செய்திகள் :

Madhav Gadgil: மேற்கு தொடர்ச்சி மலை இருக்கும்வரை இவர் பெயர் ஒலிக்கும் - மறைந்தார் சூழலியல் பேரறிஞர்

post image

இந்திய துணைக்கண்டத்தின் பெருங்கொடை, பேரதியசம், இயற்கையின் புதையல் என உயிரியலாளர்களாலும் இயற்கையியலாளர்களாலும் போற்றப்படுகிறது மேற்கு தொடர்ச்சி மலை. மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகளால் சிதைக்கப்பட்டு வரும் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க பல ஆய்வாளர்களை காலம் கொடையாக வழங்கி வருகிறது. அப்படி வழங்கப்பட்ட முன்னோடி ஆய்வாளர்களில் ஒருவர் தான் இந்திய சூழலியலின் தலைச் சிறந்த பேரறிஞர் பேராசிரியர் மாதவ் காட்கில்.( Madhav Gadgil)

Rep image AI

1942- ம் ஆண்டு புனேவில் பிறந்த இவர், புனே பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டம், மும்பை பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் ஆய்வாளர் பட்டம் பெற்றார்.

1973 முதல் 2004 ஆம் ஆண்டு வரை பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றியதுடன் சூழலியலை அறிவியல்பூர்வமாக அணுகி அதற்கான ஆய்வு மையத்தையும் நிறுவினார். மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பாக அரசு அமைத்த நிபுணர்கள் குழுவின் தலைவராக பொறுப்பு வகித்து அசாத்தியமான அறிக்கையை உருவாக்கினார்.

மாதவ் காட்கில் அறிக்கை எனப்படும் அந்த அறிக்கையை அரசு ஏற்க மறுத்ததன் மூலம் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தாலும் சூழலில் பாதுகாப்பு உலகில் அந்த அறிக்கை பொக்கிஷமாக போற்றப்படுகிறது.

அந்த அறிக்கை மூலம் உலக அளவில் சூழலியல் பாதுகாப்பு முன்னோடியாக உயர்ந்தார். இந்திய அரசின் பத்மஶ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை வழங்கி சிறப்பிக்கப்பட்டதுடன் சூழலியல் உலகின் மிக உயரிய விருதான 'சேம்பியன் ஆஃப் தி எர்த் ' எனப்படும் புவிக்கோள வாகையர் என்கிற உயரிய விருதை 2024 - ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அமைப்பு மூலம் இவருக்கு வழங்கப்பட்டது

மாதவ் காட்கில்

இவர் வயது மூப்பு காரணமாக புனேவில் நேற்று ( 07-01-2026) இயற்கை எய்தினார். அவரின் மறைவுக்கு ஒட்டுமொத்த சூழலியல் உலகும் நன்றி கலந்த பிரியாவிடையை வழங்கிக் கொண்டிருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலை இருக்கும் வரை இவரின் பெயர் ஒலிக்கும் வகையில் அபாரமான அறிவியல் புரிதலை எளிய மக்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறார் சூழலியல் பேரறிஞர் மாதவ் காட்கில்.!

பாழாகும் பொருநை ஆறு; வரி செலுத்தாத பெரு நிறுவனங்கள்... கடிவாளம் போடப்படுமா?! | Thamirabarai River

பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு, பொதிகை மலையில் தோன்றிப் பாய்ந்து பல கிளை ஆறுகளைக் கொண்டது. சில மாதங்களுக்கு முன் சில தொழில் நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருக்கும் நீரைப் பயன்படுத்திக்கொண்டு... மேலும் பார்க்க

`பிளாஸ்டிக்குக்கு நோ; பப்பாளி தண்டில் ஸ்ட்ரா'- இளநீர் வியாபாரியின் Eco Friendly முன்னெடுப்பு

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர்‌ இளங்கலை பட்டதாரியான செந்தில். கடந்த பன்னிரெண்டு வருடங்களாக இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.இதில் கடந்த ஏழு வருடங்களாக இயற... மேலும் பார்க்க

மாதவ் காட்கில்: ``வேள்பாரிக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலையை அதிகம் நேசித்தவர்"- பூவுலகின் நண்பர்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த சிந்தனையைத் தூண்டும் வகையில் அறிக்கை தயாரித்த மூத்த சூழலியல் அறிஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான மாதவ் காட்கில் (83) நேற்று இரவு (7.1.2026) புனேயில் கால... மேலும் பார்க்க

ஊட்டி: காயத்துடன் உயிருக்குப் போராடிய இளம் ஆண் புலி; காப்பாற்றாதது ஏன்? - வனத்துறை விளக்கம்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள போர்த்தியாடா பகுதி தனியார் தேயிலைத் தோட்டத்தில் காயத்துடன் புலி ஒன்று நடமாடி வருவதை உள்ளூர் மக்கள் கடந்த வாரம் பார்த்துள்ளனர். செல்போன்களில் பதிவு செய்து வனத்துறைய... மேலும் பார்க்க

'மலை ரயில் பாதை முதல் மின் கம்பங்கள் வரை சேதம்' - ஓர் இரவில் குன்னூரைப் புரட்டிப்போட்ட கனமழை |Photos

குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு கு... மேலும் பார்க்க

கோவை: ரூ. 925 கோடி அபராதம்; சட்டவிரோதமாக மண்ணைச் சுரண்டிய செங்கல் சூளைகள் | Photo Album

ரூ.9,600 கோடி அபராதத்துக்கு பதிலாக ரூ.925 கோடி அபராதம்..?செங்கல் சூளைகள்மண்ணை சுரண்டிய செங்கல் சூளைகள்மண்ணை சுரண்டிய செங்கல் சூளைகள்செங்கல் சூளைகள்செங்கல் சூளைகள்செங்கல் சூளைகள்மண்ணை சுரண்டிய செங்கல் ... மேலும் பார்க்க