செய்திகள் :

India - Pakistan : "இரும்புக் கரம் கொண்ட நண்பனாக பாகிஸ்தானுடன் உறுதியாக நிற்போம்" - சீனா

post image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளிலுள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor)' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதன்காரணமாக, மே 9-ம் தேதி இரவு பாகிஸ்தானிலிருந்து ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

இருப்பினும், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றைச் சுட்டு வீழ்த்தியது. இவ்வாறிருக்க, இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த அறிவிப்பு வெளியான 3 மணி நேரத்திலேயே பாகிஸ்தான் மீண்டும் இந்திய பகுதிகளைத் தாக்கியிருப்பதாக செய்திகள் வெளியானது.

அதைத்தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானுக்கு வலுவான பதிலடி தர இந்திய ராணுவத்தை வலியுறுத்தினார்.

மறுபக்கம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப், பஹல்காம் தாக்குதலில் உரிய விசாரணை இல்லாமல், அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டுகளை தங்கள் மீது சுமத்தி இந்தியா தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும், அதற்கு அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுத்ததாகவும் தனது மக்களிடம் கூறினார்.

பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் டார் - சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி
பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் டார் - சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி

இவ்வாறிருக்க, பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் டாருடன் தொலைபேசியில் பேசிய சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, "பாகிஸ்தானின் அனைத்து மூலோபாய கூட்டுறவு கூட்டாளியாகவும், இரும்புக்கரம் கொண்ட நண்பராகவும் இருக்கும் சீனா, பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய சுதந்திரத்தை நிலைநிறுத்துவதில் பாகிஸ்தானுடன் தொடர்ந்து உறுதியாக நிற்கும்." என்று கூறியிருக்கிறார்.

`பாகிஸ்தானிடமிருந்து பறிமுதல்செய்த ஆயுதங்களை எங்களிடம் கொடுங்கள்'- இந்தியாவிடம் பலுசிஸ்தான் கோரிக்கை

பலுசிஸ்தான் விடுதலை முன்னணி (BLF) தளபதி அல்லா நாசர் பலோச்சின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 30 நிமிடம் நீளும் அந்த வீடியோவில் அவர், சர்வதேச சமூகம் மற்றும் இந்திய நோக்கி பேசுகிறார்.... மேலும் பார்க்க

`அதிமுக வெட்கி தலைகுனிய வேண்டும்; யாரைக் காப்பாற்ற நினைத்தார்களோ...' - தீர்ப்பு குறித்து கனிமொழி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை என்ற கடுமையான தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் உறுப்பி... மேலும் பார்க்க

"துணிச்சலின் உருவம்" - Ind-Pak தாக்குதலுக்குப் பின்னர் விமானப் படையினரைச் சந்தித்த மோடி |Photo Album

Modi: 'உலக நாடுகள் தலையிட பாகிஸ்தான் கெஞ்சியது; இது இடை நிறுத்தம்தான் ' - மோடி உரையின் ஹைலைட்ஸ்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: "பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் என நம்புகிறேன்" - தவெக விஜய்

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது குறித்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "பொள்ளாச்சி பாலியல் குற... மேலும் பார்க்க

Bangladesh: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை! - வங்கதேசத்தில் நடப்பது என்ன?

வங்காள தேசம்நாட்டில் முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு, 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்ற... மேலும் பார்க்க

INDIA : `இந்தியாவின் பெரியண்ணனா அமெரிக்கா?’ - இந்திய அரசின் வெளியுறவில் என்ன சிக்கல்? | Depth

'தாக்குதல் நிறுத்த அறிவிப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் கூறும் முன்பாகவே அமெரிக்கா வெளியிடுகிறது. இரு நாடுகள் பிரச்னையில் 'நடுநிலை’ என்ற அமெரிக்காவின் கருத்து, பல கேள்விகளை எழுப்புகிறது. மூன்ற... மேலும் பார்க்க