸி', 'சிக்கந்தர்' என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மதராஸி' படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் பாலிவுட் படமான 'சிக்... மேலும் பார்க்க

``அதிகாரத்தில் இருப்பவர்கள் மௌனம் காப்பதும் கவலையளிக்கிறது" - ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி ஆதரவு

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்துப் பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாகப் பேசிய... மேலும் பார்க்க

``ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து அவருக்கு பொருத்தமானதல்ல" - தஸ்லிமா நஸ்ரீன்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்து பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாக பேசியிர... மேலும் பார்க்க

"என் மகள் கட்டாயப்படுத்தினார்" - முன்னாள் மனைவி, பிள்ளைகளோடு மராத்தானில் பங்கேற்ற ஆமீர் கான்!

மும்பையில் நேற்று டாடா மராத்தான் போட்டி நடந்தது. இதையடுத்து தென்மும்பையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இப்போட்டியில் பங்கேற்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தடகள வீரர்கள், வீராங்கனைகள... மேலும் பார்க்க