செய்திகள் :

Karuppu: "இளையராஜாவைக் காயப்படுத்தும் எண்ணம் சிறிதளவும் இல்லை" - படக்குழு வருத்தம்; பின்னணி என்ன?

post image

சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' படத்திற்குத் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் திரிஷா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சாய் அபயங்கர் இசையில் வந்திருக்கும் இப்படத்தின் பாடல்களும் திரையரங்குகளைக் கொண்டாட்டமிக்கதாக மாற்றியிருக்கின்றன.

கருப்பு - சூர்யா
கருப்பு - சூர்யா

இப்படத்தின் ஒரு காட்சியில் 'அலை ஓசை' படத்தில் வரும் 'போராடடா' பாடலைப் பயன்படுத்தியிருப்பார்கள். அதன் பிறகு அக்காட்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பற்றிய ஒரு வசனமும் இடம்பெற்றிருக்கும்.

அந்த வசனத்தை வைத்ததற்காக படக்குழுவினரை, ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளப் பக்கங்களில் விமர்சித்தனர். இந்நிலையில் அதற்கு வருத்தம் தெரிவித்துப் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாகப் பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "'கருப்பு' திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா ஐயாவின் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியைக் கடத்தும் நோக்கத்திற்காகக் கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு.

50 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்குச் சிறிதளவும் இல்லை.

பட நிறுவனம் வெளியிட்ட அறிக்கை
பட நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட காட்சியினால், தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ, இசைஞானியின் ரசிகர்களோ, பிறரோ, மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

'25 வருடத்திற்குப் பின் அபிராமியுடன் நடித்திருக்கிறேன், முதன்முதலில் அவரை சந்தித்தபோது.!'- அர்ஜுன்

சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் `ப்ளாஸ்ட்'. இப்படம் மே 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (மே.1... மேலும் பார்க்க

கருப்பு: ``அந்த நேரத்தில் வீடியோ எடுக்காதீர்கள்" - ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரமாண்ட வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அ... மேலும் பார்க்க

கே.ராஜன்: 'சினிமாவின் போக்கு குறித்து துணிச்சலுடன் கருத்துகளை வெளிப்படுத்தியவர்'- முதல்வர் இரங்கல்

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் மறைவிற்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்திருக்கிறார். தயாரிப்பாளர் கே.ராஜன்அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த தயாரிப... மேலும் பார்க்க

"திரையரங்குகளில் சாமியாடுபவர்களுக்கு அன்போடு உதவுங்கள்!" - ஆர்.ஜே. பாலாஜி வேண்டுகோள்!

சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு வசூல் ரீதியாகப் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா ரவி ஆகியோர் முக்கியக் கத... மேலும் பார்க்க

காமெடி நடிகர் முத்துக்காளையின் மனைவி காலமானார் - சொந்த ஊரில் இறுதிச்சடங்கு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) இன்று காலை 9 மணிக்கு காலமானார்.காமெடி நடிகராக நமக்கு நன்கு பரிச்சயமான முத்துக்காளை பட்டப்படிப்புகளை முடித்து பலருக்கு... மேலும் பார்க்க

"அப்பா கொஞ்ச நாட்களாகவே மன உளைச்சலில் இருந்தார்!" - தயாரிப்பாளர் கே ராஜனின் மகன்!

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் காலமானார். 85 வயதான கே. ராஜன். 'பிரம்மசாரிகள்', 'நினைக்காத நாளில்லை' போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவர்.Producer K Rajan with his sonதயாரிப்பு மட்டுமின்றி,... மேலும் பார்க்க