செய்திகள் :

JACTO-GEO: "பணிநிரந்தரம் செய்தால் பாராட்டு; ஏமாற்றினால் போராட்டம்" - பகுதிநேர ஆசிரியர்கள் எச்சரிக்கை

post image

"திமுக அளித்த வாக்குறுதியின்படி வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதிக்குள் முதல்வர் அறிவித்தால் பாராட்டுவோம். இந்த முறையும் ஏமாற்றினால் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களும் கலந்துகொள்வோம்" என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

திமுக வாக்குறுதி
திமுக வாக்குறுதி

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்

"2021 சட்டமன்றத் தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் என்ற வாக்குறுதியைக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் இதுவரை நிறைவேற்றவில்லை.

ஆட்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் சமூக நீதி பேசுகின்ற திராவிட மாடல் ஆட்சியில் கண்ணீரோடு போராடி வருகின்றார்கள்.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் ஜனவரி 6 ஆம் தேதிக்குள் முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்மொழி தெரிவித்துள்ளார்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை திமுக அளித்த வாக்குறுதியின்படி முதல்வர் வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதிக்குள் அறிவித்தால் பாராட்டுவோம். இந்த முறையும் ஏமாற்றினால் ஜாக்டோஜியோ போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களும் கலந்து கொள்வோம்.

பகுதிநேர ஆசிரியர்கள் இந்த 15 ஆண்டுகளாகத் தற்காலிகமாக வேலை செய்கின்ற நிலையில் மே மாத ஊதியம், பொங்கல் போனஸ், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, பணிக்காலத்தில் இறந்த ஆசிரியர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் உள்ளிட்ட சலுகைகளை அரசு வழங்கவில்லை.

இந்த நிலையில் இந்தக் கால விலைவாசி உயர்வில் தற்போதைய ரூபாய் 12,500 சம்பளத்தில் குடும்பங்களின் அடிப்படை தேவைகளைச் செய்துகொள்ள முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.

காலமுறை சம்பளம் வழங்கினால் அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். எஞ்சிய காலத்தில் நல்லபடியாக வாழ முடியும். எனவே முதல்வர் ஸ்டாலின் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்களின் கஷ்டங்களைப் பார்த்து திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

இதை புத்தாண்டு அறிவிப்பாக இனிப்பு செய்தியாக ஒரு விடியலாக முதல்வர் அறிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்... மேலும் பார்க்க

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டு... மேலும் பார்க்க

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மா... மேலும் பார்க்க

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின... மேலும் பார்க்க

கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவு... மேலும் பார்க்க