செய்திகள் :

Battle ஜாக்கெட் முதல் Bandit ஜாக்கெட் வரை - 'நோ' ஆங்கிலேய கால டிரெஸ் கோட்; மாறும் இந்திய ராணுவ உடை!

post image

ஆங்கிலேயர்கள் வெளியேறி கிட்டத்தட்ட 79 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இந்தியாவில் இன்னும் பல நடைமுறைகள் காலனியத்துவதின் தொடர்ச்சியாகவே இருக்கின்றன.

அதில் ஒன்று, 'இந்திய ராணுவ வீரர்களின் சீருடை'.

அதை தற்போது மாற்றுவதற்கான கையேடு 'இந்திய ராணுவத்தின் புதிய சீருடை விதிமுறைகள் - 2026'-ஐ வெளியிட்டுள்ளது மத்திய அரசு. அதில் கூறப்பட்டுள்ளவை...

ஆங்கிலேயர் காலத்து சின்னங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் வார்த்தைகளைப் பயன்பாட்டிலிருந்து நீக்கிவிட்டு, ராணுவ பாரம்பரியத்தை இந்தியாவின் இறையாண்மை மற்றும் தேசிய பண்பாட்டிற்கு ஏற்ப மாற்றுவதை இந்தப் புதிய விதிகள் நோக்கம்.

Battle Jacket
Battle Jacket
Bandi Jacket
Bandi Jacket
புதிதாக மாறும் ராணுவ உடைகள்
புதிதாக மாறும் ராணுவ உடைகள்
புதிதாக மாறும் ராணுவ உடைகள்
புதிதாக மாறும் ராணுவ உடைகள்

ராணுவ அதிகாரிகள் இனி தங்களின் முறையான சிவில் உடையின் ஒரு பகுதியாக, இந்தியாவின் பாரம்பரிய 'பண்டி ஜாக்கெட்'டை (Bandi Jacket) அணியலாம். இது இந்தியப் கலாச்சார அடையாளத்தை ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

'பேட்டில் ஜாக்கெட்' (Battle Jacket) என்கிற புதிய குளிர்கால சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பேட்டில் ஜாக்கெட், தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஜெர்சி அடிப்படையிலான குளிர்கால சீருடையை (Dress 3A) வரும் ஜூன் 2029-க்குள் படிப்படியாக முழுமையாக மாற்றியமைப்படும்.

சீருடையில் இருக்கும் போது...

விசித்திரமான அலங்காரம், அனுமதியற்ற தாடி, வெளியில் தெரியும்படி மின்னணு சாதனங்களை வைத்திருப்பது , பச்சை குத்திக்கொள்வது, உடலில் துளையிடுவது, சீருடையில் இருக்கும்போது அழகுச் சாதன ஒப்பனைகள் செய்வது ஆகியவற்றிற்கு புதிய கையேட்டின் படி, தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கூட்டங்கள், மத வழிபாட்டுக் கூட்டங்கள், போராட்டக் களங்கள், திருமண விழாக்கள், தனியார் விருந்துகள், முறையான அனுமதியின்றி பணப் பலன்களுக்காக ஊடகங்களில் தோன்றுவது போன்ற இடங்களில் சீருடை அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.!

`ட்ரம்ப் பிறந்த நாளில் கூடாது' - அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை அறிவிக்க நள்ளிரவு வரை இழுத்தடித்த ஈரான்

அமெரிக்கா, ஈரான் இடையேயான போர்நிறுத்த பேச்சுவார்த்தை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து கொண்டிருந்தது. எதாவது ஒரு பிரச்னையில் பேச்சுவார்த்தை தடைபட்டுக்கொண்டே இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு த... மேலும் பார்க்க

மம்தா கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் `தேசியவாத மக்கள் கட்சி' எனும் கட்சியில் இணைய முடிவு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவராக 60 எம்.எ... மேலும் பார்க்க

'வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதல்வர் இன்று.!' - உதயநிதி காட்டம்

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்து வரு... மேலும் பார்க்க

ஈரான் அமைதி ஒப்பந்தம் முடிவாகிறதே... ஹார்முஸ் நீர்ச்சந்தி எப்போது திறக்கப்படும்? சுங்க வரி உள்ளதா?

ஈரானில் போர் தொடங்கியது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், உலக நாடுகளை நேரடியாகப் பாதித்த ஒன்று - ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல். இதனால், எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்ச... மேலும் பார்க்க

ஓமனில் உயிரிழந்த தமிழக மாலுமி நிஷாந்த் - உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை தீவிரம்

ஓமன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் உடல்நல குறைவால் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மாலுமி நிஷாந்தின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு... மேலும் பார்க்க

'தமாகா கட்சியை விட்டு விலகுகிறேன்; விலகினாலும்.!' - மாநில பொதுச் செயலாளர் யுவராஜா உருக்கம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் யுவராஜா தவெகவில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் தமாகா கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ... மேலும் பார்க்க