செய்திகள் :

FQL முதலீட்டு மோசடி: நத்தம் அருகே இளைஞர் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்; போலீசார் தடியடி

post image

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் FQL என்கிற ஆப்பில் முதலீடு செய்தால் 40 நாட்களில் இரட்டிப்பான லாபம் கிடைக்கும் எனப் பொதுமக்களை நம்ப வைத்து சுமார் 1000 கோடிக்கு அதிகமான பணம் முறைகேடு செய்துள்ள சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் திண்டுக்கல், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் தனி முகாம் நடத்தி பாதிக்கபட்டவர்களிடம் புகார் மனுக்களைப் பெற்று வருகிறது காவல்துறை. தற்போது 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லட்சகணக்கில் பணத்தை இழந்தாகப் புகாரளித்துள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய நபர்களான ரஞ்சித், அருண் ஆகியோர் தலைமறைவான நிலையில் 20 ஏஜெண்டுகள் மீது வழக்குப் பதிவு செய்யபட்டு கைது செய்யபட்டுள்ளனர். மேலும், 13 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, இந்த மோசடி தொடர்பான வழக்குகள் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசுவின் உடலை மீட்டு கொண்டு செல்லும் ஊர்மக்கள்
ராசுவின் உடலை மீட்டு கொண்டு செல்லும் ஊர்மக்கள்

இந்நிலையில், காசம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராசு என்பவரும் இந்த நிறுவனத்தில் ஏஜெண்டாகச் செயல்பட்டு வந்துள்ளார். இவரை நம்பி காசம்பட்டி பகுதியைச் சேர்ந்த பலரும் FQL-ல் பணத்தை முதலீடு செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது

மேலும் ராசுவும் இதில் முதலீடு செய்துள்ளதாகவும் ஏமாந்ததோடு இவரை நம்பி பணத்தை முதலீடு செய்தவர்கள் பணத்தைத் திருப்பி கேட்டதாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்த ராசு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சாலை மறியலில் ஈடுபட்டம் மக்கள்
சாலை மறியலில் ஈடுபட்டம் மக்கள்

இந்நிலையில் ராசுவின்  உடலுடன் அப்பகுதி மக்கள் திண்டுக்கல் - மதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தச் சாலையில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையறிந்து வந்து காவல்துறையினர் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட்டத்தைக் கலைக்க முடியவில்லை என்பதால் தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர்.

குமரி: மூதாட்டியை கொலை செய்து தீவைத்து எரித்த இளைஞர் - தற்கொலை போன்று காட்ட முயன்றது அம்பலம்

கன்னியாகுமரி மாவட்டம் ​நாகர்கோவில் வடிவீஸ்வரம் தேரடியை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி சின்னம்மாள் (77). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதனால் சின்னம்மாள் வீட்டில் தனியாக ... மேலும் பார்க்க

`இன்டர்னல் மார்க் போடமாட்டேன்; ஏன் பயப்படுற?' - மாணவி கர்ப்பத்தால் சிக்கிய புதுச்சேரி பள்ளி ஆசிரியர்

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அந்தப் பிரபலமான பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் மாணவி ரேஷ்மாவுக்கு (மாணவியின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாதவிடாய் சுழற்ச... மேலும் பார்க்க

"இனி யார் என்னை அம்மானு கூப்டுவா?" - போனில் பேசிய படி கார் ஓட்டிய பெண்ணால் பலியான 8 வயது சிறுவன்

மும்பை பாந்த்ரா பகுதி எப்போதும் பிஸியாக இருக்கும். இங்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். பாந்த்ரா மேற்கில் உள்ள ஜிஜமாதா கார்டனுக்கு அருகிலுள்ள செயின்ட் ஜான் பாப்டி... மேலும் பார்க்க

நெல்லை: இளைஞர் தலை துண்டித்துக் கொலை; விசாரணையில் பகீர்; போலீஸ் குவிப்பால் பதற்றம்; நடந்தது என்ன?

நெல்லை, மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான இவர், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு விஜயலெட்சுமி என்ற மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட... மேலும் பார்க்க

லிப்ட் கேட்ட 16 வயது மாணவிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை; நள்ளிரவில் ஓடும் பஸ்ஸில் நடந்த கொடூரம்

டெல்லி காஷ்மேரா கேட் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் 16 வயது பெண் ஒருவர் அந்த வழியாக வந்த பஸ் ஒன்றை மறித்து லிப்ட் கேட்டார். நொய்டாவிற்குச் செல்லுமா என்று அப்பெண் கேட்டார். பஸ்ஸில் இருந்தவர்களும் பஸ் நொய... மேலும் பார்க்க

மதுரை: 'என் அம்மா ஏன் கைகட்டி நிற்க வேண்டும்'- மாணவி தற்கொலை; தலைமையாசிரியை மீது SC/ST Act-ல் வழக்கு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள், 10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பூச்சிப்பட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்துள்ளார். சில... மேலும் பார்க்க