செய்திகள் :

Hong Kong: 31 தளங்கள் கொண்ட 8 கட்டடங்களில் தீ விபத்து; குறைந்தபட்சம் 13 பேர் மரணம்!

post image

ஹாங்காங்கில் உயரமான குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டாய் போ (Tai Po) மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கொண்ட வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) என்ற குடியிருப்பு வளாகத்தில் பற்றியிருக்கிறது.

டாய் போ என்பது ஹாங்காங்கின் வடக்கு எல்லையில், சீன நகரமான ஷென்சென் அருகில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதி. வாங் ஃபுக் கோர்ட் வளாகத்தில் A முதல் H வரை 8 கட்டடங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 31 தளங்கள் வரை அடுக்குகள் உள்ளன. இந்த பெரும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தீயணைப்பு வீரர் உட்பட 13 பேர் உயிரிழப்பு

தீ விபத்து ஏற்பட்ட வளாகத்திலிருந்து தீயணைப்புத் துறையினர் மொத்தம் 28 பேரை மீட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆறு பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி கொண்டு செல்லப்பட்டுள்ளனர், அவர்களில் நான்கு பேர் பின்னர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர் தீயணைப்பு வீரர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பணிக்காக, தீயணைப்பு வீரர்கள் 128 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 57 ஆம்புலன்ஸ்களைச் சம்பவ இடத்திற்குக் கொண்டுசென்றுள்ளனர்.

தீ பிடித்த கட்டடங்களில் சுமார் 2000 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை குறித்து தெளிவான தகவல் இல்லை. முதியவர்கள் பெரும்பான்மையாக தீவிபத்தில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

ஹரியானா: கூடைப்பந்து கம்பம் விழுந்து 16 வயது தேசிய அளவிலான வீரர் மரணம்; அதிர்ச்சி தரும் வீடியோ

ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 16 வயது தேசிய அளவிலான வீரர், எதிர்பாராத விதமாக கூடைப்பந்துக் கம்பம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ... மேலும் பார்க்க

தென்காசி: இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து - 6 பேர் பலியான சோகம்

தென்காசி மாவட்டம் இடைகால் அருகில் உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தில் இன்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்தது. அதேபோல் எதிர்புரத்தில் கோவில்பட்டிய... மேலும் பார்க்க

திருச்சுழி: காட்டுப்பன்றிகளைத் தடுக்க மின்வேலி; எதிர்பாராமல் சிக்கிய விவசாயி பலி; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தொப்பலாக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவர் அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.இவரது விவசாய தோட்டத்திற்கு முன்பு தங்கபாண்டியன் என்பவரது தோட்டம் உள்ள... மேலும் பார்க்க

சிவகாசி: நடுரோட்டில் ரீல்ஸ் எடுத்து விபத்தை உண்டாக்கிய இருவர் கைது

சிவகாசி அருகே சாலையில் சண்டையிடுவது போல் நடித்து இளைஞர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்ததை பார்த்த பைக்கில் சென்ற ஒருவர் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, ரீல்ஸ் வீடியோ எடுத்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து; 23 பேர் காயம்; ஓட்டுநரின் மதுபோதைதான் காரணமா?

கம்பத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக பெங்களூர் சென்ற தனியார் பேருந்து தாடிக்கொம்பு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து அதிகாலை 2:30 மணி அளவில் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.உடனடியாக சம்பவ இடத... மேலும் பார்க்க

Tejas: துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கியது - அதிர்ச்சி வீடியோ

துபாயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் விமான கண்காட்சி கடந்த திங்கள் கிழமை (நவம்பர் 17) தொடங்கியது.இதில் இந்திய விமானப்படையின் விமானங்கள் உட்பட உலகம் முழுவதிலிருந்து சுமார் 1,500 விமானங்கள... மேலும் பார்க்க