செய்திகள் :

AI உதவியால் Hydroponics கஞ்சா; Digital Currency ஆன ரூ.4.5 கோடி; MBA பட்டதாரிகள் கைதான பின்னணி என்ன?

post image

புனே ஹின்சேவாடி என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஹைட்ரோபோனிக் முறையில் கஞ்சா வளர்க்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீஸார் ரெய்டு நடத்தி போதைப்பொருள் தயாரித்தவர்களைக் கைது செய்தனர்.

ஹைட்ரோபோனிக் கஞ்சா உற்பத்தி செய்த இரண்டு பேரும் எம்.பி.ஏ. பட்டதாரிகள் ஆவர். இரண்டு பேரும் படித்துவிட்டு வேலையில் இருந்தனர். ஆனால் அவர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஹைட்ரோபோனிக் முறையில் கஞ்சா வளர்த்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தி மும்பையைச் சேர்ந்த ஒரு எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் மற்றும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.3.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சி

அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் போதைப்பொருள் விற்பனை மற்றும் வர்த்தகத்திற்கு கிரிப்டோகரன்சி, டார்க் வெப், சோசியல் மீடியாவைப் பயன்படுத்துவது தெரிய வந்தது.

இது குறித்து புனே துணை போலீஸ் கமிஷனர் முண்டே கூறுகையில், ''கைது செய்யப்பட்டவர்கள் கிரிப்டோகரன்சி முறையைப் பயன்படுத்தக்கூடும் என்று எங்களுக்குச் சந்தேகம் வந்தது. உடனே அவர்களது சோசியல் மீடியா உட்பட அனைத்து வகையான டிஜிட்டல் கணக்குகளையும் ஆய்வு செய்தோம். அவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் கிடைத்த பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றி வைத்திருந்தனர் என்பது தெரியவந்தது. அவர்கள் 25 கிரிப்டோ கணக்குகளில் ரூ.4.5 கோடியைப் போட்டு வைத்திருந்தனர்.

அந்தக் கிரிப்டோகரன்சி கணக்குகளை முடக்கவும், எப்படி அவர்கள் எந்த வங்கிக்கணக்கு மூலம் பணத்தை இது போன்று கிரிப்டோகரன்சியாக மாற்றினர் என்பதைத் தெரிந்து கொள்ள மத்திய நிதி புலனாய்வுத்துறையின் உதவி கோரப்பட்டுள்ளது'' என்றார்.

போதைப்பொருள் தயாரிக்கத் தேவையான பொருட்களை பூட்டானைச் சேர்ந்த ஒருவர் எல்.இ.டி பல்ப் மூலம் அனுப்பி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பல்ப் வந்த பார்சல் கிடைத்துள்ளது. அதிலுள்ள முகவரியின் அடிப்படையில் பூட்டானைச் சேர்ந்த நபரைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருநாட்டு போலீஸாரின் உதவியை நாடி இருப்பதாக புனே போலீஸார் தெரிவித்தனர். தாய்லாந்தில் இருந்து போதைப்பொருள் முதலில் பூட்டான் வருகிறது. அங்கிருந்து புனே வந்திருப்பது தெரிய வந்துள்ளது. போதைப்பொருள் வாங்கவும் விற்கவும் கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கோத்தகிரி: அனுமதியின்றி கிணறு தோண்டிய‌ காட்டேஜ் நிர்வாகம்; மண்ணில் புதைந்து தொழிலாளர்கள் இறந்த சோகம்

நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி அருகில் உள்ள ஒன்னட்டி பகுதியில் தனியார் காட்டேஜ் கட்டுமான பணிகள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. ஆஃபா கன்ஸ்ட்ரக்ஷன் என்கிற தனியார் நிறுவனத்தினர் கட்டுமானப் பணிகளை மே... மேலும் பார்க்க

முதியவரிடம் ரூ.3 கோடி மோசடி; மகளிர் சுய உதவிக்குழு தலைவியின் மாஸ்டர் பிளான்; சிக்கியது எப்படி?

சென்னை அடையாறு பகுதியில் வசித்து வருபவர் சத்தியநாராயணன், (68). பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்த இவரை கடந்த 2025 ஜீலை மாதம் பெங்களூரில் உள்ள Fyers Securities என்ற பங்கு சந்தை முதலீட்டு நிறுவன அதிகார... மேலும் பார்க்க

நீலகிரி: டாஸ்மாக் கடையில் ரூ.10 கூடுதலாகக் கேட்ட பணியாளர்கள்; கடைக்குள் நுழைந்து தாக்கிய தந்தை, மகன்

தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபாட்டிலுக்குக் கூடுதலாக 10 ரூபாயைப் பெறுவதாக பணியாளர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.மதுபாட்டில்களில் க... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள்; 500 வாழைகள் வெட்டிச் சாய்ப்பு; பதற்றத்தால் போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், நவலடியூரைச் சேர்ந்தவர் ஆறுமுகராஜா. விவசாயியான இவருக்கும், அருகிலுள்ள வெள்ளூரைச் சேர்ந்த காசி என்பவருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கருங்க... மேலும் பார்க்க

நெல்லை: பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை; குற்றம் நிரூபிக்கப்பட்டது எப்படி?

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான கூலித்தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இவருக்கு 14 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் 9-ம் வகுப்பு படித்து வருக... மேலும் பார்க்க

சென்னை: மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி - ராணிப்பேட்டை பெண் கைது!

சென்னை, அசோக்நகர்ப் பகுதியில் வசித்து வருபவர் ஆண்டனி அமிர்தராஜ். இவர், பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 2023- ம் ஆண்டு ஆண்டனி அமிர்தராஜ், தன்னுடைய மகனை கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்க்க முயற்சி ... மேலும் பார்க்க