செய்திகள் :

Ali Larijani: ட்ரம்பை தொடர்ந்து சாடி வந்த ஈரான் தலைவர் லரிஜானியைக் கொன்ற இஸ்ரேல் - யார் இவர்?

post image

ஈரான் போர் தொடக்கத்தின் முதல் நாளிலேயே (பிப்ரவரி 28), அந்த நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொலை செய்யப்பட்டார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்தச் செயலுக்கு தொடர்ச்சியாக கடும் எதிர்வினையாற்றி வந்தார் அலி லரிஜானி. இவர் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ஆவார்.

ட்ரம்ப் மிரட்டலும், லரிஜானியின் பதிலடிகளும்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவில்லை என்றால், அதுவரையிலான தாக்குதலை விட 20 மடங்கு அதிக தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.

அலி லரிஜானி
அலி லரிஜானி

இதற்கு லரிஜானி, 'உங்களுடைய உயிருக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று ட்ரம்பிற்கு பதிலடி கொடுத்திருந்தார்.

அடுத்ததாக, ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், அந்தப் பிராந்தியம் முழுவதும் அரை மணிநேரத்திற்குள் இருளில் தள்ளப்படும் என்று சாடி இருந்தார்.

இப்படி லரிஜானி தொடர்ந்து ட்ரம்பிற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். ஆனால், ட்ரம்போ தனக்கு லரிஜானி யாரென்றே தெரியாது... அவருடைய அச்சுறுத்தல் எல்லாம் ஒரு பொருட்டல்ல என்பது போல டீல் செய்து வந்தார்.

லரிஜானி கொலை

இந்த நிலையில், நேற்று இரவு நடந்த இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் லரிஜானி உயிரிழந்துள்ளார். இதை ஈரான் அரசாங்கமும் உறுதி செய்துள்ளது.

ஈரானை ஆளும் குண்டர் கும்பலான புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தலைவர் என்று லரிஜானியை முன்பு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டிருந்தார்.

ஈரானின் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் பொதுவெளியில் காணப்படுவதில்லை.

அவருக்குப் பதிலாக இதுவரை லரிஜானி தான் ஈரானின் குரலாக இருந்து வந்தார். மேலும், ஈரானின் உச்ச தலைவர் கொடுக்கும் ஆணைகளை நிறைவேற்றும் நபராகவும் இவர் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குளித்தலை: `எங்க தொகுதியில இதையெல்லாம் கொஞ்சம் கவனிங்க!' - மக்கள் முன்வைக்கும் `27' கோரிக்கைகள்

கரூர் மாவட்டத்தில் இருக்கிறது, குளித்தலை சட்டமன்றத் தொகுதி. முன்னாள் முதல்வர் கலைஞர் தனது முதல் தேர்தலைச் சந்தித்து வெற்றிபெற்ற தொகுதி. இந்த தொகுதியில் தற்போது தி.மு.க-வைச் சேர்ந்த மாணிக்கம் சட்டமன்ற ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவரம் எப்போது வெளியாகும்? - டெல்லியில் இபிஎஸ் பதில்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்... மேலும் பார்க்க

'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விசுவாசம்.!' - கொந்தளிக்கும் தவெக அருண் ராஜ்

தவெகவின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளரான அருண் ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. பிரசாரத்தின் போது மக்களுக்கு விநியோகிப்பதற்காக அருண் ராஜ் தரப்பில் வாங்கி வைக்கப்பட்டிரு... மேலும் பார்க்க

நினைவுச் சுவடுகள் 10: ஜனநாயக அரசியலின் நினைவுச் சின்னம் - சைக்கிள் பேரணி!

சைக்கிள் பேரணிநினைவுச் சுவடுகள் 10தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் என்றால், பெரிய பொதுக்கூட்டங்கள், திரைப்படக் காட்சிகளை நினைவூட்டும் ஊர்வலங்கள், பரபரப்பான மேடைப் பேச்சுகள் என பல அம்சங்கள் நினைவுக்கு வரும... மேலும் பார்க்க

நாங்க இருக்கிறோம்! ட்ரம்ப் திட்டியபிறகு ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆதரவு

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதல் காரணமாக ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அந்நாடு மூடிவிட்டது. இதனால் அந்த நீர்வழித்தடம் வழியாக கச்சா எண்ணெயை கப்பல்கள் எடுத்... மேலும் பார்க்க

திமுக கொடுத்த முதல் அசைன்மெண்ட்! - செய்து காட்டி இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பாரா ஓ.பன்னீர்செல்வம்?

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த கையோடு தென் மாவட்டங்களில் சுற்றுப்பயண பிரசாரம் செய்வதற்காக கிளம்பியிருக்கிறார். ’ஓபிஎஸ்ஸின் கூடாரம் காலியாகி விட்டது, அவருடன் யாரும் இல்லை’ என்ற ... மேலும் பார்க்க