செய்திகள் :

AI-ஆல் பறிபோன வேலை: விபரீத முடிவெடுத்த இளைஞர்; 18-வது மாடியிலிருந்து குதித்த மனைவி - பெங்களூர் சோகம்

post image

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பானு சந்தர் ரெட்டி (32). இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பீபி ஷாஜியா சிராஜ் என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக வேலை செய்துவந்த பானு சந்தர் ரெட்டி, கடந்த ஆண்டு ஏஐ (AI) காரணமாக ஏற்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் வேலை இழந்தார். அதனால் இந்தியா வந்தவர் தொடர்ந்து வேலை தேடிக்கொண்டிருந்தார். இதற்கிடையில், பீபி ஷாஜியா சிராஜுக்கு பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. அதனால், இந்த தம்பதி 8 மாதங்களுக்கு பெங்களூரின் கோத்தனூர் பகுதியில் குடியேறியது.

தற்கொலை
தற்கொலை

இந்த நிலையில், பீபி ஷாஜியா சிராஜ் சில தினங்களுக்கு முன்பு ஹைதரபாத் சென்றிருந்தார். நேற்று காலை 7:30 மணியளவில் பெங்களூரு திரும்பியிருக்கிறார். வீட்டுக் கதவை தட்டியபோது கதவு திறக்கவே இல்லை. இதனால் பதற்றமடைந்த பீபி ஷாஜியா சிராஜ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டுக் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது பானு சந்தர் ரெட்டி மின்விசிறியில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து உடனே காவல்துறைக்கு தகவலளிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கியது. சடலத்துடன் அறையில் தற்கொலை குறிப்பும் இருந்தது. அதில், பொருளாதார பிரச்னைகள், வேலை இல்லததால் ஏற்பட்ட விரக்தி, உடல் நலப் பிரச்னைகள் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சடத்துக்கு அருகில் அமைதியாக அமர்ந்திருந்த பீபி ஷாஜியா சிராஜ் சுமார் 20 நிமிடங்கள் அமர்ந்திருந்தவர், திடீரென அங்கிருந்து மாயமானர். அடுத்த சில நிமிடங்களில் 18-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

பீபி ஷாஜியா சிராஜ்
பீபி ஷாஜியா சிராஜ்

அமைதியாக தொடங்கிய அந்தக் காலை வேளை, அடுத்தடுத்த கணவன் மனைவியின் தற்கொலை முடிவுகள் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, கடிதத்தின் உள்ளடக்கம் மற்றும் தம்பதியினரின் சமீபத்திய நிதி மற்றும் தனிப்பட்ட சவால்கள் உட்பட, மரணங்களுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆராய்ந்து, காவல்துறை தங்கள் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. வேலையின்மை தொடர்பான கவலையுடனும், சமீபத்திய மாதங்களில் அதிகரித்து வரும் அழுத்தங்களுடனும் அந்த நபர் போராடி வந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலதிக விசாரணை நடந்து வருகிறது.

தற்கொலை தடுப்பு மையம்

விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு பல லட்சம் அபராதம் - புதுச்சேரி போக்குவரத்து போலீசார் அதிரடி!

அதிவேகமாக வரும் வாகனங்களை கண்காணிக்கும் எஸ்.பி. ரட்சனா சிங்எஸ்பி தலைமையில் வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பும் ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டனஅகற்றப்பட்ட ஏர் ஹாரன்களை பார்வையிட்ட எஸ்பி அனுமதிக்கப்பட்ட அளவை விட... மேலும் பார்க்க

'டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு'- தொகுதி மறுவரையறை தோல்வி குறித்து ஸ்டாலின்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

ஓட்டு கேட்க கிளம்பிய நடிகை, கேட்டை திறக்காத தலைவர்; கட்சியில் சேர்ந்ததும் நடிகருக்குக் கிடைத்த கார்

வரும் வியாழக்கிழமை நடக்கவிருக்கிறது தமிழக சட்டசபைத் தேர்தல். ஆளும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபக்கமும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பக்கமும்... மேலும் பார்க்க

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்! - Drone Clicks

கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு; தோல்வியைத் தழுவிய தொகுதி மறுவரையறை மசோதா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

"தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது, நான் கையெழுத்திட்டு தருகிறேன்"- அமித் ஷா வாக்குறுதி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், தொகுதி மறு சீரமைப்பு குறித்தும் கடந்த இரண்டு நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற விவாதத்... மேலும் பார்க்க