செய்திகள் :

CarryMen: ஷாப்பிங் செல்ல வாடகைக்கு ஆள் - பெண்களின் சுமையை குறைக்க டெல்லி ஸ்டார்ட்ஆப்பின் புதுதிட்டம்

post image

ஷாப்பிங் அல்லது ஜவுளிக்கடைகளுக்கு செல்வதாக இருந்தால் பெண்கள் தங்களது துணைக்கு ஒரு ஆடவரை அழைத்து செல்வது வழக்கம். ஆனால் சில நேரங்களில் ஷாப்பிங் செல்லும் பெண்கள் தாங்கள் வாங்கும் பொருட்களை சுமக்க ஆள் துணை இல்லாமல் சிரமப்படுவர். ஷாப்பிங் அல்லது ஜவுளிக்கடைக்கு செல்லும் பெண்கள் அங்கு பல மணி நேரம் செலவிடுவது வழக்கம். அந்த நேரத்தில் ஷாப்பிங் பேக்குகள், அனைத்து டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் பணத்துடன் ஒரு பர்ஸ் மற்றும் மொபைல் ஃபோனை வைத்திருப்பார்கள். நீங்கள் ஆரம்பத்தில் எல்லாவற்றையும் வைத்திருக்க முடியும் என்றாலும், ஒரு கட்டத்திற்குப் பிறகு, நீங்கள் நிச்சயமாக சுதந்திரமாக நகரவோ, பொருட்களை பார்த்து வாங்கவோ அல்லது பணம் செலுத்தவோ முடியாது.

பேக்களை சுமக்க குழந்தைகள் தங்கள் வயதான தாய்மார்களுடன் செல்வதையோ அல்லது பெண்கள் பெரிய பைகளை எடுத்துக்கொண்டு, தோளில் ஒரு கவண் பையைத் தொங்கவிட்டுக்கொண்டு, அவர்களின் அத்தியாவசியப் பொருட்களையும், மொபைல் ஃபோனையும் எடுத்துச்செல்வதை பார்க்க முடியும்.

ஷாப்பிங் செய்வதை எளிதாக்கவும், ஷாப்பிங்கின் போது பேக்கை வைத்துக்கொண்டு பெண்களுடன் சுற்றி வரவும், அவர்கள் வாங்கும் பொருட்களை சுமக்கவும் இப்போது வாடகைக்கு ஆட்களை சப்ளை செய்யும் திட்டம் ஒன்று அறிமுகமாகி இருக்கிறது.

டெல்லியை சேர்ந்த ஸ்டார்ட் ஆப் நிறுவனம் ஒன்று இதனை அறிமுகம் செய்து இருக்கிறது. CarryMen என்ற அந்த நிறுவனம் டெல்லி முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு 149 ரூபாய்க்கு ஷாப்பிங் உதவியாளரை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அவர்களின் கோஷம், 'நீங்கள் ஷாப்பிங் செய்யுஙள், நாங்கள் எடுத்து வருகிறோம்' என்பதுதான்.

பயிற்சி பெற்ற மற்றும் தொழில்முறை உதவியாளர்களை CarryMen வழங்குகிறது. அவர்கள் வழங்கும் உதவியாளர்கள் பைகளை எடுத்துச் செல்லவும், பரபரப்பான சந்தைகளில் தடையின்றி செல்லவும், மன அழுத்தமில்லாத அனுபவத்தை அனுபவிக்கவும் உதவுகிறார்கள். உதவியாளர் உங்கள் பைகளை மட்டும் எடுத்துச் செல்ல மாட்டார், அவர்கள் உங்களை சந்தைகள் வழியாக அழைத்துச் செல்வார்கள். பார்க்கிங் பகுதி அல்லது அருகிலுள்ள மெட்ரோ நிலையம் வரை உங்களைப் பின்தொடர்வார்கள். மேலும் உணவு மற்றும் தின்பண்டங்களுக்கு நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும் உதவுவார்கள். வாடிக்கையாளர்கள் குழந்தைகளை சுமப்பது, குழந்தை தள்ளுவண்டி, மொபைல் சார்ஜிங், குடை மற்றும் மடிக்கக்கூடிய இருக்கை போன்ற சேவைகளையும் இந்நிறுவனம் கூடுதல் கட்டணம் வாங்கிக்கொண்டு செய்து கொடுக்கிறது.

இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது. எக்ஸ் தளத்தில் குஷ்பு மகாஜன் என்பவர் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார். ஒரு உதவியாளர் உண்மையில் எவ்வளவு ஊதியம் பெறுவார் என்பதில் சில பயனர்கள் கேள்வி எழுப்பி இருந்தாலும், மற்றவர்கள் தங்கள் தாய்மார்கள் மாற்று வழியை கண்டுபிடித்துள்ளனர் என்று கேலி செய்தனர்.

உதவியாளர் அவர்களுடன் படம் பார்ப்பாரா என்று ஒருவர் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த குஷ்பு மகாஜன், ஒருவர் கேரிமென் மூலம் மட்டுமே உதவியாளரை முன்பதிவு செய்ய முடியும் என்றும், அவர்கள் காதலனாக நடிக்க மாட்டார்கள், படத்திற்கு டேட்டிங் செல்ல மாட்டார்கள் என்றும் பதிலளித்தார்.

பாராகிளைடர் மீது மோதிய விமானம் - அவசர பாராசூட் மூலம் உயிர் தப்பிய பெண்; பதறவைக்கும் வீடியோ

ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத்தொடரில் வானில் பறந்து கொண்டிருந்த பாராகிளைடர் மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில், பாராகிளைடரின் இறக்கை கிழிந்து சுழன்று கீழே விழுந்தப... மேலும் பார்க்க

ஒரு மாம்பழம் ரூ. 3000; 9 மரங்களுக்கு 9 பாதுகாவலர்கள்; உலகின் மிகப்பெரிய மாம்பழத்தின் சிறப்பு என்ன?

தற்போது நாடு முழுவதும் மாம்பழ சீசன் ஆகும். எங்கும் மாம்பழங்களாக இருக்கின்றன. மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஜுனா கட்டிவாடா என்ற கிராமத்தில் அபூர்வ வகை மாமரங்கள் வளர்கின்றன.... மேலும் பார்க்க

செறியூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் வழங்க ஈரான் சம்மதம்: இரு நாடுகளிடையே விரைவில் ஒப்பந்தம்!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்தி வந்த தாக்குதலுக்கு கடந்த மாதம் தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவும், ஈரானும் நிரந்தர போர்ந... மேலும் பார்க்க

வான்வெளியை மூடிய ஈரான்; மகன் திருமணத்துக்கு செல்லாத ட்ரம்ப்! - மீண்டும் தாக்குதல் தொடங்க திட்டமா?

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் கடந்த மாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஈரானுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்தது. அமெரிக்கா விதிக்கும் நி... மேலும் பார்க்க

ஒரே பள்ளி, ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண்!பத்தாம் வகுப்பு தேர்வில் இரட்டை சகோதரிகளின் ஆச்சர்ய சாதனை!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஓவரூர் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் - வனிதா தம்பதியினரின் இரட்டை மகள்கள் கார்த்திகா மற்றும் கீர்த்திகா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற... மேலும் பார்க்க