செய்திகள் :

AI வளர்ச்சி: ``நீங்களும் நானும் தான் கடைசி தலைமுறை" - வெளிப்படையாக பேசிய புனீத் சந்தோக்

post image

Lமைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் புனீத் சந்தோக் மற்றும் உலகின் பெரிய ஐடி நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோர்  Microsoft AI Tour என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தியா வந்திருக்கின்றனர்.

அவர்கள் மும்பையில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது பேசிய புனீத் சந்தோக், `` பெரும்பாலானவர்கள் AI செயற்கை நுண்ணறிவு வேலைகளைப் பறித்துவிடும் என அஞ்சுகிறார்கள். ஆனால், உண்மையில் AI தானாகவே வேலைகளைப் பறிக்காது.

மைக்ரோசாப்ட் இந்தியா தலைவர் புனீத் சந்தோக்
மைக்ரோசாப்ட் இந்தியா தலைவர் புனீத் சந்தோக்

இருப்பினும், வேலைவாய்ப்பு இழப்புக்கு உண்மையான அச்சுறுத்தல் 'கற்றுக்கொள்ள மறுப்பது' என்ற வடிவத்தில் வரும். இந்த புதிய தொழில்நுட்பம், தற்போதுள்ள வேலைகளைப் பகுப்பாய்வு செய்து பணிகளை பிரித்துவிடும். அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு வேகமாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

அதனால், தொழில்துறை அமைப்பே மாறிவருகிறது. அதாவது ஒருமுறை கற்றுக்கொண்டு, அந்த அறிவை வாழ்நாள் முழுவதும் ஒரு தொழிலுக்குப் பயன்படுத்துவது என்ற கருத்து இப்போது சிதைந்து வருகிறது. நீங்களும் நானும் தான் நிலையான, நீண்ட கால வேலைவாய்ப்புகளைக் கொண்ட கடைசித் தலைமுறை. நம் குழந்தைகள் பலவிதமான பணிகளைச் செய்வார்கள்.

எனவே இந்த புதிய தொழில்நுட்ப யுகத்தில் கற்றல் என்பது மிகவும் அவசியமானது. அதனால் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இந்தியாவில் டெல்லியில் வசிப்பவரை விட ஆக்ஸிஜன் மாஸ்க்கின் முக்கியத்துவத்தை வேறு யாரும் நன்கு புரிந்துகொள்ள முடியாது. அப்படித்தான் இந்த வளர்ந்து வரும் AI உலகம்." என்றார்.

அதைத் தொடர்ந்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, ``செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எந்தவொரு நிறுவனத்திற்கும் தரவுதான் மிகவும் மதிப்புமிக்க வளம். ஆனால், அந்தத் தரவை நீங்கள் செயற்கை நுண்ணறிவுக்குப் பொருத்தமான சூழலில் பயன்படுத்த வேண்டும்.

மைக்ரோசாப்ட் சத்யா நாதெல்லா
மைக்ரோசாப்ட் சத்யா நாதெல்லா

மகாராஷ்டிரா மைக்ரோசாஃப்ட்டின் செயற்கை நுண்ணறிவு கருவிகளை இணையப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தி வருகிறது. மகாராஷ்டிராவின் 23 காவல் நிலையங்களில் செயல்பாட்டில் உள்ள நாக்பூர் திட்டம் மூலம் இணையக் குற்ற விசாரணைகளை 80 சதவீதம் குறைத்திருக்கிறது.

மேலும் மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 1,100 காவல் நிலையங்களுக்கும் இதை விரிவுபடுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இது தவிர, அதானி சிமென்ட், யெஸ் வங்கி, ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் எல்டிஐமைண்ட்ரீ போன்ற பல வாடிக்கையாளர்களுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் பணியாற்றி வருகிறது" என்றார்.

ஆன்லைன் பேமென்ட் ஆப்களில் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா? உடனே செய்ய வேண்டியவை!

இன்றைய யு.பி.ஐ, Gpay, Paytm காலகட்டத்தில், பணம், காசை கண்ணில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. கட்டணம் செலுத்துவது தொடங்கி பண பரிவர்த்தனை வரை அனைத்தும் சில கிளிக்குகளில் 'டக்'கென முடிந்துவிடுகிறது. இதில் சில... மேலும் பார்க்க

Microsoft: இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு; சத்யா நாதெல்லாவின் அறிவிப்பும் மோடியின் பதிலும்

இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு செய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.உலகளாவிய பெருநிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் இந்த... மேலும் பார்க்க

'Cloudflare'-ன் சேவையில் திடீர் துண்டிப்பு; அச்சத்தில் ஆடிய நிதி நிறுவனங்கள்; என்னதான் பிரச்னை?

உலகெங்கும் இருக்கும் பல மில்லியன் நிறுவனங்களின் இணையதளங்கள் பாதுகாப்பாகவும், வேகமாகவும் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் முன்னணி கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க்கான 'Cloudflare'-ன் சேவையில் இன்று காலை 1... மேலும் பார்க்க

``இந்தியாவின் 2-வது ஏஐ டீச்சிங் அசிஸ்டன்ட்'' -துணிக்கடை பொம்மையில் அரசு பள்ளி மாணவர் சாதனை

உலகில் ஒரு மூளைமுடுக்கு எங்கும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ).அதற்கேற்ப, ஏஐ-ன் நன்மைகளையும் அதன் பயன்பாடுகளையும் புரிந்துகொண்டு, பல்வேறு கண்டுபிடிப்புகளை ஆர்வத... மேலும் பார்க்க

Sanchar Saathi App: சுற்றும் சர்ச்சைகள்; அந்த ஆப்பில் அப்படி என்ன இருக்கிறது?

> இனி உற்பத்தி ஆகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் அரசின் சைபர் பாதுகாப்பு ஆப்பான 'சஞ்சார் சாத்தி' கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். > இந்த ஆப்பை பயனாளர்கள் அன்இன்ஸ்டாலோ, டிஸ்ஏபிளோ செய்ய முடியாத... மேலும் பார்க்க

WhatsApp: புதிய கெடுபிடி; 'இதை' செஞ்சுடுங்க மக்களே! - மத்திய அரசின் அதிரடி

வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஸ்நாப்சாட், ஷேர்சாட் உள்ளிட்ட ஆப்கள் பயன்பாட்டிற்கு புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது மத்திய அரசு. அவை என்ன? > இந்த ஆப்களை எந்த மொபைல் போன் நம்பரில் இயக்குகிறோ... மேலும் பார்க்க