செய்திகள் :

AI-ஆல் பறிபோன வேலை: விபரீத முடிவெடுத்த இளைஞர்; 18-வது மாடியிலிருந்து குதித்த மனைவி - பெங்களூர் சோகம்

post image

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பானு சந்தர் ரெட்டி (32). இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பீபி ஷாஜியா சிராஜ் என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக வேலை செய்துவந்த பானு சந்தர் ரெட்டி, கடந்த ஆண்டு ஏஐ (AI) காரணமாக ஏற்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் வேலை இழந்தார். அதனால் இந்தியா வந்தவர் தொடர்ந்து வேலை தேடிக்கொண்டிருந்தார். இதற்கிடையில், பீபி ஷாஜியா சிராஜுக்கு பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. அதனால், இந்த தம்பதி 8 மாதங்களுக்கு பெங்களூரின் கோத்தனூர் பகுதியில் குடியேறியது.

தற்கொலை
தற்கொலை

இந்த நிலையில், பீபி ஷாஜியா சிராஜ் சில தினங்களுக்கு முன்பு ஹைதரபாத் சென்றிருந்தார். நேற்று காலை 7:30 மணியளவில் பெங்களூரு திரும்பியிருக்கிறார். வீட்டுக் கதவை தட்டியபோது கதவு திறக்கவே இல்லை. இதனால் பதற்றமடைந்த பீபி ஷாஜியா சிராஜ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டுக் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது பானு சந்தர் ரெட்டி மின்விசிறியில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து உடனே காவல்துறைக்கு தகவலளிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கியது. சடலத்துடன் அறையில் தற்கொலை குறிப்பும் இருந்தது. அதில், பொருளாதார பிரச்னைகள், வேலை இல்லததால் ஏற்பட்ட விரக்தி, உடல் நலப் பிரச்னைகள் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சடத்துக்கு அருகில் அமைதியாக அமர்ந்திருந்த பீபி ஷாஜியா சிராஜ் சுமார் 20 நிமிடங்கள் அமர்ந்திருந்தவர், திடீரென அங்கிருந்து மாயமானர். அடுத்த சில நிமிடங்களில் 18-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

பீபி ஷாஜியா சிராஜ்
பீபி ஷாஜியா சிராஜ்

அமைதியாக தொடங்கிய அந்தக் காலை வேளை, அடுத்தடுத்த கணவன் மனைவியின் தற்கொலை முடிவுகள் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, கடிதத்தின் உள்ளடக்கம் மற்றும் தம்பதியினரின் சமீபத்திய நிதி மற்றும் தனிப்பட்ட சவால்கள் உட்பட, மரணங்களுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆராய்ந்து, காவல்துறை தங்கள் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. வேலையின்மை தொடர்பான கவலையுடனும், சமீபத்திய மாதங்களில் அதிகரித்து வரும் அழுத்தங்களுடனும் அந்த நபர் போராடி வந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலதிக விசாரணை நடந்து வருகிறது.

தற்கொலை தடுப்பு மையம்

'விஜய்யை பற்றியும் அவருடைய வேட்பாளரை பற்றியும் பேச மாட்டேன்' – இயக்குநர் சுந்தர்.சி

அதிமுக கூட்டணியிலுள்ள புதிய நீதிகட்சி சார்பாக மதுரை மத்திய தொகுதி வேட்பளாராக இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக இன்று மதுரைக்கு வந்திருந்த சுந்தர்.சி செய்தியாளர்களை சந... மேலும் பார்க்க

கூட்டணி ஃபார்முலாவில் எம்ஜிஆர் கில்லியாக இருந்தது எப்படி தெரியுமா? | ‘வாவ்’ வியூகம் 11

‘வாவ்’ வியூகம் 11கூட்டணி ஃபார்முலாவில் எம்ஜிஆர் கில்லிதேர்தல் அரசியலில் கட்சிகள் ஆட்சிக்கு வருவதும், ஆட்சியை இழப்பதும் கூட்டணியால்தான். சரியான கூட்டணி என்பது மக்கள் விரும்பும் கூட்டணியாகவும் இருக்க வே... மேலும் பார்க்க

"விஜய்யுடன் பேசி NDA கூட்டணி ஆட்சி அமைக்கும்.!"- மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சொல்வதென்ன?

பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தவெக தலைவர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்திருக்கிறார். புதுச... மேலும் பார்க்க

திமுக வேட்பாளர் வில்வநாதன் குடைச்சல்; ஒன்றியச் செயலாளர் ராஜினாமா! - அடிசறுக்கும் ஆம்பூர் தொகுதி?

ஆதிக்க சக்திகளின் அழுத்தம்திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியக் குழுவின் சேர்மனாக இருப்பவர் அகரம்சேரி சுரேஷ்குமார். தி.மு.க-வில், குடியாத்தம் வடகிழக்கு ஒன்றியச் செயலாளராகவும் கட்சிப் பணியாற்றிவந்த ... மேலும் பார்க்க

தேர்தலில் தோல்வியே காணாத கலைஞர்; 1984 தேர்தலில் மட்டும் போட்டியிடாதது ஏன்? | Vote Vibes

தமிழக அரசியல் வரலாற்றில் தோல்வியே காணாத தலைவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி. 1957-ம் ஆண்டு போட்டியிட்ட குளித்தலையில் தொடங்கி, 2016-ம் ஆண்டு போட்டியிட்ட த... மேலும் பார்க்க

``இனி உங்களுக்கு உதவப்போவதில்லை..." - உலக நாடுகள் மீது விரக்தியில் ட்ரம்ப்!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தொடங்கியப் போர் உலகளவில் பெரும் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஹோர்முஸ் ஜலசந்தியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முடிவில் தொடர்ந்து இரு தர... மேலும் பார்க்க