செய்திகள் :

ஸ்மார்ட்போன், இன்டர்நெட் இல்லையா? இனி கவலை வேண்டாம் - பட்டன் போனிலேயே UPI மூலம் பணம் அனுப்பலாம்!

post image

ஸ்மார்ட்போன் இல்லாமல் UPI மூலம் பணம் அனுப்ப முடியாது என்ற நிலையை மாற்றகூடிய வகையில் இன்டர்நெட் வசதி இல்லாமலேயே பணம் அனுப்பவும், கடைகளில் பணம் செலுத்தவும் உதவும் ‘PhonePe UPI 123Pay’ என்ற புதிய சேவையை PhonePe நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தச் சேவை முக்கியமாக சாதாரண பட்டன் போன் பயன்படுத்துபவர்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பட்டன் போன் பயனர்கள் இருப்பதாக PhonePe தெரிவித்துள்ளது. அவர்களையும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்குள் கொண்டு வருவதே இந்த முயற்சியின் நோக்கம்.

இந்தச் சேவையின் முக்கிய சிறப்பு, இன்டர்நெட் தேவையில்லை என்பதுதான். SMS அடிப்படையிலான முறையில் இது செயல்படுவதால், குறைந்த 2G இணைப்பு இருக்கும் பகுதிகளிலும் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

 UPI வசதி
UPI வசதி

மொபைல் எண் அல்லது UPI ID மூலம் மற்றவர்களுக்கு பணம் அனுப்பலாம். UPI ID மூலம் கடைகளிலும் பணம் செலுத்தலாம். கேமரா வசதி உள்ள பட்டன் போன்களில் QR கோடை ஸ்கேன் செய்தும் பணம் செலுத்த முடியும். வங்கிக் கணக்கு இருப்பு மற்றும் ஏற்கெனவே செய்த பணப்பரிவர்த்தனைகளையும் பார்க்கலாம்.

தற்போது Nokia, HMD, Lava International மற்றும் Itel Mobile நிறுவனங்களின் சில போன்களில் PhonePe UPI 123Pay முன்கூட்டியே நிறுவப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும் பல போன் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளதாக PhonePe தெரிவித்துள்ளது.

எப்படி பதிவு செய்வது?

பட்டன் போனில் இருக்கும் PhonePe செயலியைத் திறந்து, விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் வங்கியைத் தேர்வு செய்து, டெபிட் கார்டின் கடைசி 6 எண்கள் மற்றும் காலாவதி தேதியை உள்ளிட வேண்டும். தொடர்ந்து UPI PIN அமைத்ததும், UPI வசதியைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.

பயனர்களுக்கு உதவ AI அடிப்படையிலான குரல் உதவி சேவையையும் PhonePe அறிமுகப்படுத்தியுள்ளது. ஆங்கிலம் மற்றும் 12 இந்திய மொழிகளில் இந்த உதவி கிடைக்கும். சேவையைச் செயல்படுத்துவது முதல் UPI தொடர்பான அடிப்படை சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பது வரை இந்தக் குரல் உதவி வழிகாட்டும்.

அடுத்தடுத்த அப்டேட்களில் பில் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ் மற்றும் ஆதார் மூலம் UPI-யில் பதிவு செய்தல் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

phonepe

PhonePe நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சமீர் நிகம், ஸ்மார்ட்போன்களைத் தாண்டி பட்டன் போன் பயன்படுத்துபவர்களுக்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் பயனைக் கொண்டு செல்வதே இந்த முயற்சியின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் சிறுநகர்ப்புறங்களில் இன்டர்நெட் வசதி சீராக இல்லாதவர்களுக்கு இந்தச் சேவை உதவியாக இருக்கும் என்றார்.

ஸ்மார்ட்போன், அதிவேக இன்டர்நெட் இல்லாமலேயே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையைச் சாத்தியமாக்குவது, தொழில்நுட்பம் அனைவரையும் சென்றடையும் வகையில் வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.

பட்டன் போன்களையும் டிஜிட்டல் உலகத்துடன் இணைக்கும் இந்த முயற்சி தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

AI கண்காணிப்பு... லேசர் தாக்குதல்: கொசுக்களை விரட்ட அதிநவீன 'அயர்ன் டோம்'!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கொசுக்களால் பரவும் 'வெஸ்ட் நைல் வைரஸ்' (West Nile Virus) பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கு எதிராக அறிவியலாளர்கள் புதுமையானதொரு ஆயுதத்தை... மேலும் பார்க்க

Roman Telescope: பிரபஞ்சத்தின் இருண்ட ரகசியங்களைத் தேடும் நாசாவின் $4 பில்லியன் ‘ரோமன்’ டெலஸ்கோப்!

பிரபஞ்சத்தின் விரிவாக்கம் மற்றும் கண்ணுக்குத் தெரியாத மர்மமான 'டார்க் மேட்டர்' (Dark Matter), 'டார்க் எனர்ஜி' (Dark Energy) ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக நாசா (NASA) தயாரித்துள்ள 'நான்சி கிரேஸ் ரோமன் ஸ்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவர்களுக்கு 1 வருடம் இலவச Gemini — Google-ன் புதிய AI சலுகை: யார்... எப்படி பெறலாம்?

கல்லூரி மாணவர்களின் படிப்பை AI மூலம் எளிதாக்கும் வகையில், Google தனது Gemini AI plans-ல் சிறப்பு student offer-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தகுதியுள்ள கல்லூரி மாணவர்கள் Google AI Plus subscri... மேலும் பார்க்க

Claude-ன் கண்ணுக்குத் தெரியாத Watermark: “AI எழுதியதை இனி மறைக்க முடியாதா?”

Anthropic நிறுவனம் தனது Claude AI மூலம் உருவாக்கப்படும் text-ல் மனிதர்களால் எளிதில் கண்டறிய முடியாத “Invisible Watermark” ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 2, 2026 முதல் Claude models-ல் இந்த water... மேலும் பார்க்க

LED TV பழுதைச் சரிசெய்ய புதிய கருவி: "7 வினாடிகளில் பிரச்னையைக் கண்டறியும்"- அசத்திய கரூர் இளைஞர்கள்

கரூர் மாவட்டம், வெள்ளியணை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. டி.வி மெக்கானிக்கான இவரது மகன்கள் சுரேஷ், பிரசாந்த் இருவரும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரு... மேலும் பார்க்க

இனி டீனேஜர்களுக்குத் தனி ChatGPT! – ‘Quiet Hours’, ‘Study Mode’ என புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டீனேஜர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘ChatGPT for Teens’ என்ற புதிய அனுபவத்தை OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது.13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்க... மேலும் பார்க்க