செய்திகள் :

Ind v Eng : '13 மாதங்களுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ஷமி' - அறிவிக்கப்பட்ட இந்திய அணி!

post image
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக உள்ளூரில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் ஆடவிருக்கிறது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. காயத்தால் ஓய்விலிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 13 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கிறார்.
முகமது ஷமி - Mohammed Shami

ஜனவரி 22 ஆம் தேதி முதல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் ஆரம்பமாகவிருக்கிறது. கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், புனே, மும்பை ஆகிய நகரங்களில் இந்த டி20 போட்டிகள் நடக்கவிருக்கிறது. இதற்காக சூர்யகுமார் தலைமையிலான அணியை பிசிசிஐ இப்போது அறிவித்திருக்கிறது.

வீரர்கள் பட்டியல்:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், நிதிஷ் குமார், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரேல்.

முகமது ஷமி கடைசியாக 2023 ஆம் ஆண்டில் நடந்த ஓடிஐ உலகக்கோப்பையில் ஆடியிருந்தார். கால் பாதம் மற்றும் முட்டி ஆகிய பகுதிகளில் ஷமிக்கு காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் ஓய்விலிருந்த ஷமி, சமீபத்தில்தான் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் சிகிச்சைகளையும் பயிற்சிகளையும் எடுத்து உள்ளூர் போட்டிக்கு திரும்பினார். பார்டர் கவாஸ்கர் தொடரிலேயே ஷமி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் முழுமையாக குணமடையாததால் அது சாத்தியமில்லாமல் போனது.

Samson

வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் என இரண்டு தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கின்றனர். சமீபமாக டி20 போட்டிகளில் அதிரடியாக பெரிய இன்னிங்ஸ்களை ஆடும் சாம்சனும் தன்னுடைய இடத்தை தக்கவைத்திருக்கிறார்.

அணித்தேர்வை முடித்துக் கொண்டு பிசிசிஐயின் முக்கிய நிர்வாகிகள், பார்டர் கவாஸ்கர் தோல்வி குறித்து கம்பீர் மற்றும் ரோஹித்திடம் முக்கிய ஆலோசனையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Kho Kho World Cup: புதிய விதிகள்; புதிய கேப்டன்; களம் இறங்கியுள்ள பெண்கள் அணி!

புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று முதல் நடைபெறும் ’கோ கோ உலகக்கோப்பை 2025’ போட்டியில், இந்திய மகளிருக்கான கோ-கோ அணியின் கேப்டனாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரியங்கா இங்லே ... மேலும் பார்க்க

திருவாரூர்: "நேஷனல் டீம்ல விளையாடணும்" - தேசிய அளவிலான நெட்பால் போட்டியில் அரசுப் பள்ளி மாணவர் சாதனை

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் முகமது இருஃபான். கடந்த டிசம்பர் 28 முதல் 31-ம் தேதி வரை தமிழ்நாடு வலைப்பந்து (Netball) சங்கம் சார்பில் ... மேலும் பார்க்க

WHIL: ''பெண் ஹாக்கி அணிக்கான காலம் வெகுதூரத்தில் இல்லை'' - சொல்கிறார் முன்னாள் கேப்டன்!

பிரிஸ்பேனில் 2032-ம் ஆண்டுநடைபெறவிருக்கும் ஒலிம்பிக்கிலும் அதற்கு அப்பால் நடைபெறவிருக்கும் போட்டிகளிலும் தேசிய அணியில் இளம் பெண்கள் இடம்பிடித்து களம் அமைக்க, பெண்கள் ஹாக்கி இந்தியா லீக் (WHIL) ஊக்குவி... மேலும் பார்க்க

IPL 2025 : ஐ.பி.எல் தொடக்க தேதியை திடீரென மாற்றிய பிசிசிஐ! - காரணம் என்ன?

18 வது ஐ.பி.எல் சீசன் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.BCCIமார்ச் 14 ஆம் தேதி 18 வது ஐ.பி.எல் சீசன் தொடங்கும் என பிசிசிஐ தரப்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தத... மேலும் பார்க்க

Ajith Kumar Racing: `கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்கவில்லையா?’ - டீம் வெளியிட்ட திடீர் அறிக்கை

Ajith Kumar Racingதுபாயில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் தனது அணியுடன் பங்கேற்கவிருந்த நடிகர் அஜித் குமார், கார் ஓட்டுவதிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் குமார் கார் ரேசிங் அணியின் சார்... மேலும் பார்க்க