'3 இடியட்ஸ்' படத்தின் 2-ம் பாகம் உருவாகிறதா? - ஆமீர் கான் சொன்ன தகவல் என்ன?
IPL 2026: "உன்னால் முடியாது என்று என்னிடம் யாராவது சொன்னால்..." - விமர்சனங்கள் பற்றி ஸ்ரேயாஸ்
நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
களத்தில் அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் Jio Hotstar-க்கு பேட்டி அளித்திருக்கும் அவர் தன் மீதான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பது குறித்து பேசியிருக்கிறார்.
"என்னைச் சுற்றியுள்ளவர்கள், 'இந்தச் சூழலில் உன்னால் இதைச் செய்ய முடியாது, இது இயலாத காரியம்' என்று சொல்லும்போது, அதைக் கேட்பது எனக்குப் பிடிக்காது.

அவர்கள் சொன்னது தவறு என்று நிரூபித்தே தீர வேண்டும் என்று நினைப்பேன். என்னை நானே அதிகமாக வருத்திக்கொண்டு, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மீண்டு வந்து அவர்கள் கூறுவது தவறென நிரூபிக்க முயற்சிப்பேன்.
குறிப்பாக காயங்களுக்குப் பிறகு, அந்த எண்ணமே என்னை முன்னோக்கி நகர்த்துகிறது. எனக்கு முதுகில் காயம் ஏற்பட்டபோது, 'இனி இவனால் பழையபடி விளையாட முடியாது' என்று சிலர் சொன்னார்கள். 'ஏன் என்னால் முடியாது?' என்று நான் எனக்கே கேள்வி கேட்டுக்கொண்டேன்.
காயத்திற்குப் பிறகு உங்கள் மனநிலையை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். எதைக் கவனிக்க வேண்டும், எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
அதேபோல என்னால் 'ஷார்ட்-பால்' பிரச்னையைச் சரிசெய்யவே முடியாது என்று மக்கள் சொன்னார்கள். அது என்னைத் தூண்டிவிட்டது. சிறப்பாக விளையாடி அவர்கள் சொன்னது தவறு என நிரூபிக்க விரும்பினேன், அதற்காகக் கடுமையாக உழைத்தேன்.

முன்பெல்லாம், அத்தகைய பந்துகளில் ஒரு ரன் எடுக்கவோ அல்லது பந்தைக் கீழே தட்டிவிடவோதான் பார்ப்பேன், ஆனால் இப்போது என் மனநிலை மாறிவிட்டது. அந்தப் பந்து நான் அடிக்கும் தூரத்தில் வந்தால், அதை சிக்ஸருக்குப் பறக்கவிடுவேன்.
நான் பிரவின் ஆம்ரேயுடன் பயிற்சி செய்கிறேன். சிறுவயதிலிருந்தே அவருடன் இருக்கிறேன். அபிஷேக் நாயர் போன்ற பயிற்சியாளர்களுடனும் பேசி ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்வேன்" என்று பேசியிருக்கிறார்.



















