செய்திகள் :

Doctor Vikatan: சட்டென்று மாறும் வானிலை... உடனே உடல்நலம் பாதிக்கப்படுவது ஏன்?

post image

Doctor Vikatan: இப்போதெல்லாம் கோடையில் மழை பெய்கிறது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் வெயில் கொளுத்துகிறது. இப்படி திடீர், திடீரென வானிலை மாறும்போது, சிலருக்கு உடல்நலம் சரியில்லாமல் போவது ஏன்...

உண்மையிலேயே, வானிலைக்கும் உடல்நலத்துக்கும் தொடர்பு உண்டா... முன் எச்சரிக்கையாக இதைத் தடுக்க ஏதேனும் சுய மருத்துவம் செய்ய முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

வெப்பம் அதிகரிக்கும் போது நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. மாறாக, குளிர்ச்சியான சூழல், வைரஸ்கள் நீண்ட நேரம் உயிர்வாழவும், காற்றில் எளிதாகப் பரவி நோய்களை உருவாக்கவும் சாதகமாக அமைகிறது.

மழைக்காலமாக இல்லாவிட்டாலும், மூன்று அல்லது நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து குளிர்ச்சியாகவோ அல்லது மழை பெய்வது போன்ற தட்பவெப்பநிலை இருந்தாலோ, காற்றில் வைரஸ் கிருமிகள் உற்பத்தியாகி அவை நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைச் சூழலும், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, நோய்களை ஏற்படுத்தலாம். உதாரணத்துக்கு, கோடை விடுமுறை நாள்களில் பெற்றோர் சந்திக்கும் ஸ்ட்ரெஸ்ஸைச் சொல்லலாம். 

கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் தாமதமாகத் தூங்கி, தாமதமாக எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பெற்றோர்கள் அல்லது முதியவர்களுக்கு அப்படியோர் ஓய்வு கிடைப்பதில்லை.

விடுமுறை நாள்களில் பிள்ளைகளைச் சந்தோஷப்படுத்துவது, குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்காகத் திட்டமிடுதல், டிக்கெட் முன்பதிவு செய்தல் என அவர்களுக்கு வழக்கத்தைவிட வேலைகள் அதிகரிக்கின்றன. அதனால் மன அழுத்தமும் அதிகரிக்கிறது. இந்த மன அழுத்தமும் நோய்கள் பரவுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

வீட்டில் ஒருவருக்குக் காய்ச்சல் வந்து மற்றவர்களுக்கும் பரவுகிறது என்றால், குடும்ப உறுப்பினர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வீட்டில் ஒருவருக்குக் காய்ச்சல் வந்து மற்றவர்களுக்கும் பரவுகிறது என்றால், குடும்ப உறுப்பினர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நோய் பாதிப்பு உள்ளவர்கள் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முகக்கவசம் (Mask) அணிந்துகொள்வது மற்றும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.

ஒவ்வோர் ஆண்டும் வைரஸ் கிருமிகளுக்கான இன்ஃப்ளூயன்ஸா (Flu vaccine) தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது பாதுகாப்பானது.

வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் நெல்லிக்காய் போன்ற பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தும்.

காய்ச்சல் அல்லது வைரஸ் பாதிப்பு இருக்கும்போது உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, அடிக்கடி மிதமான சுடுநீர் குடிப்பது அவசியம்.

உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 7-8 மணிநேர ஆழ்ந்த உறக்கம் தேவை. நோயற்ற வாழ்க்கைக்கு அதுவும் முக்கியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

தலசீமியா சிகிச்சைக்கானத் தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் அப்போலோ புற்றுநோய் அறக்கட்டளை!

இந்தியாவில் சுமார் 1 முதல் 1.5 இலட்சம் குழந்தைகள் தலசீமியாவுடன் (Thalassemia) வாழ்ந்து வருவதோடு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 முதல் 15,000 குழந்தைகள் இந்நோய் பாதிப்புடன் பிறக்கின்றனர். இதன் மூலம், உல... மேலும் பார்க்க

Doctor Vikatan: பால் குடித்தால் அனீமியா எனப்படும் ரத்தச்சோகை வருமா?

Doctor Vikatan:எனக்குப் பல வருடங்களாக அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு இருக்கிறது. சைவ உணவுப் பழக்கம் உள்ளவள் என்பதால் நான் கால்சியம் தேவைக்கு பால் அதிகம் எடுத்துக்கொள்வேன். இந்நிலையில் சமீபத்தில... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிசிஓடி பிரச்னை இருந்தால் குழந்தை பிறக்காதா... நிரந்தர தீர்வே கிடையாதா?!

Doctor Vikatan:பிசிஓடி பிரச்னைக்குத் தீர்வே இல்லை என்று சொல்கிறார்களே, அது உண்மையா... பிசிஓடி இருந்தால் குழந்தை பிறக்காது என்ற தகவலும் உண்மையா... மருந்து, மாத்திரைகள் இல்லாமல், இந்தப் பிரச்னைக்கு வேறு... மேலும் பார்க்க

Doctor Vikatan: பரவும் ஹன்டா வைரஸ்... கோவிட் தொற்றைவிட ஆபத்தானது என்கிறார்களே, உண்மையா?

Doctor Vikatan: எங்கு பார்த்தாலும் ஹன்டாவைரஸ் தொற்று பற்றிய பேச்சாகவே இருக்கிறது. இது கோவிட் வைரஸைவிட வீரியமானது என்றும், கொரோனா தொற்றையே மிஞ்சும் அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்றும் ஆளாளுக்கு ... மேலும் பார்க்க

Doctor Vikatan: டீன் ஏஜிலேயே எட்டிப் பார்க்கும் நரைமுடிகள்... ரிவர்ஸ் செய்ய முடியுமா?

Doctor Vikatan: இந்தக் காலத்தில் டீன் ஏஜிலேயே பல பிள்ளைகளுக்கும் நரை முடிகள் அதிகரிப்பதைப் பார்க்கிறோம். இது இளநரை என்றும் ரிவர்ஸ் செய்துவிடலாம் என்றும் சொல்கிறார்களே.... டீன் ஏஜில் ஏற்படுகிற நரை முடி... மேலும் பார்க்க

Doctor Vikatan: சம்மர்: நீரிழிவு பாதித்தவர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா?

Doctor Vikatan: கோடைக்காலத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை. எனக்கும் என் கணவருக்கும் நீரிழிவு இருக்கிறது. நாங்களும் ஆசைப்பட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விடுகிறோம். நீரிழிவு உள்ளவர்கள் இப... மேலும் பார்க்க