செய்திகள் :

Hong Kong: 31 தளங்கள் கொண்ட 8 கட்டடங்களில் தீ விபத்து; குறைந்தபட்சம் 13 பேர் மரணம்!

post image

ஹாங்காங்கில் உயரமான குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டாய் போ (Tai Po) மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கொண்ட வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) என்ற குடியிருப்பு வளாகத்தில் பற்றியிருக்கிறது.

டாய் போ என்பது ஹாங்காங்கின் வடக்கு எல்லையில், சீன நகரமான ஷென்சென் அருகில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதி. வாங் ஃபுக் கோர்ட் வளாகத்தில் A முதல் H வரை 8 கட்டடங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 31 தளங்கள் வரை அடுக்குகள் உள்ளன. இந்த பெரும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தீயணைப்பு வீரர் உட்பட 13 பேர் உயிரிழப்பு

தீ விபத்து ஏற்பட்ட வளாகத்திலிருந்து தீயணைப்புத் துறையினர் மொத்தம் 28 பேரை மீட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆறு பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி கொண்டு செல்லப்பட்டுள்ளனர், அவர்களில் நான்கு பேர் பின்னர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர் தீயணைப்பு வீரர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பணிக்காக, தீயணைப்பு வீரர்கள் 128 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 57 ஆம்புலன்ஸ்களைச் சம்பவ இடத்திற்குக் கொண்டுசென்றுள்ளனர்.

தீ பிடித்த கட்டடங்களில் சுமார் 2000 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை குறித்து தெளிவான தகவல் இல்லை. முதியவர்கள் பெரும்பான்மையாக தீவிபத்தில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

கோவா தீ விபத்து: `எப்படியும் போனை எடுத்து பேசுவார்னு நினச்சேன்’ - கணவன், 3 சகோதரிகளை பறிகொடுத்த பெண்

கோவா சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலமான இடம். அதுவும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் உலகம் முழுவதும் இருந்து கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். கோவாவில் உள்ள இரவு நேர மதுபான விடுதிக... மேலும் பார்க்க

Goa: திடீரென பற்றிய தீ; 25 பேர் பலியான சோகம், பதற வைக்கும் வீடியோ காட்சிகள் - என்ன நடந்தது?

கோவாவின் ஆர்போராவில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேனில்' நேற்றிரவு பாலிவுட் பேங்கர் நைட் பார்ட்டி நடந்தது. அதிக சத்தமுள்ள இசைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் நடனமாடிக் கொண்டாடினர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்... மேலும் பார்க்க

கோவா: நைட் கிளப்பில் தீ‌ விபத்து; 25 பேர் உயிரிழப்பு - தீப்‌பற்றியது எப்படி?

நேற்று நள்ளிரவு, கோவா ஆர்போராவில் உள்ள ரோமியோ லேன் நைட் கிளப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 22 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.என்ன ந... மேலும் பார்க்க

உ.பி: தேர்வு எழுதிக்கொண்டிருந்த 12 வயது மாணவனுக்கு மாரடைப்பு: சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்!

இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிக அளவில் நடந்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தவர் அமய் சிங்(12). இம்மாணவன் ... மேலும் பார்க்க

கீழக்கரையில் கொடூர விபத்து: நகர்மன்ற தலைவர் கார் மோதி ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று அதிகாலை ஐயப்பப் பக்தர்கள் பயணம் செய்த கார்மீது கீழக்கரை நகர்மன்றத் தலைவரின் சொகுசு கார் அதிவேகத்தில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவரி... மேலும் பார்க்க

MH370: மாயமான மர்ம விமானம்; 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேடும் மலேசியா!

உலக விமான போக்குவரத்து வரலாற்றில் மிகவும் புதிரான கதை மலேசியா ஏலைன்ஸின் MH370 விமானத்தினுடையது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமாக காணாமல் போன இந்த விமானத்தை தேடும் பணியை இந்த மாத இறுதியில் மீண்டும் தொடங்... மேலும் பார்க்க