செய்திகள் :

Cyclone Ditwah: புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்! - `டிட்வா' புயல் எப்போது கரையை கடக்கும்?

post image

வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே உருவாகியிருக்கும் `டிட்வா' (Cyclone Ditwah) புயல் நவம்பர் 30-ம் தேதி அதிகாலை புதுச்சேரிக்கும், ஆந்திராவுக்கும் இடையே கரையை கடக்க இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

அதையடுத்து புதுச்சேரிக்கு `ரெட் அலர்ட்' கொடுத்திருக்கும் வானிலை மையம், நாளையும் நாளை மறுதினமும் (நவம்பர் 29,30) அதிக கனமழை பெய்யும் என்று எச்சரித்திருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கும் நிலையில், இரண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழு வருகை தந்திருக்கின்றன.

ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம்
ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம்

இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், பேரிடர் மேலாண்மை துறை ஆணையருமான குலோத்துங்கன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய ஆட்சியர் குலோத்துங்கன், ``முக்கியத் துறைகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். அது 24 மணி நேரமும் இயங்க வேண்டும். பொதுமக்கள் கேட்கும் அனைத்து உதவிகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வாய்க்கால்களிலும் இருக்கும் அடைப்புகளை வெள்ளிக்கிழமைக்குள் நீக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

மேலும், பொதுப்பணித்துறை தேவையான மோட்டார் பம்ப் செட்டுகளை அந்தந்த கொம்யூனிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மேலும், குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் தாழ்வான பகுதிகளில் தேவையான உணவுகளைத் தயார் செய்து தர தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தாழ்வான பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மின்துறை தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தேவையான ஜென்செட்டுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பேரிடம் மீட்புக் குழுவுடன் ஆட்சியர் குலோத்துங்கன்
பேரிடம் மீட்புக் குழுவுடன் ஆட்சியர் குலோத்துங்கன்

தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். காவல்துறை முக்கிய நடைபாதைகளில் பொதுமக்கள் இரவு படுத்து தூங்குவதை இந்த மழை முடியும் வரை தவிர்க்க வேண்டும்.

மேலும், பாகூர், வில்லியனூரில் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதைக் காவல்துறை கண்காணிக்க வேண்டும். சுகாதாரத்துறை தேவையான மருந்து மாத்திரைகளுடன் அந்தந்த கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்றார்.

தமிழ்நாட்டை நோக்கி நகரும் `Ditwah' புயல்; எப்போது வருகிறது? 2 நாள்கள் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 'இது தொடரும்' என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, கன்னியாக... மேலும் பார்க்க

Rain Alert: வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் - எப்போது கரையைக் கடக்கும்?

தென்மேற்கு வங்கக் கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கையில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருப்பதாகவும், அடுத்த 60 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும... மேலும் பார்க்க

Rain Alert: தமிழகத்தில் ரெட் அலர்ட்; உருவாகிறதா டிட்வா புயல்?

தென்மேற்கு வங்கக் கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கையில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருப்பதாகவும், அடுத்த 60 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும... மேலும் பார்க்க

வலுவடைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! - தமிழ்நாட்டில் 4 நாள்களுக்கு கனமழை; எந்தெந்த மாவட்டங்களில்?

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவியது. அது இன்று வளிமண்டல மேலடக்கு சுழற்சியுடன் கூடிய காற்றழுத்தத் த... மேலும் பார்க்க

எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை; பரவும் சாம்பல் - மீண்டும் டெல்லி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா?

கிட்டத்தட்ட 12,000 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று முன்தினம் (நவம்பர் 23) எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பில் இருந்து சிதறிய சாம்பல் சிவப்பு கடல் வழியாக ஏமன் ... மேலும் பார்க்க

Rain Alert: ``கடலுக்கு செல்ல வேண்டாம்; 48 மணி நேரத்தில் புயலாக வலுபெறும்'' - வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ... மேலும் பார்க்க