செய்திகள் :

India - Pakistan : "இரும்புக் கரம் கொண்ட நண்பனாக பாகிஸ்தானுடன் உறுதியாக நிற்போம்" - சீனா

post image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளிலுள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor)' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதன்காரணமாக, மே 9-ம் தேதி இரவு பாகிஸ்தானிலிருந்து ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

இருப்பினும், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றைச் சுட்டு வீழ்த்தியது. இவ்வாறிருக்க, இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த அறிவிப்பு வெளியான 3 மணி நேரத்திலேயே பாகிஸ்தான் மீண்டும் இந்திய பகுதிகளைத் தாக்கியிருப்பதாக செய்திகள் வெளியானது.

அதைத்தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானுக்கு வலுவான பதிலடி தர இந்திய ராணுவத்தை வலியுறுத்தினார்.

மறுபக்கம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப், பஹல்காம் தாக்குதலில் உரிய விசாரணை இல்லாமல், அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டுகளை தங்கள் மீது சுமத்தி இந்தியா தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும், அதற்கு அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுத்ததாகவும் தனது மக்களிடம் கூறினார்.

பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் டார் - சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி
பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் டார் - சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி

இவ்வாறிருக்க, பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் டாருடன் தொலைபேசியில் பேசிய சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, "பாகிஸ்தானின் அனைத்து மூலோபாய கூட்டுறவு கூட்டாளியாகவும், இரும்புக்கரம் கொண்ட நண்பராகவும் இருக்கும் சீனா, பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய சுதந்திரத்தை நிலைநிறுத்துவதில் பாகிஸ்தானுடன் தொடர்ந்து உறுதியாக நிற்கும்." என்று கூறியிருக்கிறார்.

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதிகளை ஒழிக்கும் அரசு... ‘ஆன்லைன் பயங்கரவாதி’களைக் கண்டுகொள்ளாதது ஏனோ?

‘இலவச பங்கு முதலீட்டுப் பயிற்சி, இலவச டிரேடிங் டிப்ஸ், குறுகிய காலத்தில் அசாத்தியமான வருமானம், பிரபலங்கள் பேசுவதுபோல போலி வீடியோ, போலி சமூக வலைதளப் பக்கங்கள் எனப் பற்பல ரூபங்களில் முதலீட்டாளர்களைக் கு... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கு போலி மதுபானங்கள் தயாராகின்றன!’ – அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக

அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ``தமிழக அரசால் விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் மதுபானங்கள் புதுச்சேரி மாநிலத்தில் போலியாக தயாரிக்கப்படுகிறது. அதன்பிற... மேலும் பார்க்க

'அண்ணன் சீமானைவிட சில விஷயங்களில் வேல்முருகன் ஒருபடி மேல்!' - சொல்கிறார் நாதக நத்தம் சிவசங்கரன்!

நாம் தமிழர் கட்சி தொடங்கியதிலிருந்தே, அதில் பயணிக்கும் நத்தம் சிவசங்கரன் தற்போது மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வகிக்கிறார். ஆனால் அண்மைகாலமாக கட்சி நடவடிக்கைகளிலிருந்து அவர் ஒதுங்கியிருப்பத... மேலும் பார்க்க

'தவெகவும் பாஜகவும் ஒண்ணு..!' - திமுகவில் இணைந்த கோவை வைஷ்ணவி

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து, சமூகவலைதளங்களில் ஆக்டிவாக வலம் வந்தார். சமூகவலைதளங்களில் விஜய் மற்றும் தவெகவுக்கு ஆதரவாக பேட்டியளித்து பிரபல... மேலும் பார்க்க

``போலீஸ் சிரிக்கிறாங்க... தெய்வச்செயல் மேல நடவடிக்கை எடுக்கணும்’’ - ஆளுநர் மாளிகை முன்பு அழுத மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தி.மு.க இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி அளித்த வன்கொடுமை விவகாரத்தை நேற்று தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். மேலு... மேலும் பார்க்க

Gaza: தரை வழி உதவியைத் தடுக்கும் இஸ்ரேல்; வான் வழியே உதவியதா சீனா... வைரல் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்துவரும் போரில் காஸா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 2, 2025 அன்று காஸாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் நிறுத்தியது. அதனால் தற்போது இஸ்ரேலின் ராணுவத்தால் கா... மேலும் பார்க்க