செய்திகள் :

'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விசுவாசம்.!' - கொந்தளிக்கும் தவெக அருண் ராஜ்

post image

தவெகவின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளரான அருண் ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. பிரசாரத்தின் போது மக்களுக்கு விநியோகிப்பதற்காக அருண் ராஜ் தரப்பில் வாங்கி வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையால் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் திமுகவுக்கு விசுவாசமாக செயல்படுவதாக அருண்ராஜ் காட்டமாக ஒரு பதிவை இட்டுள்ளார்.

அருண் ராஜ்
அருண் ராஜ்

அருண் ராஜ் வெளியிட்டிருக்கும் பதிவில், 'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள்.

நேற்றைய தினம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லசமுத்திரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நடத்தி வரும் புகழ்பெற்ற பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான Raid நடத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி ஒரு இடத்தில் கணக்கில் காட்டப்படாத பணமோ பொருட்களோ பதுக்கி வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால், பறக்கும் படையினர் வருமான வரித்துறையினருக்கு தகவல் அனுப்பி விட்டு, அந்த இடத்திற்கு விரைந்து சென்று, அந்த இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும்; அந்த இடத்திற்குள் நுழைந்து சோதனை செய்ய பறக்கும் படையினருக்கு அதிகாரம் இல்லை; முறையான வாரண்ட் உடன் வருமான வரித்துறையினர் தலைமையில் தான் சோதனை/ரெய்டு நடத்தப்பட வேண்டும்.

Arun Raj TVK
அருண் ராஜ் | Arun Raj - TVK

ஆனால் நேற்றைய தினம் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் பேரூராட்சியில் இயங்கி வரும் புகழ்பெற்ற AKV பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் திரு. M. வெற்றிவேல் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான சோதனை நடத்தியுள்ளனர்; சோதனைக்குப் பிறகு அங்கு எந்த ஒரு பணமோ பொருளோ இல்லை என்பதை உறுதிப்படுத்தி சான்றிதழ் அளித்து சென்று இருக்கிறார்கள்.

இவ்வாறு சோதனை நடத்தவோ, சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி கடிதம் கொடுக்கவோ தேர்தல் பறக்கும் படையினருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.

இதேபோல் 16-03-2026 அன்று திருச்செங்கோடு வரகுராம்பட்டியில், பட்டேல் நகர் பகுதியில் பூட்டி இருந்த வீட்டிற்குள் திரு.பரமராஜ் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் அத்துமீறி உள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த Rs 23,000/- மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

முறையான ஆவணத்துடன், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு பொருள் வழங்க திட்டமிடப்பட்டு, 15-03-2026 அன்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அன்று நடக்கவிருந்த போட்டிகள் நடத்தப்படாமல் பரிசு பொருட்கள் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க-வினர் தொடர்ந்து தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட அழுத்தம் கொடுப்பதும், சில அதிகாரிகள் அந்த அழுத்தத்திற்கு பணிந்து செயல்படுவதும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் சூழலை உருவாக்காது. மேற்கண்ட அதிகாரிகளை உடனடியாக பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அருண் ராஜ் குறிப்பிடும் கடிதம்
அருண் ராஜ் குறிப்பிடும் கடிதம்

அதேபோல் மூன்று வாரங்களுக்கு முன்பு ஈரோடு பள்ளிபாளையத்தில் இயங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி Dr கண்ணன் அவர்களின் ராதா Ortho மருத்துவமனையோடு இணைந்து நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் கொடுக்கப்பட்ட மருந்து மாத்திரைகள், ஊட்டச்சத்து டானிக் மற்றும் Boost பாட்டில்களை, ஏதோ தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு கொடுக்கப்பட்டது போல சித்தரித்து ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வரும் சமூக ஊடக செயல்பாட்டாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்' எனக் கூறியிருக்கிறார்.

குளித்தலை: `எங்க தொகுதியில இதையெல்லாம் கொஞ்சம் கவனிங்க!' - மக்கள் முன்வைக்கும் `27' கோரிக்கைகள்

கரூர் மாவட்டத்தில் இருக்கிறது, குளித்தலை சட்டமன்றத் தொகுதி. முன்னாள் முதல்வர் கலைஞர் தனது முதல் தேர்தலைச் சந்தித்து வெற்றிபெற்ற தொகுதி. இந்த தொகுதியில் தற்போது தி.மு.க-வைச் சேர்ந்த மாணிக்கம் சட்டமன்ற ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவரம் எப்போது வெளியாகும்? - டெல்லியில் இபிஎஸ் பதில்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்... மேலும் பார்க்க

நினைவுச் சுவடுகள் 10: ஜனநாயக அரசியலின் நினைவுச் சின்னம் - சைக்கிள் பேரணி!

சைக்கிள் பேரணிநினைவுச் சுவடுகள் 10தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் என்றால், பெரிய பொதுக்கூட்டங்கள், திரைப்படக் காட்சிகளை நினைவூட்டும் ஊர்வலங்கள், பரபரப்பான மேடைப் பேச்சுகள் என பல அம்சங்கள் நினைவுக்கு வரும... மேலும் பார்க்க

நாங்க இருக்கிறோம்! ட்ரம்ப் திட்டியபிறகு ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆதரவு

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதல் காரணமாக ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அந்நாடு மூடிவிட்டது. இதனால் அந்த நீர்வழித்தடம் வழியாக கச்சா எண்ணெயை கப்பல்கள் எடுத்... மேலும் பார்க்க

திமுக கொடுத்த முதல் அசைன்மெண்ட்! - செய்து காட்டி இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பாரா ஓ.பன்னீர்செல்வம்?

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த கையோடு தென் மாவட்டங்களில் சுற்றுப்பயண பிரசாரம் செய்வதற்காக கிளம்பியிருக்கிறார். ’ஓபிஎஸ்ஸின் கூடாரம் காலியாகி விட்டது, அவருடன் யாரும் இல்லை’ என்ற ... மேலும் பார்க்க

எ.வ.வேலு ஸ்கெட்ச் ; வளைத்து இழுக்கும் அறிவாலயம் - நழுவும் செம்மலை!

தி.மு.க-வுக்கு வரும் அ.தி.மு.க-வினர்:ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் முக்கிய தலைவர்கள், அதிருப்தியில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குத் தாவுவது, சேர்வது வழக்கமான ஒன்று. ஆனால், யாரும் யோசித்துக் கூட ... மேலும் பார்க்க