செய்திகள் :

ஊட்டி: ’இதுக்கு முன்பு இப்படி கேள்விபட்டதே இல்ல’ –யானை நடமாட்டத்தால் ஆச்சர்யத்தில் மக்கள்!

post image

200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள்‌ பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பூர்வீக சோலை மரக்காடுகளையும் புல்வெளிகளையும் அழித்து தேயிலை, காபி பயிர்களை அதிகளவில் பயிரிட்டனர். கண்மூடித்தனமான காடழிப்பு மற்றும் வனவிலங்கு வேட்டையின் காரணமாக பல்வேறு உயிரினங்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.

முதல் முறையாக தென்பட்ட யானை

தற்போதைய வன பாதுகாப்பு சட்டங்கள் காரணமாக வனவிலங்குகளின் எண்ணிக்கை மெல்ல மீண்டெழுந்து வருகின்றன. அதேவேளையில் வனவிலங்குகளின் வாழிட, வழித்தட சிதைப்பு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஊட்டி அருகில் உள்ள நுந்தளா பகுதியில் யானை ஒன்று நடமாடி வருவதை மக்கள் நேற்று கண்டுள்ளனர். யானை நடமாட்டம் குறித்த கடந்த 200 ஆண்டு தரவுகளின் படி இந்த பகுதிக்கு யானை வந்திருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

முதல் முறையாக தென்பட்ட யானை

இது குறித்து கிராம மக்கள், " பல தலைமுறைகளாக இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறோம். சுற்றிலும் தேயிலை மற்றும் மலை காய்கறி தோட்டங்கள் உள்ளன. காட்டு மாடுகளின் நடமாட்டம் தான் அதிகம் இருந்தது. ஆனால், தற்போது முதல் முறையாக ஆண் யானை ஒன்று வந்திருக்கிறது. எங்கள் கிராமத்திற்கு இதற்கு முன்பாக யானை வந்ததாக முன்னோர்கள் சொன்னதாக கேள்விப்பட்டதில்லை" என்றனர்.

தென்காசி: அழிவின் விளிம்பில் குள்ளநரிகள்; பாதுகாக்க முயற்சி எடுக்கும் வனத்துறை!

சூழலியல் சமநிலையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் குள்ளநரிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வரும் நிலையில், தென்காசி வனக்கோட்டம் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.அழிவின் விளிம்... மேலும் பார்க்க

தார் பாலைவனத்தின் அபாயகரமான மாற்றம்: பசுமையை சுமக்கும் மணலின் சாபக் கதை!

பாலைவனம் என்றாலே சுட்டெரிக்கும் சூரியன், திசையெங்கும் மணல், தகிக்கும் தாகம், அவ்வப்போது வந்து செல்லும் மணற்புயல், பயணிக்க ஒட்டகம் இப்படித்தான் நம் கண்களில் காட்சி விரியும். ஆனால், கொஞ்சம் கற்பனை செய்த... மேலும் பார்க்க

ஊட்டி: உறைபனியைக் காண குவியும் சுற்றுலாப் பயணிகள் | Photo Album

போக்குவரத்து நெரிசல்உறை பனி உறை பனிஉறை பனி உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி உறை பனி உறை பனி உறை பனி உறை பனி உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி உறை பனி உ... மேலும் பார்க்க

ஊட்டி: யானை - மனித எதிர்கொள்ளல்களைத் தடுக்க AI; "புதிய மைல்கல்" - வனத்துறை நம்பிக்கை

இந்திய அளவில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் முக்கிய இடத்தில் இருப்பது வேதனையான உண்மை.பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது பெரும்பாலான மழைக்காடுகள் அ... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தின் வரையறையால் ஆரவல்லி மலைத்தொடருக்கு ஆபத்தா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

இந்தியாவின் 'பச்சைக் கவசம்' என்று அழைக்கப்படுகிற ஆரவல்லி மலைத்தொடருக்கு ஆபத்து என்று சூழலியல் ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். என்ன பிரச்னை? 'குறிப்பிட்ட பகுதியில் 100 மீட்டர் மற்றும் அதற்குள் மே... மேலும் பார்க்க

வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கவலை!

உலகின் மிகப் பழமையான மலைத் தொடர்களில் ஒன்றான ஆரவல்லி, குஜராத் முதல் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி வரை பரவி, நிலத்தடி நீர் சேமிப்பு, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தல், பாலைவனமாக்கலைத் தடுத்தல் மற... மேலும் பார்க்க