செய்திகள் :

India - Pakistan: `போரில் யாரும் வெல்ல மாட்டார்கள்; நிறுத்துங்கள்’ - நேபாளத்தில் நடந்த போராட்டம்

post image

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் இரு தரப்பிலிருந்தும் இழப்புகளும் தாக்குதல்களும் தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் இரு நாடுகளும் சூழலை கட்டுக்குள் கொண்டுவர கோரிக்கை முன்வைக்கின்றன.

இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் தூதரகங்களுக்கு வெளியே மனித உரிமைகள் குழு 'இரு நாடுகளுக்கும் நடந்து வரும் பதட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஊக்குவிக்க வேண்டும்" என்றக் கோரிக்கையுடன் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.

Nepal Rights Group Protests
Nepal Rights Group Protests

மனித உரிமைகள் மற்றும் அமைதி சங்கத் தலைவர் கிருஷ்ணா பஹாடி மற்றும் HURPES தலைவர் ரேணுகா பவுடெல் தலைமையில் இந்த போராட்டங்கள் நடந்தது. இந்தப் போராட்டத்தின் போது, "போரில் யாரும் வெல்ல மாட்டார்கள், மனிதகுலம் மட்டுமே தோற்கடிக்கப்படும்"

"பயங்கரவாதம் எல்லா நேரங்களிலும் வருந்தத்தக்கது" - "அமைதியில் அனைவரும் வெற்றி பெறுவார்கள்" - "தெற்காசியாவை போர் இல்லாத மண்டலமாக மாற்றுவோம்" போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை போராட்டக்கரர்கள் ஏந்திச் சென்றனர்.

மற்றொரு புறம் இரு நாடுகளையும் கண்டிக்கும் வகையிலான பதாகைகளும் இருந்தன. உதாரணமாக "சிந்து நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவது எவ்வளவு சட்டபூர்வமானது?" - "பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கியவர்களை பாகிஸ்தான் ஏன் பாதுகாத்தது?"

"பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் ஏன் பயங்கரவாதத்தை வளர்க்கிறது?" போன்ற வாசகங்களும் இருந்தன. மேலும், இந்தப் போராட்டத்துக்கு இடையே இந்தியா அரசுக்கும் - பாகிஸ்தான் அரசுக்குமான கடிதங்கள் காத்மண்டுவில் இருக்கும் இந்திய தூதரகத்திடம் வழங்கியது.

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதிகளை ஒழிக்கும் அரசு... ‘ஆன்லைன் பயங்கரவாதி’களைக் கண்டுகொள்ளாதது ஏனோ?

‘இலவச பங்கு முதலீட்டுப் பயிற்சி, இலவச டிரேடிங் டிப்ஸ், குறுகிய காலத்தில் அசாத்தியமான வருமானம், பிரபலங்கள் பேசுவதுபோல போலி வீடியோ, போலி சமூக வலைதளப் பக்கங்கள் எனப் பற்பல ரூபங்களில் முதலீட்டாளர்களைக் கு... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கு போலி மதுபானங்கள் தயாராகின்றன!’ – அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக

அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ``தமிழக அரசால் விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் மதுபானங்கள் புதுச்சேரி மாநிலத்தில் போலியாக தயாரிக்கப்படுகிறது. அதன்பிற... மேலும் பார்க்க

'அண்ணன் சீமானைவிட சில விஷயங்களில் வேல்முருகன் ஒருபடி மேல்!' - சொல்கிறார் நாதக நத்தம் சிவசங்கரன்!

நாம் தமிழர் கட்சி தொடங்கியதிலிருந்தே, அதில் பயணிக்கும் நத்தம் சிவசங்கரன் தற்போது மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வகிக்கிறார். ஆனால் அண்மைகாலமாக கட்சி நடவடிக்கைகளிலிருந்து அவர் ஒதுங்கியிருப்பத... மேலும் பார்க்க

'தவெகவும் பாஜகவும் ஒண்ணு..!' - திமுகவில் இணைந்த கோவை வைஷ்ணவி

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து, சமூகவலைதளங்களில் ஆக்டிவாக வலம் வந்தார். சமூகவலைதளங்களில் விஜய் மற்றும் தவெகவுக்கு ஆதரவாக பேட்டியளித்து பிரபல... மேலும் பார்க்க

``போலீஸ் சிரிக்கிறாங்க... தெய்வச்செயல் மேல நடவடிக்கை எடுக்கணும்’’ - ஆளுநர் மாளிகை முன்பு அழுத மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தி.மு.க இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி அளித்த வன்கொடுமை விவகாரத்தை நேற்று தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். மேலு... மேலும் பார்க்க

Gaza: தரை வழி உதவியைத் தடுக்கும் இஸ்ரேல்; வான் வழியே உதவியதா சீனா... வைரல் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்துவரும் போரில் காஸா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 2, 2025 அன்று காஸாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் நிறுத்தியது. அதனால் தற்போது இஸ்ரேலின் ராணுவத்தால் கா... மேலும் பார்க்க