செய்திகள் :

Doctor Vikatan: மலிவு விலை மருந்தகங்களில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடலாமா?

post image

Doctor Vikatan: என் வயது 62.  ரத்தச் சர்க்கரை அளவு 290 இருக்கிறது.   மாத்திரைகளும் இன்சுலினும் உபயோகித்துக் கொண்டிருக்கிறேன்.  மாத்திரைகளுக்குச் செலவு செய்ய முடியவில்லை. இந்நிலையில் நான் மலிவு விலை மருந்தகங்களில்  மாத்திரை வாங்கிச் சாப்பிடலாமா... அதனால் பக்க விளைவுகள் வருமா? எனக்கு ஹீமோகுளோபின் அளவு  9ஆக உள்ளது சிகிச்சை தேவையா.... குழந்தைகள் அதிகமாகச் சத்தம் போட்டாலும் சண்டை போட்டாலும் ஒருவித படபடப்பு வருகிறது. இதற்கு என்ன செய்வது?  எத்தனை மாதங்களுக்கொரு முறை சுகர் டெஸ்ட் செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

பொது மருத்துவர் அருணாசலம்

மலிவு விலை மருந்தகங்களில் மாத்திரை, மருந்துகள் வாங்கிச் சாப்பிடலாம். அதில் எந்தப் பிரச்னையும் வராது. வசதியானவர்களேகூட இன்று மலிவு விலை மருந்தகங்களில் மாத்திரைகள் வாங்கிப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். ஆனால், அப்படிச் சாப்பிடும்போது, அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்றால், அதற்கேற்ப மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும்.

ஹீமோகுளோபின் அளவு 9 இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது மிதமான ரத்தச்சோகை (அனீமியா) பாதிப்பைக் குறிக்கும். அந்த அளவானது 8-க்குக் கீழ் குறைந்தால் அது தீவிர ரத்தச்சோகை பிரச்னை என அர்த்தம். எனவே, இந்தப் பிரச்னைக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்காவது இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.  மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளுங்கள்.  இரும்புச்சத்துள்ள உணவுப்பழக்கமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உதாரணத்துக்கு, பேரீச்சம்பழம், உலர் திராட்சை, கீரை வகைகள், புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, கறிவேப்பிலை சட்னி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அடர் பச்சை நிறத்தில் உள்ள கோவக்காய், பாகற்காய், குடமிளகாய் போன்ற காய்கறிகளில் இரும்புச்சத்து அதிகமிருக்கும்.

அடர் பச்சை நிறத்தில் உள்ள கோவக்காய், பாகற்காய், குடமிளகாய் போன்ற காய்கறிகளில் இரும்புச்சத்து அதிகமிருக்கும். அசைவத்தில் ஈரல், இதயம், சிறுநீரகங்களில் இரும்புச்சத்து அதிகம் என்பதால் அவற்றைச் சாப்பிடலாம். குழந்தைகள் சத்தம் போட்டாலும் சண்டை போட்டாலும் ஏற்படுகிற படபடப்பு ஒருவித பதற்றத்தால் வருவதுதான். அதைப் பழகிக் கொள்வதுதான் ஒரே வழி. ஒருவேளை இதயத்துடிப்பு மிகவும் அதிகரிப்பது போல உணர்ந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனையும் சிகிச்சையும் பெறலாம்.

சர்க்கரை நோயைப் பொறுத்தவரை மாதந்தோறும் டெஸ்ட் செய்து கொள்வது அவசியம். போஸ்ட் பிராண்டியல் (Postprandial) எனப்படும் சாப்பாட்டுக்குப் பிறகான டெஸ்ட் மட்டுமேகூட போதுமானது. அது 200-க்குக் கீழ் இருந்தால் மருத்துவரைப் பார்க்க வேண்டாம். 200-க்கு மேல் போனால் மருத்துவ ஆலோசனை அவசியம். 3 மாதங்களுக்கொரு முறை செய்யப்படும் ஹெச்பிஏ1சி டெஸ்ட்டையும் (HbA1c test) தவறாமல் எடுத்துப் பார்க்க வேண்டும்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Doctor Vikatan: மாதந்தோறும் பீரியட்ஸ் நாள்களில் கடுமையான தலைவலி; சாதாரணமானதா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 45. மாதந்தோறும் பீரியட்ஸின்போது கடுமையான தலைவலி வருகிறது. மற்ற நாள்களில் நார்மலாகி விடுகிறேன். தலைவலிக்கு மாத்திரை போடாமல் என்னால் சமாளிக்கவே முடிவதில்லை. பீரியட்ஸ் நாள்களில் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஒரு வாரமாக மலம் கழிக்காத 4 வயதுக் குழந்தை; சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் பேத்திக்கு நான்கு வயதாகிறது. அவள் மலம் கழித்து ஒரு வாரமாகிறது. இதற்கு என்ன காரணம்... சிகிச்சை தேவையா?பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச்சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.ஸ்ர... மேலும் பார்க்க

''பீரியட்ஸ் 'excuse' அல்ல'' விவாதத்தைக் கிளப்பிய நடிகை ஸ்ரீலீலாவின் வைரல் பேச்சு: மருத்துவ விளக்கம்!

சமீபத்தில் நடிகை ஸ்ரீலீலா மாதவிடாய் மற்றும் அதனால் ஏற்படும் வலிகள் குறித்துப் பேசிய கருத்துகள் இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன."மாதவிடாய் என்பது ஒரு நோய் அல்ல, அது இயற்கையான உடலியல் நி... மேலும் பார்க்க

Doctor Vikatan: அரிப்புக்காக காது குடைந்தபோது செவிப்பறையில் ஓட்டை... கேட்கும் திறன் பாதிக்குமா?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் காதுக்குள் ஒருவித அரிப்பு இருந்துகொண்டே இருக்கும். அதுபோன்ற நேரங்களில், நான் என் காதுகளைச் சுத்தம் செய்வேன் அல்லது குடைவேன், சிறிது நேரத்திற்குப் பிறகு அரிப்பு நின்றுவ... மேலும் பார்க்க

Doctor Vikatan: காய்ச்சல் வந்தாலே ஆன்டிபயாடிக் (Antibiotics) மாத்திரைகள் உட்கொள்ள வேண்டுமா?

Doctor Vikatan: சாதாரண சளி, காய்ச்சல் ஏற்படும்போது மருந்துக் கடைகளில் கேட்டால் காய்ச்சல் மாத்திரையோடு, ஆன்டிபயாடிக் மாத்திரைகளும் கொடுக்கிறார்கள். எப்போது காய்ச்சல் ஏற்பட்டாலும் ஆன்டிபயாடிக் மாத்திரைக... மேலும் பார்க்க

Doctor Vikatan: இருமுறை பல் துலக்கியும் வாய் துர்நாற்றம்... குடல் நோயின் அறிகுறியா?

Doctor Vikatan: நான் தினமும் இருமுறை பல் துலக்கும் வழக்கம் கொண்டவன். சாப்பிட்ட உடன் வாய் கொப்பளிக்கும் வழக்கமும் உண்டு. ஆனாலும், எனக்கு கடந்த சில மாதங்களாக வாய் துர்நாற்றப் பிரச்னை இருப்பதை உணர்கிறேன்... மேலும் பார்க்க