செய்திகள் :

'BC மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் அதிகாரம் இல்லை!' - பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சர்ச்சை பதில்!

post image

ஆணவப்படுகொலைகளுக்கு எதிராகவும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சர்ச்சைக்குரிய வகையில் பதில் கூறியிருக்கிறது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

ஆம் ஆத்மி கட்சியின் மாநில வழக்கறிஞர் அணியை சேர்ந்த வழக்கறிஞர் சங்கர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் முக்கியமாக, 'ஆணவப்படுகொலைகளுக்கு எதிராகவும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றம் புரிபவர்களின் மனநிலையையும் சமூக சூழலையும் ஆய்ந்து குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்' என கோரியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், 'இது எங்களின் ஆய்வு வரம்புக்குள் வராது' எனக் கூறியிருக்கிறது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய வழக்கறிஞர் சங்கர், 'SC/ST ஆணையம் பட்டியலின பழங்குடியின மக்களுக்கு சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுக்கு நான்கு முறை விழிப்புணர்வு முகாம்களை நடத்தியிருக்கிறது. எனில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சாதிய வன்கொடுமைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் என்ன? பல சாதிய வன்கொடுமைகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள் சாதிய மனோபாவத்தோடு நடந்துகொள்கின்றனர்.

பிற்படுத்தப்பட்டோர் ஆணைய பதில்
பிற்படுத்தப்பட்டோர் ஆணைய பதில்
வழக்கறிஞர் சங்கர்
வழக்கறிஞர் சங்கர்
ஆம் ஆத்மி கடிதம்
ஆம் ஆத்மி கடிதம்

அதேமாதிரி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குள்ளாகவே பிரிவினைகளால் மோதலும் ஏற்படுகிறது. இதையெல்லாம் தவிர்க்க அவர்களின் சமூக சூழலை புரிந்துகொண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தானே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த அடிப்படை விஷயத்தை கூட ஆணையத்தால் செய்ய முடியாது எனக் கூறுவது வேதனையளிக்கிறது' என்றார்.

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர... மேலும் பார்க்க

வாரிய தலைவர் பதவிக்கு 5 'அன்பு பரிசு'கள்; முதல்வருக்கு நெருக்கத்தில் ஜரூராக நடக்கிறதா வசூல் வேட்டை?

'யாராவது லஞ்சம் கேட்டா உங்க அண்ணன் விஜய்யோட ஆட்சி நடக்குதுன்னு சொல்லுங்க...' என முதல்வர் விஜய் கரூரில் பேசியிருந்தார். ஆனால், கோட்டையில் முதல்வரின் நெருக்கமான வட்டத்திலேயே ஒரு முக்கிய புள்ளியின் பெயரி... மேலும் பார்க்க

"தேர்தலுக்கு 5 வருஷம் காத்திருக்க தேவையில்ல; திமுகவுக்கு ஆசை காட்டும் பாஜக.!"- கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருப்பத்தூரில் இன்று (ஜூலை. 18) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "என்னுடைய புரிதல் என்னவென்றால் திமுகவுடன், பாஜக பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. 'தொ... மேலும் பார்க்க

`என் போராட்டங்கள் அண்ணன் விஜய்க்கு தெரிந்திருந்தால்..!’ - தவெகவில் நீக்கப்பட்ட பெண் வழக்கறிஞர்

`அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் நியமிக்கிறார்கள்' என்று, த.வெ.க-வின் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர் நீத... மேலும் பார்க்க

’எவ்வளவு அவதூறு பரப்பினாலும் வைகோவை நேசித்துக் கொண்டே இருப்போம்’ - அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் வருத்தமளிக்கின்றது என திருமாவளவன் சொல்லியிப்பது குறித்த கேள்வ... மேலும் பார்க்க

`கரூர் கம்பெனி வேலைக்காரர்கள்போல் நடத்தப்பட்டோம்'- திமுகவிலிருந்து கோவை மாநகராட்சி கவுன்சிலர் விலகல்

கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு செல்வக்குமார் என்பவர், தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “2020 ஆம் ஆண்டிலிருந்து திராவிடன் அறக்கட்டளையைத்... மேலும் பார்க்க